கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Thursday, June 14, 2012

ல்கி வார இதழில் நல்ல இலக்கியக் கதைகளும், கட்டுரைகளும் வந்‌ததைப் போல அந்நாட்களில் ரசிக்கும் படியான நிறைய ஜோக்குகளும் வந்திருக்கின்றன. அந்தத் துணுக்குகளும், அவற்றுக்கு வரையப்பட்டிருந்த படங்களும் என்‌னை ரசித்துச் சிரிக்க வைத்தன. 1961ம் ஆண்டு கல்கி இதழ்களிலிருந்து தொகுத்திருக்கும் சில ஜோக்குகள் இங்கை நீங்கள் ரசிப்பதற்காக. பிடித்திருக்கிறதா சொல்லுங்கள். இன்னும் சில ஜோக்குகள் கத்தரித்து வைத்திருக்கிறேன். பின்னர் தருகிறேன்.








18 comments:

  1. மேச்சல் நிலம் கண்டேன் இன்று-நானும்
    மேயவந்தேன் நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  2. நகைச்சுவைகள் என்பது
    காலத்தை வென்றது
    எவ்வளவு நிதர்சனம்...
    " சாரி சொன்ன பிறகும் ஏன் வலிக்குற"
    என்று கேட்பதெல்லாம் திரு.தங்கவேல்
    அவர்களின் நகைச்சுவையை பார்ப்பது போல இருந்தது.
    "அந்த மனைவியின் புத்திசாலித்தனத்தைப் பாருங்கள்"
    இசைக்கருவியை என்னமா பயன்படுத்துறாங்க..
    ஹா ஹா ஹா ஹா..

    சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்தேன் நண்பரே..

    ReplyDelete
  3. @ புலவர் சா இராமாநுசம்...
    என்னுடன் மேய்ச்சல் மைதானத்தில் மேய்ந்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

    @ மகேந்திரன்...
    நிஜம்தான். தங்கவேலுவின் நகைச்சுவை என்றுமே உயர்தரமானது. இந்த நகைச்சுவைகளைக் கண்டு சிரித்தும் சிந்தித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி மகேன்!

    ReplyDelete
  4. கட்டை விரல் துணுக்கு மிக மிக அருமை, விகடனின் பொக்கிஷம் போல வாத்தியாரின் மேய்ச்சல் மைதானமும் அருமை

    ReplyDelete
  5. அந்த மூன்றாவது நகைச்சுவை மிக அருமை. கல்கியில் 1960 க்கு முன் வந்த நகைச்சுவை துணுக்குகள் கிடைத்தால் வெளியிடவும்.

    ReplyDelete
  6. அந்தக் காலத்துக்கே போய் ரசிக்க முடிந்தது! சுதர்சன் ஜோக்ஸ் பார்த்து எத்தனை நாளாச்சு!

    ReplyDelete
  7. எல்லாமே நல்ல இருந்ததுங்க .

    ReplyDelete
  8. மேய்ச்சல் மைதானத்திற்கு வந்த
    இக்குதிரைக்கு நல்ல தீனி.....

    தொடரட்டும் சுவையான தீனி.... :)

    ReplyDelete
  9. பழையகால நகைச்சுவையாக இருந்தாலும் இன்றும் நகைக்ககூடியவையாகவே இருக்கிறது. அதுபோல மனைவிகள் அன்றும் இன்றும் என்றும் மாறுவதில்லை

    ReplyDelete
  10. பழையகால நகைச்சுவையாக இருந்தாலும் இன்றும் நகைக்ககூடியவையாகவே இருக்கிறது. அதுபோல மனைவிகள் அன்றும் இன்றும் என்றும் மாறுவதில்லை

    ReplyDelete
  11. அந்தக்கால நகைச்சுவைகளை அனைவரும் அறியத்தந்தமைக்கு நன்றி கணேஷ். கடவுளே வந்து வரம் தந்தாலும் தரலாம், ஆனால் பெண்ணுக்கு நல்ல வரன் அமைவது கடினம் என்பது எத்தனை நாசுக்காக சொல்லப்பட்டுள்ளது!

    ஒவ்வொன்றும் தரமான நகைச்சுவை. மிகவும் ரசித்தேன். நன்றி கணேஷ்.

    ReplyDelete
  12. @ சீனு...
    என் பொக்கிஷங்கள் பிடித்திருக்கிறதென்றால் நிறையத் தருகிறேன் சீனு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ Vigna...
    தங்களுக்கு என் இதய நன்றி.

    @ வே.நடனசபாபதி...
    அதற்கும் முன் வந்த ஜோக்குகளா? முயன்று பார்க்கிறேன். நன்றி நண்பரே.

    @ ஸ்ரீராம்...
    மலரும் நினைவுகளாய் நான் கத்தரித்த இந்தத் துணுக்குகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  13. @ ரிஷபன்...
    என்றும் நிறம் மாறாத ஜோக்குகளை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

    @ வெங்கட் நாகராஜ்...
    நீங்களும் என்னைப் போல் நிறைய மைதானங்களில் மேயும் குதிரைதானே... நல்ல தீனியைத் தொடர்ந்து தர முயல்கிறேன். மிக்க நன்றி.

    @ Avargal Unmaigal...
    மனைவியை கேலி செய்யும் ஜோக்குகள் அன்றே இருந்ததைக் கண்டு வியந்தே இங்கு பதிந்தேன். ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

    @ கீதமஞ்சரி...
    ஒவ்வொரு நகைச்சுவையையும் ரசித்தேன் என நீங்கள் சொன்னது மிகமிக மகிழ்வளிக்கிறது. என் இதயம் நிறை நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  14. கட்டை விரல் நகைச்சுவை அருமை. மற்ற நகைச்சுவைகளும் சிரிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி பாஷித்!

      Delete
  15. அனைத்தும் அருமை. ரசித்தேன்.

    ReplyDelete