கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, July 30, 2012


கண்ணே காஞ்சனா - 3 

சோக், கல்பனா இறந்தபின் சென்னையில் வாழப் பிடிக்காமல் எங்காவது சென்றுவிடலாம் என்று சென்ட்ரல் வருகிறான். அங்கே மீசை, தாடியுடன் தளர்ந்து போனவனாய் காட்சிதரும் அவனைப் பார்க்கும் காஞ்சனா, அவன் கண்ணில் படாமலிருக்க வேண்டி கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் ஏறிவிடுகிறாள். அது பம்பாய் செல்லும் ரயில். அசோக்கும் அதற்குத்தான் டிக்கெட் எடுத்திருந்ததால் வேறு பெட்டியில் இருக்கிறான். ரயிலில் காஞ்சனாவின் அருகில் அமர்ந்திருக்கும் அம்மாள் தன்‌ பெயர் சாரதா என்றும், பம்பாயில் சமூக சேவகி என்றும் அறிமுகமாகிறார். அவளுக்கு பம்பாயில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக ஆறுதலளிக்கிறார்.

பம்பாய் ரயி்ல் நிலையத்தில் அசோக், காஞ்சனாவைப் பார்த்துவிட்டுக் கூவியழைக்க, காதி‌லேயே விழாதவள் மாதிரி சாரதா அம்மாளுடன் போய்விடுகிறாள் அவள். பம்பாயிலேயே தங்கி அவளைத் தேடத் தீர்மானிக்கும் ‌அசோக், லாட்ஜ் ஒன்றில் தங்கி, அங்கேயே ஒரு வேலையையும் பார்த்துக் கொள்கிறான். காஞ்சனாவை அன்பாக பார்த்துக் கொள்ளும் சாரதாம்மாள், அவள் கருவைக் கலைக்கும்படி யோசனை கூற, காஞ்சனா அதை ஏற்க மறுக்கிறாள்.

அதன்பின் ஏழு மாதங்கள் ஓடிவிட, ஒருநாள் காலை சாரதாம்மாளின் அறையில் ஒரு ஆல்பத்தைப் பார்க்கிறாள். பல அழகிய பெண்களின் நிர்வாணப் படங்கள் ஒட்டப்பட்டு, அதன் கீழ் தொகையும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். அந்த ஆல்பத்தில் தன்னுடைய நிர்வாணப் படத்தையும் கண்டு திடுக்கிடுகிறாள். தலை மட்டுமே தன்னுடையது என்பதை அறிய முடிகிற காஞ்சனாவுக்கு, சாரதாம்மாள் உண்மையில் சமூக சேவகி இல்லை என்பதும், அந்தப் போர்வையில் வேறு தொழில் செய்வதும் அப்போதுதான் தெரிய வருகிறது. சாரதாம்மாவும், மற்றொருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டு இதை உறுதி செய்து கொள்கிறாள். தலைசுற்ற, மாடிப்படியிறங்கி தன் அறையினுள் நுழைபவளை மயக்கம் ஆட்கொள்ள, கீழே சரிகிறாள். இடுப்பு வலி ஏற்படுகிறது.

ரவிந்த் வீட்டுக்கு வந்து உடை மாற்றும் நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து எட்டுமாத கர்ப்பிணி ஒரு்த்திக்கு ஆபரேஷன் செய்ய வரும்படி அவசர அழைப்பு வருகிறது. அங்கே காஞ்சனாவைக் காணும் அவன் பேரதிர்ச்சி அடைகிறான். ஆனாலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியபடி ஆபரேஷன் செய்கிறான். குழந்தை இறந்தே பிறக்கிறது. அன்று மாலை மயக்கத்திலிருந்து கண் விழிக்‌கும் காஞ்சனாவின் விழிகள் ஒளியிழந்து விட்டிருக்கின்றன. தன்னால் பார்க்க இயலவில்லையே என்று அவள் கதறி அழுவது எதிரிலிருக்கும் அரவிந்தின் மனதைப் பிசைகிறது.

கர்ப்பம் கலைந்து கண்களை இழந்த காஞ்சனாவை தான் சொல்லும் தொழில் செய்து பிழைக்கும்படி சாரதாம்மாள் வற்புறுத்துகிறாள். காஞ்சனா அவளிடம் அன்பாகப் பழகும் ‘டாக்டரிடம்’ தன்னை சாரதாம்மாளிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறாள். டாக்டரிடம் தன் வாழ்க்கைக் கதையை ஒளிவுமறைவின்றிக் கூறுகிறாள். நடந்‌தவற்றை அப்போதுதான் அறியும் அரவிந்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அவளை தவறாக நினைத்ததற்காய் மன்னிப்புக் கேட்கிறான்.

காஞ்சனாவை இனி தான் பார்த்துக் கொள்வதாகவும், அனுப்ப முடியாதென்றும் சாரதாம்மாளை மிரட்டி அனுப்பி விடுகிறான். தான் அசோக்கைத் தேடி்க் கண்டுபிடித்து காஞ்சனாவை அவரிடம் ஒப்‌படைத்தாக காஞ்சனாவிடம் சொல்கிறான். ஒருநாள் நிகழ்ந்த தவறுக்காக அவருடன் வாழ்நாள் முழுதும் வாழ வேண்டுமா என காஞ்சனா எண்ணினாலும், கறைபட்ட தன்னை அரவிந்துக்குத் தருவதா என்ற தயக்கத்தில் சம்மதிக்கிறாள்.

டும் மழை பொழியும் நேரத்தில் ஒரு மரத்தடியில் மழைக்காக ஒதுங்கும் அசோக், குளிரில் தவிக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தன் கோட்டைப் போர்த்திவிட்டுப் போகிறான். மறுதினம் காலையில் செய்தித் தாள்களில் இடிவிழுந்து அசோக் என்ற வாலிபர் பலி என்றும், கோட்டிலிருந்த டைரி அடையாளம் காண உதவியது என்றும் செய்தி வந்திருப்பதைப் பார்க்கிறான் அசோக். தான் இறக்கவில்லை என்று ஸ்தாபித்து யாருக்கு என்ன பிரயோஜனம்? இறந்தவனாகவே இருந்துவிடலாம் என்றெண்ணி பேசாமலிருந்து விடுகிறான்.

அந்தச் செய்தியைப் படிக்கும் அரவிந்த், போலீஸ் ஸ்டேஷன் சென்று டைரியைப் பார்த்து இறந்தது அசோக்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறான். காஞ்சனாவிடம் அதைச் சொல்ல, அவள் கதறி அழுகிறாள். அதன்பின் அரவிந்த், அவள் மனதைத் தேற்றி மணந்து கொள்கிறான். அதன்பின் ஒரு மாதம் கழித்து, ஆபரேஷன் செய்து காஞ்சனாவுக்கு பார்வை வரவழைப்பதற்கு அமெரிக்க டாக்டர் ஒருவரைச் சந்திக்க காரில் இருவரும் செல்கையில் பார்த்துவிடும் அசோக் குறுக்கே வர, கார் சக்கரம் அவன் காலில் ஏறி விடுகிறது. நினைவிழக்கும் அவனை தன் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளித்து விட்டு அமெரிக்க டாக்டரை அரவிந்த் சந்திக்க, அவர் ஒரு வாரத்திற்குள் யாராவது கண்தானம் செய்தால் அவளுக்கு ஆபரேஷன் செய்வதாகவும், அதற்குமேல் இந்தியாவில் தங்க முடியாது என்றும் சொல்கிறார்.

ஸ்பத்திரியில் கண் விழிக்கும் அசோக்கை சந்திக்க டாக்டர் அரவிந்த் வர, அவனிடம் தன் பெயர் கண்ணன் என்று சொல்லி, பேச்சுக் கொடுத்து நடந்த எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்கிறான் அசோக். அன்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து கண்ணன் என்ற அந்த பேஷண்ட் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக போன் வருகிறது. 

அரவிந்துக்கு கடிதம் எழுதி வைத்திருக்கும் அசோக், அதில் தான் கல்பனாவிடம் காஞ்சனாவுக்கு வாழ்வு தருவதாக வாக்களித்ததையும், இப்போது வாழ்வு கிடைத்துவிட்ட நிலையில் கல்பனாவிடமே செல்வதாகவும், தன் கண்களை காஞ்சனாவுக்கு தருவதில் மனப்பூர்வ சம்மதம் என்றும் எழுதி கையெழுத்திட்டிருக்கிறான்.

பிறகென்ன...? காஞ்சனா கண்ணொளி பெறுகிறாள். அரவிந்த் அவளிடம் உனக்கு கண்ணொளி தந்து வாழ்வளித்தவர் என்று அசோக்கின் சட்டமிடப்பட்டு, மாலையிடப்பட்ட படத்தைக் காட்டுகிறான். அவள் கதறி அழ, புகைப்படத்தில் அசோக் சிரித்துக் கொண்டிருக்கிறான்.


கண்ணே காஞ்சனா - 3 

சோக், கல்பனா இறந்தபின் சென்னையில் வாழப் பிடிக்காமல் எங்காவது சென்றுவிடலாம் என்று சென்ட்ரல் வருகிறான். அங்கே மீசை, தாடியுடன் தளர்ந்து போனவனாய் காட்சிதரும் அவனைப் பார்க்கும் காஞ்சனா, அவன் கண்ணில் படாமலிருக்க வேண்டி கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் ஏறிவிடுகிறாள். அது பம்பாய் செல்லும் ரயில். அசோக்கும் அதற்குத்தான் டிக்கெட் எடுத்திருந்ததால் வேறு பெட்டியில் இருக்கிறான். ரயிலில் காஞ்சனாவின் அருகில் அமர்ந்திருக்கும் அம்மாள் தன்‌ பெயர் சாரதா என்றும், பம்பாயில் சமூக சேவகி என்றும் அறிமுகமாகிறார். அவளுக்கு பம்பாயில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக ஆறுதலளிக்கிறார்.

பம்பாய் ரயி்ல் நிலையத்தில் அசோக், காஞ்சனாவைப் பார்த்துவிட்டுக் கூவியழைக்க, காதி‌லேயே விழாதவள் மாதிரி சாரதா அம்மாளுடன் போய்விடுகிறாள் அவள். பம்பாயிலேயே தங்கி அவளைத் தேடத் தீர்மானிக்கும் ‌அசோக், லாட்ஜ் ஒன்றில் தங்கி, அங்கேயே ஒரு வேலையையும் பார்த்துக் கொள்கிறான். காஞ்சனாவை அன்பாக பார்த்துக் கொள்ளும் சாரதாம்மாள், அவள் கருவைக் கலைக்கும்படி யோசனை கூற, காஞ்சனா அதை ஏற்க மறுக்கிறாள்.

அதன்பின் ஏழு மாதங்கள் ஓடிவிட, ஒருநாள் காலை சாரதாம்மாளின் அறையில் ஒரு ஆல்பத்தைப் பார்க்கிறாள். பல அழகிய பெண்களின் நிர்வாணப் படங்கள் ஒட்டப்பட்டு, அதன் கீழ் தொகையும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். அந்த ஆல்பத்தில் தன்னுடைய நிர்வாணப் படத்தையும் கண்டு திடுக்கிடுகிறாள். தலை மட்டுமே தன்னுடையது என்பதை அறிய முடிகிற காஞ்சனாவுக்கு, சாரதாம்மாள் உண்மையில் சமூக சேவகி இல்லை என்பதும், அந்தப் போர்வையில் வேறு தொழில் செய்வதும் அப்போதுதான் தெரிய வருகிறது. சாரதாம்மாவும், மற்றொருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டு இதை உறுதி செய்து கொள்கிறாள். தலைசுற்ற, மாடிப்படியிறங்கி தன் அறையினுள் நுழைபவளை மயக்கம் ஆட்கொள்ள, கீழே சரிகிறாள். இடுப்பு வலி ஏற்படுகிறது.

ரவிந்த் வீட்டுக்கு வந்து உடை மாற்றும் நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து எட்டுமாத கர்ப்பிணி ஒரு்த்திக்கு ஆபரேஷன் செய்ய வரும்படி அவசர அழைப்பு வருகிறது. அங்கே காஞ்சனாவைக் காணும் அவன் பேரதிர்ச்சி அடைகிறான். ஆனாலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியபடி ஆபரேஷன் செய்கிறான். குழந்தை இறந்தே பிறக்கிறது. அன்று மாலை மயக்கத்திலிருந்து கண் விழிக்‌கும் காஞ்சனாவின் விழிகள் ஒளியிழந்து விட்டிருக்கின்றன. தன்னால் பார்க்க இயலவில்லையே என்று அவள் கதறி அழுவது எதிரிலிருக்கும் அரவிந்தின் மனதைப் பிசைகிறது.

கர்ப்பம் கலைந்து கண்களை இழந்த காஞ்சனாவை தான் சொல்லும் தொழில் செய்து பிழைக்கும்படி சாரதாம்மாள் வற்புறுத்துகிறாள். காஞ்சனா அவளிடம் அன்பாகப் பழகும் ‘டாக்டரிடம்’ தன்னை சாரதாம்மாளிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறாள். டாக்டரிடம் தன் வாழ்க்கைக் கதையை ஒளிவுமறைவின்றிக் கூறுகிறாள். நடந்‌தவற்றை அப்போதுதான் அறியும் அரவிந்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அவளை தவறாக நினைத்ததற்காய் மன்னிப்புக் கேட்கிறான்.

காஞ்சனாவை இனி தான் பார்த்துக் கொள்வதாகவும், அனுப்ப முடியாதென்றும் சாரதாம்மாளை மிரட்டி அனுப்பி விடுகிறான். தான் அசோக்கைத் தேடி்க் கண்டுபிடித்து காஞ்சனாவை அவரிடம் ஒப்‌படைத்தாக காஞ்சனாவிடம் சொல்கிறான். ஒருநாள் நிகழ்ந்த தவறுக்காக அவருடன் வாழ்நாள் முழுதும் வாழ வேண்டுமா என காஞ்சனா எண்ணினாலும், கறைபட்ட தன்னை அரவிந்துக்குத் தருவதா என்ற தயக்கத்தில் சம்மதிக்கிறாள்.

டும் மழை பொழியும் நேரத்தில் ஒரு மரத்தடியில் மழைக்காக ஒதுங்கும் அசோக், குளிரில் தவிக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தன் கோட்டைப் போர்த்திவிட்டுப் போகிறான். மறுதினம் காலையில் செய்தித் தாள்களில் இடிவிழுந்து அசோக் என்ற வாலிபர் பலி என்றும், கோட்டிலிருந்த டைரி அடையாளம் காண உதவியது என்றும் செய்தி வந்திருப்பதைப் பார்க்கிறான் அசோக். தான் இறக்கவில்லை என்று ஸ்தாபித்து யாருக்கு என்ன பிரயோஜனம்? இறந்தவனாகவே இருந்துவிடலாம் என்றெண்ணி பேசாமலிருந்து விடுகிறான்.

அந்தச் செய்தியைப் படிக்கும் அரவிந்த், போலீஸ் ஸ்டேஷன் சென்று டைரியைப் பார்த்து இறந்தது அசோக்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறான். காஞ்சனாவிடம் அதைச் சொல்ல, அவள் கதறி அழுகிறாள். அதன்பின் அரவிந்த், அவள் மனதைத் தேற்றி மணந்து கொள்கிறான். அதன்பின் ஒரு மாதம் கழித்து, ஆபரேஷன் செய்து காஞ்சனாவுக்கு பார்வை வரவழைப்பதற்கு அமெரிக்க டாக்டர் ஒருவரைச் சந்திக்க காரில் இருவரும் செல்கையில் பார்த்துவிடும் அசோக் குறுக்கே வர, கார் சக்கரம் அவன் காலில் ஏறி விடுகிறது. நினைவிழக்கும் அவனை தன் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளித்து விட்டு அமெரிக்க டாக்டரை அரவிந்த் சந்திக்க, அவர் ஒரு வாரத்திற்குள் யாராவது கண்தானம் செய்தால் அவளுக்கு ஆபரேஷன் செய்வதாகவும், அதற்குமேல் இந்தியாவில் தங்க முடியாது என்றும் சொல்கிறார்.

ஸ்பத்திரியில் கண் விழிக்கும் அசோக்கை சந்திக்க டாக்டர் அரவிந்த் வர, அவனிடம் தன் பெயர் கண்ணன் என்று சொல்லி, பேச்சுக் கொடுத்து நடந்த எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்கிறான் அசோக். அன்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து கண்ணன் என்ற அந்த பேஷண்ட் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக போன் வருகிறது. 

அரவிந்துக்கு கடிதம் எழுதி வைத்திருக்கும் அசோக், அதில் தான் கல்பனாவிடம் காஞ்சனாவுக்கு வாழ்வு தருவதாக வாக்களித்ததையும், இப்போது வாழ்வு கிடைத்துவிட்ட நிலையில் கல்பனாவிடமே செல்வதாகவும், தன் கண்களை காஞ்சனாவுக்கு தருவதில் மனப்பூர்வ சம்மதம் என்றும் எழுதி கையெழுத்திட்டிருக்கிறான்.

பிறகென்ன...? காஞ்சனா கண்ணொளி பெறுகிறாள். அரவிந்த் அவளிடம் உனக்கு கண்ணொளி தந்து வாழ்வளித்தவர் என்று அசோக்கின் சட்டமிடப்பட்டு, மாலையிடப்பட்ட படத்தைக் காட்டுகிறான். அவள் கதறி அழ, புகைப்படத்தில் அசோக் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

Friday, July 27, 2012


கண்ணே காஞ்சனா-2
 
ந்த ஆண்டின் முடிவில் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி அரவிந்துக்கு முடிந்துவிட, ஓராண்டுக்குள் சென்னைக்கே வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக காஞ்சனாவிடம் கூறி விடைபெற்றுச் செல்கிறான். காஞ்சனா விடுமுறைக்கு ஊருக்குச் சென்றுவிட, உடல்நலம் குன்றும் அசோக்கிற்கு கல்பனா செய்யும் பணிவிடையில் அவன் நெகிழ்கிறான். காஞ்சனா-கல்பனா பிறந்தநாளின் போது நாடகத்துக்குச் செல்ல வேண்டுமென்று காஞ்சனாவும் கல்பனாவும் சொல்ல, நாடகம் என்றாலே பிடிக்காத அசோக் பீச் என்க, சீட்டெடுத்துப் பார்க்க முடிவாக, மூன்று சீட்டுகளிலும் பீச் என்று எழுதி ஏமாற்றி அவர்களை பீச்சுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே வைத்துத்ன ட்ரிக்கை சொல்லி அவன் சிரிக்க, அவனை ஏமாற்ற முடிவு செய்யும் காஞ்சனா மறுதினம் கல்பனாவைப் போல் உடையணிந்து அவனுக்கு காப்பி எடுத்துச் செல்ல, முத்தம் கேட்டு அவள் கைபிடித்து இழுக்கிறான் அவன். உண்மையைச் சொல்லி அவன் ஏமாந்து விட்டதை ரசித்து கைகொட்டிச் சிரிக்கிறாள் காஞ்சனா. இதைவிடப் பெரிதாக வேறொரு நாள் அவன் ஏமாறுவான் என்று சவால் விடுகிறாள்.

ந்த விளையாட்டுகள் ஒருதினம் விபரீதமாகிறது. காஞ்சனாவுக்கு ஒருநாள் தாளமுடியாத தலைவலிவர, கல்லூரியிலிருந்து சீக்கிரமே வீடு வருகிறாள். கல்பனா கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட, முகம் கழுவி வரும் காஞ்சனா, தன் அறையில் வைத்திருக்கும் தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்து மாத்திரை எடுத்து விழுங்குகிறாள்.  தன் அறையில் துவைக்கப் போட்ட சேலைகள் வராததால், கல்பனாவின் அறைக்குப் போய் அவள் சேலை ஒன்றைக் கட்டிக் கொள்கிறாள். அப்போது மழை பலமாகப் பெய்ய, சாரல் அடிக்கிறது. ஜன்னல் கதவுகளை ஒவ்வொன்றாகச் சாத்திவிட்டு வரும் அவளை தூக்க மயக்கம் ஆட்கொள்ள, நடக்க முடியாமல் கட்டிலில் விழுந்து மயங்கி விடுகிறாள்.

தியத்திற்கு மேல் வேலை இல்லாததால் நண்பன் ஒருவன் அழைப்பின் பேரில் சூடான காட்சிகள் கொண்ட ஒரு இந்திப் படம் பார்த்து விட்டு நல்ல ‘மூடில்’ வீட்டுக்கு வருகிறான். கட்டிலில் கல்பனா படுத்திருக்கும் கோலம் காமத்தை விசிறிவிட, அவளை அணைக்கிறான். தூக்க மயக்கத்திலும் விழித்துப் பார்க்கும் காஞ்சனா, அசோக்கைப் பார்த்து உதற நினைத்தாலும், பேச நினைத்தாலும் மிக பலவீனமாக இருப்பதால் எடுபடவில்லை. அந்த நேரத்தில் மின்சாரமும் போய்விட, கூடல் நிகழ்ந்து விடுகிறது. மீண்டும் மின்சாரம் வந்தபோது கட்டிலில் படுத்திருக்கும் மனைவியின் ஆடையற்ற உடலை ரசிக்கிறான் அசோக்- அவள் அதுவரையில் வெளிச்சத்தில் பார்க்க அனுமதித்தில்லை ஆதலால். அப்போதுதான் அந்த மச்சங்கள் அவன் கண்ணில்பட, நடந்ததை அ‌வை விளக்க, இடிவிழுந்தது போல அதிர்ச்சிக்குள்ளாகிறான். இனனது செய்வதென்று அறியாமல் காரை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் ஓட்டிச் செல்கிறான்.

ல்பனா மழை ஓயும் வரை காத்திருந்து கோயிலிலிருந்து திரும்பிவர, வீட்டில் யாருமின்றி மயான அமைதியில் இருக்கிறது. தங்கள் அறை கட்டிலின் மீது மல்லிகைப் பூக்கள் கசங்கிக் கிடப்பதையும், ஒரு கடிதத்தையும் பார்க்கிறாள். தான் கறைபட்டு விட்டதாகவும், காரணமானவன் குற்றவாளி இல்லை என்றும் தான் இனி வரமாட்டேன் என்றும் காஞ்சனா எழுதிச் சென்றிருக்கிறாள். இரண்டையும் இரண்டையும் கூட்டிப் பார்க்கும் கல்பனாவால் அசோக்கை நினைத்தும் பார்க்க இயலாமல் வேரற்ற மரம் போல மயங்கிச் சரிகிறாள். ஊரெல்லாம் சுற்றியலைந்த அசோக் சற்று மனதை தேற்றிக் கொண்டு வீடு திரும்ப, கல்பனா கடிதத்துடன் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கிறான். அவள் மயக்கத்தை தெளிவிக்க, நடந்ததை சொல்லி அழுகிறாள். அநியாயத்துக்கு நல்லவனான அசோக்கும், நடந்த விஷயத்தை அவளிடம் சொல்லி, தானே குற்றவாளி என்பதையும் ஒப்புக் கொள்கிறான்.

காஞ்சனாவைத் தேடியலைந்தும் அசோக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்பனா அவனை மன்னித்து விட, குற்ற உணர்ச்சி கொள்கிறான் அவன். காஞ்சனா காணாமல் போய்விட்டாள், காதல் காரணமாக ஓடியிருப்பாள் என்று பெற்றோரிடம் (கணவனுக்காக பொய்) சொல்லி, பேப்பரில் ‘காணவில்லை’ விளம்பரம் தருகிறாள் கல்பனா. கிராமத்திலிருக்கும் அரவிந்த் அந்த விளம்பரத்தைக் கண்டு திடுககிடுகிறான். உடனே புறப்பட்டு விளம்பரத்திலுள்ள அசோ்க்கின் சென்னை முகவரிக்கு வந்து காஞ்சனாவின் கிளாஸ்மேட் என்று சொல்லி கல்பனாவிடம் பேச, அவள் காதலனுடன் ஓடியிருக்கிறாள் என்று கல்பனா சொல்வதைக் கேட்டதும் குழம்புகிறான். தன்னைத் தவிர வேறொரு காதலனா என்று அவன் மனம் தத்தளிக்க குழப்பத்துடன் திரும்புகிறான்.

காஞ்சனா ஒதுக்குப்புறமான கடற்கரையில் மனவேதனை தாளாமல் தண்ணீருக்குள் இறங்குகிறாள். கடல் அலை இழுத்துச் செல்ல நினைவிழக்கிறாள். மீண்டும் கண் விழித்தபோது தான் ஒரு மீனவர் குப்பத்தில் இருப்பதையும், தன்னை மீனவர்கள் காப்பாற்றியதையும் அறிகிறாள். அவர்கள் அங்கேயே தங்கும்படி அவளிடம் கேட்க, அவளும் அவர்கள் பாதுகாப்பில் வெளியே வராமல் அங்கேயே தங்கி விடுகிறாள். மூன்று மாதங்கள் சென்றுவிட, கல்பனா நாளுக்கு நாள் உடல் நலிந்து கடும் காய்ச்சலில் விழுகிறாள். டாக்டர் கை விரித்து விட, அசோக்கிடம் காஞ்சனாவைத் தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறாள். அடுத்த கணம் அவள் உயிர்ப் பறவை பறந்து விடுகிறது.

ரவிந்த் காஞ்சனா செய்த துரோகத்தை நினைத்து மனம் குமுறிக் கொண்டிருக்கிறான். அச்சமயம் பம்பாயிலிருந்து (அப்போது மும்பை அல்ல) வந்த அவன் சித்தப்பா, தான் நடத்தி வரும் நர்சிங்ஹோமை அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறி அழைக்க, தனக்கும் மனமாற்றமாக இருக்கும் என்று பம்பாய் சென்று அதை ஏற்கிறான் அரவிந்த. சில நாட்களிலேயே புதிய இளம் டாக்டரின் கைராசி அங்கு பிரபலமாகி விடுகிறது.

ந்த மீனவர் குப்பத்துக்கு காஞ்சனா சென்று மேலும் ஒரு மாதம் ஓடி விட்டிருக்க, காஞ்சனா மயங்கி விழுந்ததன் காரணம் கர்ப்பம் என்று கூறிச் செல்கிறார் டாக்டர். அவளுக்கு ஆதரவுதந்து குடிசையில் வைத்திருந்த லட்சுமி என்பவள் தன் கண‌வனையும், காஞ்சனாவையும் இணைத்து சந்தேகப்பட, அவர்கள் அனைவருக்கும் நடந்தவற்றை மறைக்காமல் சொல்கிறாள் காஞ்சனா. இதற்கு மேலும் தான் அங்கிருந்தால் அவர்கள் நிம்மதி கெடும் என்று முடிவெடுத்து அன்றிரவே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சென்னை நோக்கிச் செல்லத் தொடங்குகிறாள் காஞ்சனா.

-திசைக்கொருவராய் பிரிந்திருக்கும் இந்த மூவரையும் சாமர்‌த்தியமாக கதை நகர்த்தி பம்பாக்கு கதாசிரியர் கொண்டு செல்லும் நேர்த்தியையும், இந்த உறவுச் சிக்கலின் முடிவையும் சொல்ல இன்னும் பல வரிகள் தேவைப்படுகின்றன. ஆகவே... (வேறு வழியின்றி) அடுத்த பதிவி்ல் (நிச்சயமாக) முடித்து விட்டு ‘கத்தரிக்க’ப் போய் விடுகிறேன். அதுவரை மன்னித்து உருள்வீர்... ஸாரி, மன்னித்து அருள்வீர் ஜகத்தீரே!


கண்ணே காஞ்சனா-2
 
ந்த ஆண்டின் முடிவில் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி அரவிந்துக்கு முடிந்துவிட, ஓராண்டுக்குள் சென்னைக்கே வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக காஞ்சனாவிடம் கூறி விடைபெற்றுச் செல்கிறான். காஞ்சனா விடுமுறைக்கு ஊருக்குச் சென்றுவிட, உடல்நலம் குன்றும் அசோக்கிற்கு கல்பனா செய்யும் பணிவிடையில் அவன் நெகிழ்கிறான். காஞ்சனா-கல்பனா பிறந்தநாளின் போது நாடகத்துக்குச் செல்ல வேண்டுமென்று காஞ்சனாவும் கல்பனாவும் சொல்ல, நாடகம் என்றாலே பிடிக்காத அசோக் பீச் என்க, சீட்டெடுத்துப் பார்க்க முடிவாக, மூன்று சீட்டுகளிலும் பீச் என்று எழுதி ஏமாற்றி அவர்களை பீச்சுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே வைத்துத்ன ட்ரிக்கை சொல்லி அவன் சிரிக்க, அவனை ஏமாற்ற முடிவு செய்யும் காஞ்சனா மறுதினம் கல்பனாவைப் போல் உடையணிந்து அவனுக்கு காப்பி எடுத்துச் செல்ல, முத்தம் கேட்டு அவள் கைபிடித்து இழுக்கிறான் அவன். உண்மையைச் சொல்லி அவன் ஏமாந்து விட்டதை ரசித்து கைகொட்டிச் சிரிக்கிறாள் காஞ்சனா. இதைவிடப் பெரிதாக வேறொரு நாள் அவன் ஏமாறுவான் என்று சவால் விடுகிறாள்.

ந்த விளையாட்டுகள் ஒருதினம் விபரீதமாகிறது. காஞ்சனாவுக்கு ஒருநாள் தாளமுடியாத தலைவலிவர, கல்லூரியிலிருந்து சீக்கிரமே வீடு வருகிறாள். கல்பனா கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட, முகம் கழுவி வரும் காஞ்சனா, தன் அறையில் வைத்திருக்கும் தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்து மாத்திரை எடுத்து விழுங்குகிறாள்.  தன் அறையில் துவைக்கப் போட்ட சேலைகள் வராததால், கல்பனாவின் அறைக்குப் போய் அவள் சேலை ஒன்றைக் கட்டிக் கொள்கிறாள். அப்போது மழை பலமாகப் பெய்ய, சாரல் அடிக்கிறது. ஜன்னல் கதவுகளை ஒவ்வொன்றாகச் சாத்திவிட்டு வரும் அவளை தூக்க மயக்கம் ஆட்கொள்ள, நடக்க முடியாமல் கட்டிலில் விழுந்து மயங்கி விடுகிறாள்.

தியத்திற்கு மேல் வேலை இல்லாததால் நண்பன் ஒருவன் அழைப்பின் பேரில் சூடான காட்சிகள் கொண்ட ஒரு இந்திப் படம் பார்த்து விட்டு நல்ல ‘மூடில்’ வீட்டுக்கு வருகிறான். கட்டிலில் கல்பனா படுத்திருக்கும் கோலம் காமத்தை விசிறிவிட, அவளை அணைக்கிறான். தூக்க மயக்கத்திலும் விழித்துப் பார்க்கும் காஞ்சனா, அசோக்கைப் பார்த்து உதற நினைத்தாலும், பேச நினைத்தாலும் மிக பலவீனமாக இருப்பதால் எடுபடவில்லை. அந்த நேரத்தில் மின்சாரமும் போய்விட, கூடல் நிகழ்ந்து விடுகிறது. மீண்டும் மின்சாரம் வந்தபோது கட்டிலில் படுத்திருக்கும் மனைவியின் ஆடையற்ற உடலை ரசிக்கிறான் அசோக்- அவள் அதுவரையில் வெளிச்சத்தில் பார்க்க அனுமதித்தில்லை ஆதலால். அப்போதுதான் அந்த மச்சங்கள் அவன் கண்ணில்பட, நடந்ததை அ‌வை விளக்க, இடிவிழுந்தது போல அதிர்ச்சிக்குள்ளாகிறான். இனனது செய்வதென்று அறியாமல் காரை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் ஓட்டிச் செல்கிறான்.

ல்பனா மழை ஓயும் வரை காத்திருந்து கோயிலிலிருந்து திரும்பிவர, வீட்டில் யாருமின்றி மயான அமைதியில் இருக்கிறது. தங்கள் அறை கட்டிலின் மீது மல்லிகைப் பூக்கள் கசங்கிக் கிடப்பதையும், ஒரு கடிதத்தையும் பார்க்கிறாள். தான் கறைபட்டு விட்டதாகவும், காரணமானவன் குற்றவாளி இல்லை என்றும் தான் இனி வரமாட்டேன் என்றும் காஞ்சனா எழுதிச் சென்றிருக்கிறாள். இரண்டையும் இரண்டையும் கூட்டிப் பார்க்கும் கல்பனாவால் அசோக்கை நினைத்தும் பார்க்க இயலாமல் வேரற்ற மரம் போல மயங்கிச் சரிகிறாள். ஊரெல்லாம் சுற்றியலைந்த அசோக் சற்று மனதை தேற்றிக் கொண்டு வீடு திரும்ப, கல்பனா கடிதத்துடன் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கிறான். அவள் மயக்கத்தை தெளிவிக்க, நடந்ததை சொல்லி அழுகிறாள். அநியாயத்துக்கு நல்லவனான அசோக்கும், நடந்த விஷயத்தை அவளிடம் சொல்லி, தானே குற்றவாளி என்பதையும் ஒப்புக் கொள்கிறான்.

காஞ்சனாவைத் தேடியலைந்தும் அசோக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்பனா அவனை மன்னித்து விட, குற்ற உணர்ச்சி கொள்கிறான் அவன். காஞ்சனா காணாமல் போய்விட்டாள், காதல் காரணமாக ஓடியிருப்பாள் என்று பெற்றோரிடம் (கணவனுக்காக பொய்) சொல்லி, பேப்பரில் ‘காணவில்லை’ விளம்பரம் தருகிறாள் கல்பனா. கிராமத்திலிருக்கும் அரவிந்த் அந்த விளம்பரத்தைக் கண்டு திடுககிடுகிறான். உடனே புறப்பட்டு விளம்பரத்திலுள்ள அசோ்க்கின் சென்னை முகவரிக்கு வந்து காஞ்சனாவின் கிளாஸ்மேட் என்று சொல்லி கல்பனாவிடம் பேச, அவள் காதலனுடன் ஓடியிருக்கிறாள் என்று கல்பனா சொல்வதைக் கேட்டதும் குழம்புகிறான். தன்னைத் தவிர வேறொரு காதலனா என்று அவன் மனம் தத்தளிக்க குழப்பத்துடன் திரும்புகிறான்.

காஞ்சனா ஒதுக்குப்புறமான கடற்கரையில் மனவேதனை தாளாமல் தண்ணீருக்குள் இறங்குகிறாள். கடல் அலை இழுத்துச் செல்ல நினைவிழக்கிறாள். மீண்டும் கண் விழித்தபோது தான் ஒரு மீனவர் குப்பத்தில் இருப்பதையும், தன்னை மீனவர்கள் காப்பாற்றியதையும் அறிகிறாள். அவர்கள் அங்கேயே தங்கும்படி அவளிடம் கேட்க, அவளும் அவர்கள் பாதுகாப்பில் வெளியே வராமல் அங்கேயே தங்கி விடுகிறாள். மூன்று மாதங்கள் சென்றுவிட, கல்பனா நாளுக்கு நாள் உடல் நலிந்து கடும் காய்ச்சலில் விழுகிறாள். டாக்டர் கை விரித்து விட, அசோக்கிடம் காஞ்சனாவைத் தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறாள். அடுத்த கணம் அவள் உயிர்ப் பறவை பறந்து விடுகிறது.

ரவிந்த் காஞ்சனா செய்த துரோகத்தை நினைத்து மனம் குமுறிக் கொண்டிருக்கிறான். அச்சமயம் பம்பாயிலிருந்து (அப்போது மும்பை அல்ல) வந்த அவன் சித்தப்பா, தான் நடத்தி வரும் நர்சிங்ஹோமை அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறி அழைக்க, தனக்கும் மனமாற்றமாக இருக்கும் என்று பம்பாய் சென்று அதை ஏற்கிறான் அரவிந்த. சில நாட்களிலேயே புதிய இளம் டாக்டரின் கைராசி அங்கு பிரபலமாகி விடுகிறது.

ந்த மீனவர் குப்பத்துக்கு காஞ்சனா சென்று மேலும் ஒரு மாதம் ஓடி விட்டிருக்க, காஞ்சனா மயங்கி விழுந்ததன் காரணம் கர்ப்பம் என்று கூறிச் செல்கிறார் டாக்டர். அவளுக்கு ஆதரவுதந்து குடிசையில் வைத்திருந்த லட்சுமி என்பவள் தன் கண‌வனையும், காஞ்சனாவையும் இணைத்து சந்தேகப்பட, அவர்கள் அனைவருக்கும் நடந்தவற்றை மறைக்காமல் சொல்கிறாள் காஞ்சனா. இதற்கு மேலும் தான் அங்கிருந்தால் அவர்கள் நிம்மதி கெடும் என்று முடிவெடுத்து அன்றிரவே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சென்னை நோக்கிச் செல்லத் தொடங்குகிறாள் காஞ்சனா.

-திசைக்கொருவராய் பிரிந்திருக்கும் இந்த மூவரையும் சாமர்‌த்தியமாக கதை நகர்த்தி பம்பாக்கு கதாசிரியர் கொண்டு செல்லும் நேர்த்தியையும், இந்த உறவுச் சிக்கலின் முடிவையும் சொல்ல இன்னும் பல வரிகள் தேவைப்படுகின்றன. ஆகவே... (வேறு வழியின்றி) அடுத்த பதிவி்ல் (நிச்சயமாக) முடித்து விட்டு ‘கத்தரிக்க’ப் போய் விடுகிறேன். அதுவரை மன்னித்து உருள்வீர்... ஸாரி, மன்னித்து அருள்வீர் ஜகத்தீரே!

Monday, July 23, 2012


மீபத்திய புத்தகக் கண்காட்‌சியின் போது யானை விலை, குதிரை விலை என்கிற ரேஞ்சுக்கு நெருக்கமாக புத்தகங்களின் விலையும் வந்துவிட்ட அதி்சயத்தை வியந்தவாறு சுற்றி வந்தபோது உண்மையிலேயே வேறொரு அதி்சயமும் கிடைத்தது எனக்கு. பாரதி பதிப்பக ஸ்டாலில் பழைய காலத்து புத்தகங்கள் சில பார்வைக்குக் கிடைத்தன. அதில் போட்டிருந்த ரூ.4.50, ரூ.8, ரூ.12.50 போன்ற அதே விலைக்கே தந்தார்கள். மகி்ழ்ச்சியுடன் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளி வந்தேன். பின்னர் ஒவ்வொன்றாகப் படித்து வந்தபோது அவற்றில் சில நாவல்கள் முத்துப் போல நன்றாகவே இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக இங்கே பகிர விரும்புகிறேன்.

‘கண்ணே காஞ்சனா’ என்று ஒரு நாவல். நாதன் என்கிற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இந்த நாவல் படிக்கையில் ஜெமினிகணேசன் நடித்த அந்நாளையத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்கும் உணர்வு எனக்குள் எழுந்தது. கதையின் திருப்பங்களும், சொன்ன விதமும் அப்படி. ஆனால் படிக்கும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி விறுவிறுவென்று சென்றது. அசோக், காஞ்சனா, கல்பனா, அரவிந்த் ஆகிய நான்கு கதாபாத்திரங்களின் கோணத்தில் அவரவர்கள் சொல்வதாக மாறி மாறி கதை சொல்லப்படுகிறது. அதன் விரிவான சுருக்கம் இங்கே:

‘கண்ணே காஞ்சனா- 1’

சோக் சென்னையில் வசிப்பவன். வசதி படைத்தவன். விளம்பரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அவன் பெங்களூர் செல்வதற்காக ரயிலில் புறப்படுகிறான். ரயில் கிளம்பும் நேரம் ஒரு இளம்பெண் ஓட்டமாக ஓடிவந்து ஏற முயல்வதைப் பார்க்கும் அவன், கை கொடுத்து அவளை கம்பார்ட்மெண்டி்ல் மேலே தூக்கி விடுகிறான். அடுத்த ஸ்டேஷனில் அவள் தோழிகள் வந்து அழைக்க அவள் ‌போய் விடுகிறாள். அந்தப் பெண்ணின் அழகு அவன் மனசில் ஒட்டிக கொள்கிறது.

அவள் காஞ்சனா. மருத்துவக் கல்லூரியில் படிப்பவள். அதே கல்லூரியில் படிக்கும் அரவிந்த் என்பவனைக் காதலிக்கிறாள். ஹவுஸ் சர்ஜனாக இருக்கும் அரவிந்த் படிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டே அவள் வீட்டில் பேசி அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறான்.

அசோக் சென்னை திரும்பியதும் பல கல்லூரிகளில் ‌ஏதோ ஒரு காரணம் சொல்லிச் சென்று தான் ரயிலில் பார்த்த அழகி தென்படுகிறாளா என்று தேடுகிறான். அனாவசியமாக அலைந்ததைத் தவிர வேறு பயன் கி‌ட்டவில்லை. அவள் கிடைக்காத ஏமாற்றத்துடன் இருக்கும் அவனிடம், அப்பாவும் அம்மாவும் கல்யாணப் பேச்சை எடுக்க, தட்டிக் கழிக்கிறான். பின்னொரு நாளில் அப்பாவின் கோவை நண்பரொருவர் வந்து, கோவை மில் அதிபரின் பெண் என்றும் படித்தவள் என்றும் சொல்ல, அப்பா அசோக்கை சம்மதிக்கச் சொல்கிறார். தட்டிக் கழிக்கப் பார்க்கும் அவனிடம் கோபமாகப் பேசும் அப்பா, பெண்ணின் போட்டோவை முதலில் பார் என்று அவனிடம் தருகிறார். வேண்டாவெறுப்பாக புகைப்படத்தைப் பார்க்கும் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது- அவன் ரயிலில் பார்த்து மனதைப் பறி கொடுத்தவள்.

காஞ்சனா அப்பாவிடமிருந்து வந்த மஞ்சள் தடவிய கடிதத்தை படித்துக் கொண்டிருக்க, அரவிந்த் வருகிறான். என்னவென்று கேட்கும் அவனிடம் தன் அப்பா மாப்பிள்ளை பார்த்து விட்டார் என்றும், அடுத்த வாரம் கல்யாணம் என்றும் அவள் ‌சொல்ல கோபிக்கிறான் அரவிந்த். சற்று நேரம் சென்றபின் கல்யாணம் தன் அக்கா கல்பனாவுக்கு என்றும் தனக்கு இரண்டு நிமிடம் முன் பிறந்த இரட்டைச் சகோதரி அவள் என்றும் சொல்கிறாள் காஞ்சனா.

கல்யாண  தினத்தன்று காஞ்சனா வந்த ரயில் ஈரோட்டில் கவிழ்ந்து விட, டாக்ஸி பிடித்து வந்தும், தாலி கட்டிய பின்னர்தான் வர முடிகிறது. தான் தாலி கட்டிய கல்பனா அருகில் அமர்ந்திருக்க, வாசலிலிருந்தும் அவளே வருவதைக் கண்டு திகைக்கும் அசோககிற்கு அவர்கள் இரட்டையர்கள் என்பதும் தான் விரும்பியது காஞ்சனாவை, ஆனால் மணந்தது கல்பனாவை என்பதும் தெரியவர, இடிந்து போகிறான். ஆனால் மனதைத் தேற்றிக் கொண்டு கல்பனாவுடன் வாழத் தொடங்குகிறான். பேச்சுவாக்கில் அவளிடம் இரட்டையரான அவர்களிடம் எப்படி வித்தியாசம் காண்பது? என்று அவன் கேட்க, அவள் மார்பிலும், இடுப்பிற்குக் கீழும் இரண்டு மச்சங்கள் கல்பனாவுக்கு உண்டு என்றும், தனக்குக் கிடையாது என்றும், அதை பார்த்தா கண்டுபிடிகக முடியும் உங்களால், பழக்கத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறாள்.

தேனிலவு முடிந்து வரும் கல்பனா-அசோக்கிடம் கல்பனாவின் அப்பா அவர்களுக்காக மாம்பலத்தில் ஒரு தனி பங்களா வாங்கியிருப்பதாகச் சொல்லி, ஒரு பியட் காரையும் பரிசளிக்கிறார். இத்தனை வசதி படைத்த அவர், ஹாஸ்டல் செல‌வுககு சிக்கனம் பார்த்துத் தொலைத்திருக்கக் கூடாதுதான்! ஹாஸ்டலில் படித்துக் கொண்டு இன்னொரு ‌மகள் காஞ்சனா ஏன் ஹாஸ்டலில் இருக்க வேண்டும், அவளும் அவர்களுடன் அந்த பங்களாவிலேயே தங்கிக் கொள்ளட்டும் என்கிறார். தயங்கும் காஞ்சனாவை அசோக்கும், கல்பனாவும் வற்புறுத்த ஒப்புக் கொள்கிறாள். இந்த ஏற்பாட்டினால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளை அவர்கள் யாருமே உணரவில்லை.

-‘நாங்கதான் நிறைய சினிமாக்களைப் பார்த்திருக்கோமே... இதுவரை வந்த கதைய வெச்சு இனிமே என்ன நடக்கும்னு யூகிக்கறது என்ன பிரமாதம்?’ என்று நினைக்கிறீர்கள் தானே...? ரைட், யூகித்து வையுங்கள். அடுத்த பதிவில் மீதிக் கதையைச் சொல்லி முடிக்கும் போது ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்!


மீபத்திய புத்தகக் கண்காட்‌சியின் போது யானை விலை, குதிரை விலை என்கிற ரேஞ்சுக்கு நெருக்கமாக புத்தகங்களின் விலையும் வந்துவிட்ட அதி்சயத்தை வியந்தவாறு சுற்றி வந்தபோது உண்மையிலேயே வேறொரு அதி்சயமும் கிடைத்தது எனக்கு. பாரதி பதிப்பக ஸ்டாலில் பழைய காலத்து புத்தகங்கள் சில பார்வைக்குக் கிடைத்தன. அதில் போட்டிருந்த ரூ.4.50, ரூ.8, ரூ.12.50 போன்ற அதே விலைக்கே தந்தார்கள். மகி்ழ்ச்சியுடன் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளி வந்தேன். பின்னர் ஒவ்வொன்றாகப் படித்து வந்தபோது அவற்றில் சில நாவல்கள் முத்துப் போல நன்றாகவே இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக இங்கே பகிர விரும்புகிறேன்.

‘கண்ணே காஞ்சனா’ என்று ஒரு நாவல். நாதன் என்கிற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இந்த நாவல் படிக்கையில் ஜெமினிகணேசன் நடித்த அந்நாளையத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்கும் உணர்வு எனக்குள் எழுந்தது. கதையின் திருப்பங்களும், சொன்ன விதமும் அப்படி. ஆனால் படிக்கும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி விறுவிறுவென்று சென்றது. அசோக், காஞ்சனா, கல்பனா, அரவிந்த் ஆகிய நான்கு கதாபாத்திரங்களின் கோணத்தில் அவரவர்கள் சொல்வதாக மாறி மாறி கதை சொல்லப்படுகிறது. அதன் விரிவான சுருக்கம் இங்கே:

‘கண்ணே காஞ்சனா- 1’

சோக் சென்னையில் வசிப்பவன். வசதி படைத்தவன். விளம்பரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அவன் பெங்களூர் செல்வதற்காக ரயிலில் புறப்படுகிறான். ரயில் கிளம்பும் நேரம் ஒரு இளம்பெண் ஓட்டமாக ஓடிவந்து ஏற முயல்வதைப் பார்க்கும் அவன், கை கொடுத்து அவளை கம்பார்ட்மெண்டி்ல் மேலே தூக்கி விடுகிறான். அடுத்த ஸ்டேஷனில் அவள் தோழிகள் வந்து அழைக்க அவள் ‌போய் விடுகிறாள். அந்தப் பெண்ணின் அழகு அவன் மனசில் ஒட்டிக கொள்கிறது.

அவள் காஞ்சனா. மருத்துவக் கல்லூரியில் படிப்பவள். அதே கல்லூரியில் படிக்கும் அரவிந்த் என்பவனைக் காதலிக்கிறாள். ஹவுஸ் சர்ஜனாக இருக்கும் அரவிந்த் படிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டே அவள் வீட்டில் பேசி அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறான்.

அசோக் சென்னை திரும்பியதும் பல கல்லூரிகளில் ‌ஏதோ ஒரு காரணம் சொல்லிச் சென்று தான் ரயிலில் பார்த்த அழகி தென்படுகிறாளா என்று தேடுகிறான். அனாவசியமாக அலைந்ததைத் தவிர வேறு பயன் கி‌ட்டவில்லை. அவள் கிடைக்காத ஏமாற்றத்துடன் இருக்கும் அவனிடம், அப்பாவும் அம்மாவும் கல்யாணப் பேச்சை எடுக்க, தட்டிக் கழிக்கிறான். பின்னொரு நாளில் அப்பாவின் கோவை நண்பரொருவர் வந்து, கோவை மில் அதிபரின் பெண் என்றும் படித்தவள் என்றும் சொல்ல, அப்பா அசோக்கை சம்மதிக்கச் சொல்கிறார். தட்டிக் கழிக்கப் பார்க்கும் அவனிடம் கோபமாகப் பேசும் அப்பா, பெண்ணின் போட்டோவை முதலில் பார் என்று அவனிடம் தருகிறார். வேண்டாவெறுப்பாக புகைப்படத்தைப் பார்க்கும் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது- அவன் ரயிலில் பார்த்து மனதைப் பறி கொடுத்தவள்.

காஞ்சனா அப்பாவிடமிருந்து வந்த மஞ்சள் தடவிய கடிதத்தை படித்துக் கொண்டிருக்க, அரவிந்த் வருகிறான். என்னவென்று கேட்கும் அவனிடம் தன் அப்பா மாப்பிள்ளை பார்த்து விட்டார் என்றும், அடுத்த வாரம் கல்யாணம் என்றும் அவள் ‌சொல்ல கோபிக்கிறான் அரவிந்த். சற்று நேரம் சென்றபின் கல்யாணம் தன் அக்கா கல்பனாவுக்கு என்றும் தனக்கு இரண்டு நிமிடம் முன் பிறந்த இரட்டைச் சகோதரி அவள் என்றும் சொல்கிறாள் காஞ்சனா.

கல்யாண  தினத்தன்று காஞ்சனா வந்த ரயில் ஈரோட்டில் கவிழ்ந்து விட, டாக்ஸி பிடித்து வந்தும், தாலி கட்டிய பின்னர்தான் வர முடிகிறது. தான் தாலி கட்டிய கல்பனா அருகில் அமர்ந்திருக்க, வாசலிலிருந்தும் அவளே வருவதைக் கண்டு திகைக்கும் அசோககிற்கு அவர்கள் இரட்டையர்கள் என்பதும் தான் விரும்பியது காஞ்சனாவை, ஆனால் மணந்தது கல்பனாவை என்பதும் தெரியவர, இடிந்து போகிறான். ஆனால் மனதைத் தேற்றிக் கொண்டு கல்பனாவுடன் வாழத் தொடங்குகிறான். பேச்சுவாக்கில் அவளிடம் இரட்டையரான அவர்களிடம் எப்படி வித்தியாசம் காண்பது? என்று அவன் கேட்க, அவள் மார்பிலும், இடுப்பிற்குக் கீழும் இரண்டு மச்சங்கள் கல்பனாவுக்கு உண்டு என்றும், தனக்குக் கிடையாது என்றும், அதை பார்த்தா கண்டுபிடிகக முடியும் உங்களால், பழக்கத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறாள்.

தேனிலவு முடிந்து வரும் கல்பனா-அசோக்கிடம் கல்பனாவின் அப்பா அவர்களுக்காக மாம்பலத்தில் ஒரு தனி பங்களா வாங்கியிருப்பதாகச் சொல்லி, ஒரு பியட் காரையும் பரிசளிக்கிறார். இத்தனை வசதி படைத்த அவர், ஹாஸ்டல் செல‌வுககு சிக்கனம் பார்த்துத் தொலைத்திருக்கக் கூடாதுதான்! ஹாஸ்டலில் படித்துக் கொண்டு இன்னொரு ‌மகள் காஞ்சனா ஏன் ஹாஸ்டலில் இருக்க வேண்டும், அவளும் அவர்களுடன் அந்த பங்களாவிலேயே தங்கிக் கொள்ளட்டும் என்கிறார். தயங்கும் காஞ்சனாவை அசோக்கும், கல்பனாவும் வற்புறுத்த ஒப்புக் கொள்கிறாள். இந்த ஏற்பாட்டினால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளை அவர்கள் யாருமே உணரவில்லை.

-‘நாங்கதான் நிறைய சினிமாக்களைப் பார்த்திருக்கோமே... இதுவரை வந்த கதைய வெச்சு இனிமே என்ன நடக்கும்னு யூகிக்கறது என்ன பிரமாதம்?’ என்று நினைக்கிறீர்கள் தானே...? ரைட், யூகித்து வையுங்கள். அடுத்த பதிவில் மீதிக் கதையைச் சொல்லி முடிக்கும் போது ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்!

Tuesday, July 17, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டது.


மனைவி கேட்ட கேள்விக்கு எவ்வளவு அப்பாவியா இவர் பதில் கொடுக்கறாரு பாருங்க நண்பர்களே...


 இங்க பாருங்க...  நிஜமாவே இன்னொரு அப்பாவி மனுஷன்...


நாம எல்லாருக்கும பொதுவா சினிமா தியேட்டர்ல தோணுற எண்ணம் இது. 1968லயே குமுதம் பத்திரிகைக்குத் தோணி. இந்தத் துணுக்கை போட்ருக்காங்க.



இன்னிக்குததான் இப்படின்னு இல்ல... சாவி ஸார் குங்குமத்துல ஆசிரியரா இருந்த நாள்லயே ஆட்டோக் காரங்க இப்படித்தான் இருந்திருக்காங்க... அய்யோ... அய்யோ...


ஆ.வியின் துணுக்குகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.. இவை சிரிப்பை உங்ககிட்டருந்து வரவழைக்காம போய்டுமா என்ன...


மீண்டும் அடுத்த சுற்றில் சந்திக்கலாம்...  இப்ப நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லலாமுங்கோ...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டது.


மனைவி கேட்ட கேள்விக்கு எவ்வளவு அப்பாவியா இவர் பதில் கொடுக்கறாரு பாருங்க நண்பர்களே...


 இங்க பாருங்க...  நிஜமாவே இன்னொரு அப்பாவி மனுஷன்...


நாம எல்லாருக்கும பொதுவா சினிமா தியேட்டர்ல தோணுற எண்ணம் இது. 1968லயே குமுதம் பத்திரிகைக்குத் தோணி. இந்தத் துணுக்கை போட்ருக்காங்க.



இன்னிக்குததான் இப்படின்னு இல்ல... சாவி ஸார் குங்குமத்துல ஆசிரியரா இருந்த நாள்லயே ஆட்டோக் காரங்க இப்படித்தான் இருந்திருக்காங்க... அய்யோ... அய்யோ...


ஆ.வியின் துணுக்குகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.. இவை சிரிப்பை உங்ககிட்டருந்து வரவழைக்காம போய்டுமா என்ன...


மீண்டும் அடுத்த சுற்றில் சந்திக்கலாம்...  இப்ப நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லலாமுங்கோ...

Friday, July 13, 2012


இரண்டாவது தாலி
-ராஜேஷ்குமார்-
 
க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்திருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில் சாவிக்காக காத்திருந்து தொடர் படித்தது இன்றும் மனதில் பசுமையாய்! அந்தக் கதையின் ‘சுருக்’ இங்கே உங்களுக்காக.

சுபமதி பெரும் பணக்காரர் தணிகாசலத்தின் மகள். கல்லூரி மாணவியான அவளை அவளு‌டன் கல்லூரியில் படிக்கும் ஷ்யாம் என்பவன் விரும்புகி‌றான். ஷ்யாம் நல்லவனாக இருந்துவிட்டால் சுபமதி காதலித்திருப்பாள்... அவனோ சிகரெட், மது என்று சுற்றி படிப்பின் மீது அக்கறையில்லாத ஜாலி டைப். எனவே அவள் கண்டுகொள்வதல்லை அவனை.

அவர்கள் கல்லூரியில் கல்விச் சுற்றுப்பயணத்துக்காக முதுமலை காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே ஒரு யானை மாணவிகளைத் துரத்த, சந்தர்ப்பவசமாக தோழிகளைவிட்டு தனியே பிரிந்து விடுகிறாள் சுபமதி. யானை அவளைத் துரத்தி வருகிறது. ‘புடவையை அவிழ்த்து எறிந்துவிட்டால் யானை நின்று விடும்’ என்று எங்கோ கேள்விப்பட்ட (தவறான) தகவலால் அதைச் செயலாக்கியபடி ஓடுகிறாள். யானை விட்டபாடில்லை. ஓடிய களைப்பில் ஓரிடத்தில் மயங்கி விடுகிறாள். மீண்டும் உணர்வு திரும்பியபோது அவள் உடலில் சேலைக்கு பதிலாக ஒரு கோட் இருக்கிறது. அருகி்ல் இலை, தழைகளால் நெருப்பு மூட்டியபடி ஒரு இளைஞன் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறான். அவன்தான் தன்னைக் காப்பாற்றியவன் என்பதை அறிகிறாள்.

அவன் பெயர் புவனேந்திரன். கோவையில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவன். அவளை கல்லூரிக் குழுவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கிறான். சுபமதி அவனுடன் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும் ஷ்யாம் கொதிக்கிறான். சுபமதியின் அப்பா தணிகாசலம் பெற்றோரை இழந்துவிட்ட அவரது தங்கை மகன் சுந்தரத்தை படிக்க வைத்து, வேலையும் தந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். அவனுக்கு சுபமதியைக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்பது அவரது விருப்பம். சுந்தரம் யா‌னை சுபமதியைத் துரத்திய விஷயத்தை தணிகாசலத்திடம் சொல்ல, அவர் அவள் மீது அளவுகடந்த பாசமுள்ள அவர், படிப்பையே நிறுத்தி விடலாம் என்கிறார். சுந்தரம் சமாதானப்படுத்துகிறான்.

சுபமதிக்கு அதன்பின் புவனேந்திரன் நினைவாகவே இருக்கிறது. அவள் வீட்டுக்கு ஒரு இன்டீரியர் டெக்ரேட்டர் போல பொய் சொல்லி வந்து அவளைச் சந்திக்கிறான் புவனேந்திரன். அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதை அறிந்து மகிழ்கிறாள். அவர்கள் காதல் வளர்கிறது. புவனேந்திரனுக்கு, சத்யேந்திரன் என்கிற பாதை மாறிப்போன ஒரு தம்பி மட்டும் இருப்பதையும் வேறு சொந்தபந்தங்கள் இல்லை என்பதையும் அறிகிறாள் சுபமதி. ஷ்யாம் ஒரு முறை சுபமதியிடம் ஓவராகப் பேசி, புவனேந்திரனிடம் உதை வாங்கி அவமானப்படுகிறான். வன்மம் வளர்க்கிறான் மனதில்.

வீட்டில் சுபமதியும், அவள் தோழி ஆஷாவும் இந்தக் காதலைப் பற்றிப் பேசுவதை அந்தப் பக்கம் எதேச்சையாக வரும் சுந்தரம் கேட்டு விடுகிறான். தணிகாசலம் ஜோசியரை வரவழைத்து, சுந்தரம்-சுபமதி திருமணத்துக்கு நாள் குறிக்கச் சொல்ல, ‌கால்,கை வலிப்பு வந்தவனாக நடிக்கிறான் சுந்தரம். விளைவாக... கல்யாணத் திட்டத்தை ஒத்தி வைக்கிறார் தணிகாசலம். சுபமதியிடம் தனக்கு நோய் எதுவும் இல்லையென்றும், அவளுக்காக நடித்ததையும் சுந்தரம் சொல்ல, அவனை மதிப்போடு பார்க்கிறாள் சுபமதி.

தணிகாசலம் பிடிவாதப் பேர்வழி என்பதால் காதலை ஒப்புக் கொள்ள மாட்டார், கல்யாணம் செய்து கொண்டு எதிரே வந்தால் சமாதானமாகி விடுவார் என்று வற்புறுத்துகிறார்கள் சுந்தரமும் ஆஷாவும். இவர்களும் ஒப்புக் கொண்டு திருப்பதி சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 திரும்பி வருகையில் இரு மர்ம உருவங்கள் பாய்ந்து சுபமதியின் முகத்தி்ல் ஒரு துணியால் மூட, அவள் நினைவு தவறுகிறது. மீண்டும் கண் விழிக்கையில் ஆந்திராவில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் தான் கிடப்பதை உணர்கிறாள். முன்னேயுள்ள இருக்கையில் புவனேந்திரனும் அவன் நண்பனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுபமதி நல்ல ஸ்ட்ரக்ட்சர் உள்ள பெண் என்றும், நல்ல விலைக்குப் போவாள் மும்பையில் என்றும் புவனேந்திரன் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் நொறுங்கிப் போகிறாள் சுபமதி.

‘‘இந்த அதிரடித் திருப்பத்திற்குப் பின்னர் ராஜேஷ்குமார் கதையில் வைத்திருக்கும் திருப்பங்களை நீங்கள் படித்துப் புரிந்து கொள்ளுதலே சிறப்பு. ஆகவே ‘இரண்டாவது தாலி’ நாவலைத் தேடிப் பிடி்த்து படித்து விடுங்கள்’’ என்று எழுதி இத்துடன் நிறுத்தி விடலாமென்று தோன்றுகிறது. ஆனா... மதுரைத் தமிழனும், சீனுவும் இன்னும சிலரும் கைல கம்போட என் அட்ரஸ் விசாரிக்கறது என் மனக்கண்ல தெரியறதால... தொடர்ந்துடலாம்.

சுபமதி குபீரென்று எழுந்து ஓட, அவர்கள் இருவரும் அவளைப் பிடிக்கத் துரத்துகிறார்கள். வெறிகொண்டு ஓடிவரும் புவனேந்திரன் குறுக்கிடும் ரயிலைக் கவனிக்காமல் அதில் சிக்கி சுபமதியின் கண்ணெதிரி‌லேயே அரைபடுகிறான். கோவையில் வீட்டுக்கு வந்ததும் நடந்த விஷயங்களை சுபமதி சொல்ல சுந்தரம் மிகவும் வருந்துகிறான்.

இதற்கிடையில் அவனுக்கு உடல் நிலை தேறாது என்பதால் வேறொரு மாப்பிள்ளையைப் பேசி முடித்து கல்யாண ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் சுபமதியின் தந்தை. அவரிடம் மறுத்துப் பேசினால் ஆபத்து, கல்யாணத்திற்கு முன் ஏதாவது செய்து நான் நிறுத்தி விடுகிறேன் என்று சுந்தரம் சமாதானம் சொல்கிறான். வேறு வழியின்றி தன் வேதனையை மறைத்து சந்தோஷமாக இருப்பவள் போல நடிக்கிறாள் அவள்.

கல்யாண தினத்தின் காலையி்ல்... கீழே மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க... மேலே சுபமதியின் அறைக்கு வரும் ஷ்யாம் அவளைக் கற்பழிக்க முயல, அருகில் இருக்கும் குத்துவிளக்கினால் அவன் தலையில் ஓங்கி அடிக்கிறாள் அவள். எதிர்பாராதவிதமாக அவன் கபாலமோட்சமடைந்து உயிரை விடுகிறான். அவள் திகைத்துப் போய் நிற்க, அங்கு வரும் சுந்தரம் அவளுக்கு தைரியம் சொல்லி, ஒரு பெட்ஷீட்டில் பிணத்தைச் சுற்றி, கட்டிலின் அடியில் உருட்டி விடுகிறான்.

கல்யாண வீட்டு வாண்டுகள் ‌‘ஹைட் அண்ட் ஸீக்’ விளையாட, ஒளியும் வாண்டுகளில் ஒன்று பிணத்தையும் ரத்தத்தையும் பார்த்துவிட்டு கீழே வந்து அப்பாவிடம் சொல்ல, பிரச்னையும் வாக்குவாதங்களும் வளர்கின்றன. கல்யாணம் நின்று போகிறது. போலீஸ் வந்துவிட்டிருக்க, தா‌னே கொலை செய்ததாகச் சொல்லி (சுபமதியைப் பேசவிடாமல் சத்தியம் வாங்கி) அவர்களுடன் செல்கிறான் சுந்தரம். தொடர்ந்த இந்தச் சம்பவங்களின் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இதயத் தாக்குதல் ஏற்பட, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார் தணிகாசலம்.

ரைட்... க்ளைமாக்ஸே வந்துடுச்சு. கதை அவ்வளவுதான்னு நினைச்சீங்கன்னா அதான் இல்லை... அழகா ஒரு ஆன்டி க்ளைமாக்ஸ் (ஆன்ட்டி க்ளைமாக்ஸ் இல்ல) வைச்சிருக்கார் ரா.கு. அதை நீங்க புத்தகத்தை வாங்கி....

‘‌அதான் தொடராவும் புத்தகமாவும் வந்து பல வருஷமாச்சுல்ல.. சொல்லி முடிச்சா என்னய்யா?’ங்கறார் ஸ்ரீராம். ரைட், சொல்லிடலாம்...

சுந்தரம் ஜெயிலிலும், அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க, தனிமையில் அழுது கொண்டிருக்கும் சுபமதியிடம் அவளைப் பார்க்க விஸிட்டர் வந்திருப்பதாக வாட்ச்மேன் சொல்ல, படியிறங்கி வருகிறாள். அங்கே ஹாலில் பேப்பர்படித்தபடி அமர்ந்திருப்பது.... புவனேந்திரன்! அதிர்ந்து போகிறாள். அவனும் அவன் தம்பி சந்யேந்திரனும் ட்வின்ஸ் என்பதை சஸ்பென்ஸாக அவளிடம் சொல்ல நினைத்தது தப்பாயிற்று என்றும் அயோக்கியனான அவன், தன்னை அடித்து மலையிலிருந்து உருட்டிவிட்டு சுபமதியை தூக்கிச் சென்றதையும், நினைவிழந்து ஆந்திராவில் சிகிச்சை பெற்ற தனக்கு நினைவு திரும்ப இத்தனை நாட்கள் ஆனதையும் அவன் சொல்கிறான்.

ஆனந்த அதிர்வுடன் இங்கு நிகழ்ந்தவைகளை அவள் விவரிக்கிறாள். இருவரும் சிறைக்குச் சென்று சுந்தரத்தை சந்திக்கின்றனர். புவனேந்திரன் அயோக்கியன் அல்ல என்பதை அறிந்து மகிழும் அவன் தன் முன்னிலையில் திருமணத்துக்காக வாங்கிய தாலியை அவளுக்குக் கட்டச் சொல்கிறான். புவனேந்திரன் அப்படியே செய்கிறான். அவள் அப்பாவிடம் தான் பேசிக் கொள்வதாகவும், சிறையிலிருந்து வரும்போது அவள் குழந்தையை பள்ளியில் கொண்டு விடுவது தானாகத்தான் இருக்குமென்றும் அவன் கண்ணீரோட சொல்லிச் சிரிக்க, அவன் கண்ணீர் பட்டு, அவளின் இரண்டாவது தாலி மினுமினுக்கிறது.

-சைவ-அசைவ ஹோட்டல்கள்னு சிலது உண்டு. அங்க சைவம் சாப்ட்டாலும் அசைவம் பரிமாறின கரண்டிங்கறதால கொஞ்சம் அசைவம் வந்துடும் சுத்த சைவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. அப்படித்தான் ராஜேஷ்குமார் இந்‌தக் கதைய ப்யூர் லவ் ஸ்டோரியாவே கொண்டுட்டு வந்திருந்தாலும் பழக்க தோஷத்துல ‌மைல்டா கொஞ்சம் க்ரைமும் சஸ்பென்ஸும் வந்துடுது. அதனால என்னங்க.... முதப் பக்கத்துல ஆரம்பிச்சா, கடைசிப் பக்கம் முடிச்சுட்டுத்தான் கீழ வைக்கவே தோணும் இந்த நாவலை. அதைவிட நமக்கு வேறென்னங்க வேணும்?

பி.கு.: இந்தப் புத்தகம் இப்ப என்கிட்ட இல்ல. நினைவிலருந்து எழுதினதால ஹீரோயினோட அப்பா பேர் பன்னீர்செல்வமா, தணிகாசலமா... ரா.கு. என்ன வெச்சார்னு நினைவில்ல.


இரண்டாவது தாலி
-ராஜேஷ்குமார்-
 
க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்திருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில் சாவிக்காக காத்திருந்து தொடர் படித்தது இன்றும் மனதில் பசுமையாய்! அந்தக் கதையின் ‘சுருக்’ இங்கே உங்களுக்காக.

சுபமதி பெரும் பணக்காரர் தணிகாசலத்தின் மகள். கல்லூரி மாணவியான அவளை அவளு‌டன் கல்லூரியில் படிக்கும் ஷ்யாம் என்பவன் விரும்புகி‌றான். ஷ்யாம் நல்லவனாக இருந்துவிட்டால் சுபமதி காதலித்திருப்பாள்... அவனோ சிகரெட், மது என்று சுற்றி படிப்பின் மீது அக்கறையில்லாத ஜாலி டைப். எனவே அவள் கண்டுகொள்வதல்லை அவனை.

அவர்கள் கல்லூரியில் கல்விச் சுற்றுப்பயணத்துக்காக முதுமலை காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே ஒரு யானை மாணவிகளைத் துரத்த, சந்தர்ப்பவசமாக தோழிகளைவிட்டு தனியே பிரிந்து விடுகிறாள் சுபமதி. யானை அவளைத் துரத்தி வருகிறது. ‘புடவையை அவிழ்த்து எறிந்துவிட்டால் யானை நின்று விடும்’ என்று எங்கோ கேள்விப்பட்ட (தவறான) தகவலால் அதைச் செயலாக்கியபடி ஓடுகிறாள். யானை விட்டபாடில்லை. ஓடிய களைப்பில் ஓரிடத்தில் மயங்கி விடுகிறாள். மீண்டும் உணர்வு திரும்பியபோது அவள் உடலில் சேலைக்கு பதிலாக ஒரு கோட் இருக்கிறது. அருகி்ல் இலை, தழைகளால் நெருப்பு மூட்டியபடி ஒரு இளைஞன் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறான். அவன்தான் தன்னைக் காப்பாற்றியவன் என்பதை அறிகிறாள்.

அவன் பெயர் புவனேந்திரன். கோவையில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவன். அவளை கல்லூரிக் குழுவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கிறான். சுபமதி அவனுடன் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும் ஷ்யாம் கொதிக்கிறான். சுபமதியின் அப்பா தணிகாசலம் பெற்றோரை இழந்துவிட்ட அவரது தங்கை மகன் சுந்தரத்தை படிக்க வைத்து, வேலையும் தந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். அவனுக்கு சுபமதியைக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்பது அவரது விருப்பம். சுந்தரம் யா‌னை சுபமதியைத் துரத்திய விஷயத்தை தணிகாசலத்திடம் சொல்ல, அவர் அவள் மீது அளவுகடந்த பாசமுள்ள அவர், படிப்பையே நிறுத்தி விடலாம் என்கிறார். சுந்தரம் சமாதானப்படுத்துகிறான்.

சுபமதிக்கு அதன்பின் புவனேந்திரன் நினைவாகவே இருக்கிறது. அவள் வீட்டுக்கு ஒரு இன்டீரியர் டெக்ரேட்டர் போல பொய் சொல்லி வந்து அவளைச் சந்திக்கிறான் புவனேந்திரன். அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதை அறிந்து மகிழ்கிறாள். அவர்கள் காதல் வளர்கிறது. புவனேந்திரனுக்கு, சத்யேந்திரன் என்கிற பாதை மாறிப்போன ஒரு தம்பி மட்டும் இருப்பதையும் வேறு சொந்தபந்தங்கள் இல்லை என்பதையும் அறிகிறாள் சுபமதி. ஷ்யாம் ஒரு முறை சுபமதியிடம் ஓவராகப் பேசி, புவனேந்திரனிடம் உதை வாங்கி அவமானப்படுகிறான். வன்மம் வளர்க்கிறான் மனதில்.

வீட்டில் சுபமதியும், அவள் தோழி ஆஷாவும் இந்தக் காதலைப் பற்றிப் பேசுவதை அந்தப் பக்கம் எதேச்சையாக வரும் சுந்தரம் கேட்டு விடுகிறான். தணிகாசலம் ஜோசியரை வரவழைத்து, சுந்தரம்-சுபமதி திருமணத்துக்கு நாள் குறிக்கச் சொல்ல, ‌கால்,கை வலிப்பு வந்தவனாக நடிக்கிறான் சுந்தரம். விளைவாக... கல்யாணத் திட்டத்தை ஒத்தி வைக்கிறார் தணிகாசலம். சுபமதியிடம் தனக்கு நோய் எதுவும் இல்லையென்றும், அவளுக்காக நடித்ததையும் சுந்தரம் சொல்ல, அவனை மதிப்போடு பார்க்கிறாள் சுபமதி.

தணிகாசலம் பிடிவாதப் பேர்வழி என்பதால் காதலை ஒப்புக் கொள்ள மாட்டார், கல்யாணம் செய்து கொண்டு எதிரே வந்தால் சமாதானமாகி விடுவார் என்று வற்புறுத்துகிறார்கள் சுந்தரமும் ஆஷாவும். இவர்களும் ஒப்புக் கொண்டு திருப்பதி சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 திரும்பி வருகையில் இரு மர்ம உருவங்கள் பாய்ந்து சுபமதியின் முகத்தி்ல் ஒரு துணியால் மூட, அவள் நினைவு தவறுகிறது. மீண்டும் கண் விழிக்கையில் ஆந்திராவில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் தான் கிடப்பதை உணர்கிறாள். முன்னேயுள்ள இருக்கையில் புவனேந்திரனும் அவன் நண்பனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுபமதி நல்ல ஸ்ட்ரக்ட்சர் உள்ள பெண் என்றும், நல்ல விலைக்குப் போவாள் மும்பையில் என்றும் புவனேந்திரன் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் நொறுங்கிப் போகிறாள் சுபமதி.

‘‘இந்த அதிரடித் திருப்பத்திற்குப் பின்னர் ராஜேஷ்குமார் கதையில் வைத்திருக்கும் திருப்பங்களை நீங்கள் படித்துப் புரிந்து கொள்ளுதலே சிறப்பு. ஆகவே ‘இரண்டாவது தாலி’ நாவலைத் தேடிப் பிடி்த்து படித்து விடுங்கள்’’ என்று எழுதி இத்துடன் நிறுத்தி விடலாமென்று தோன்றுகிறது. ஆனா... மதுரைத் தமிழனும், சீனுவும் இன்னும சிலரும் கைல கம்போட என் அட்ரஸ் விசாரிக்கறது என் மனக்கண்ல தெரியறதால... தொடர்ந்துடலாம்.

சுபமதி குபீரென்று எழுந்து ஓட, அவர்கள் இருவரும் அவளைப் பிடிக்கத் துரத்துகிறார்கள். வெறிகொண்டு ஓடிவரும் புவனேந்திரன் குறுக்கிடும் ரயிலைக் கவனிக்காமல் அதில் சிக்கி சுபமதியின் கண்ணெதிரி‌லேயே அரைபடுகிறான். கோவையில் வீட்டுக்கு வந்ததும் நடந்த விஷயங்களை சுபமதி சொல்ல சுந்தரம் மிகவும் வருந்துகிறான்.

இதற்கிடையில் அவனுக்கு உடல் நிலை தேறாது என்பதால் வேறொரு மாப்பிள்ளையைப் பேசி முடித்து கல்யாண ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் சுபமதியின் தந்தை. அவரிடம் மறுத்துப் பேசினால் ஆபத்து, கல்யாணத்திற்கு முன் ஏதாவது செய்து நான் நிறுத்தி விடுகிறேன் என்று சுந்தரம் சமாதானம் சொல்கிறான். வேறு வழியின்றி தன் வேதனையை மறைத்து சந்தோஷமாக இருப்பவள் போல நடிக்கிறாள் அவள்.

கல்யாண தினத்தின் காலையி்ல்... கீழே மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க... மேலே சுபமதியின் அறைக்கு வரும் ஷ்யாம் அவளைக் கற்பழிக்க முயல, அருகில் இருக்கும் குத்துவிளக்கினால் அவன் தலையில் ஓங்கி அடிக்கிறாள் அவள். எதிர்பாராதவிதமாக அவன் கபாலமோட்சமடைந்து உயிரை விடுகிறான். அவள் திகைத்துப் போய் நிற்க, அங்கு வரும் சுந்தரம் அவளுக்கு தைரியம் சொல்லி, ஒரு பெட்ஷீட்டில் பிணத்தைச் சுற்றி, கட்டிலின் அடியில் உருட்டி விடுகிறான்.

கல்யாண வீட்டு வாண்டுகள் ‌‘ஹைட் அண்ட் ஸீக்’ விளையாட, ஒளியும் வாண்டுகளில் ஒன்று பிணத்தையும் ரத்தத்தையும் பார்த்துவிட்டு கீழே வந்து அப்பாவிடம் சொல்ல, பிரச்னையும் வாக்குவாதங்களும் வளர்கின்றன. கல்யாணம் நின்று போகிறது. போலீஸ் வந்துவிட்டிருக்க, தா‌னே கொலை செய்ததாகச் சொல்லி (சுபமதியைப் பேசவிடாமல் சத்தியம் வாங்கி) அவர்களுடன் செல்கிறான் சுந்தரம். தொடர்ந்த இந்தச் சம்பவங்களின் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இதயத் தாக்குதல் ஏற்பட, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார் தணிகாசலம்.

ரைட்... க்ளைமாக்ஸே வந்துடுச்சு. கதை அவ்வளவுதான்னு நினைச்சீங்கன்னா அதான் இல்லை... அழகா ஒரு ஆன்டி க்ளைமாக்ஸ் (ஆன்ட்டி க்ளைமாக்ஸ் இல்ல) வைச்சிருக்கார் ரா.கு. அதை நீங்க புத்தகத்தை வாங்கி....

‘‌அதான் தொடராவும் புத்தகமாவும் வந்து பல வருஷமாச்சுல்ல.. சொல்லி முடிச்சா என்னய்யா?’ங்கறார் ஸ்ரீராம். ரைட், சொல்லிடலாம்...

சுந்தரம் ஜெயிலிலும், அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க, தனிமையில் அழுது கொண்டிருக்கும் சுபமதியிடம் அவளைப் பார்க்க விஸிட்டர் வந்திருப்பதாக வாட்ச்மேன் சொல்ல, படியிறங்கி வருகிறாள். அங்கே ஹாலில் பேப்பர்படித்தபடி அமர்ந்திருப்பது.... புவனேந்திரன்! அதிர்ந்து போகிறாள். அவனும் அவன் தம்பி சந்யேந்திரனும் ட்வின்ஸ் என்பதை சஸ்பென்ஸாக அவளிடம் சொல்ல நினைத்தது தப்பாயிற்று என்றும் அயோக்கியனான அவன், தன்னை அடித்து மலையிலிருந்து உருட்டிவிட்டு சுபமதியை தூக்கிச் சென்றதையும், நினைவிழந்து ஆந்திராவில் சிகிச்சை பெற்ற தனக்கு நினைவு திரும்ப இத்தனை நாட்கள் ஆனதையும் அவன் சொல்கிறான்.

ஆனந்த அதிர்வுடன் இங்கு நிகழ்ந்தவைகளை அவள் விவரிக்கிறாள். இருவரும் சிறைக்குச் சென்று சுந்தரத்தை சந்திக்கின்றனர். புவனேந்திரன் அயோக்கியன் அல்ல என்பதை அறிந்து மகிழும் அவன் தன் முன்னிலையில் திருமணத்துக்காக வாங்கிய தாலியை அவளுக்குக் கட்டச் சொல்கிறான். புவனேந்திரன் அப்படியே செய்கிறான். அவள் அப்பாவிடம் தான் பேசிக் கொள்வதாகவும், சிறையிலிருந்து வரும்போது அவள் குழந்தையை பள்ளியில் கொண்டு விடுவது தானாகத்தான் இருக்குமென்றும் அவன் கண்ணீரோட சொல்லிச் சிரிக்க, அவன் கண்ணீர் பட்டு, அவளின் இரண்டாவது தாலி மினுமினுக்கிறது.

-சைவ-அசைவ ஹோட்டல்கள்னு சிலது உண்டு. அங்க சைவம் சாப்ட்டாலும் அசைவம் பரிமாறின கரண்டிங்கறதால கொஞ்சம் அசைவம் வந்துடும் சுத்த சைவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. அப்படித்தான் ராஜேஷ்குமார் இந்‌தக் கதைய ப்யூர் லவ் ஸ்டோரியாவே கொண்டுட்டு வந்திருந்தாலும் பழக்க தோஷத்துல ‌மைல்டா கொஞ்சம் க்ரைமும் சஸ்பென்ஸும் வந்துடுது. அதனால என்னங்க.... முதப் பக்கத்துல ஆரம்பிச்சா, கடைசிப் பக்கம் முடிச்சுட்டுத்தான் கீழ வைக்கவே தோணும் இந்த நாவலை. அதைவிட நமக்கு வேறென்னங்க வேணும்?

பி.கு.: இந்தப் புத்தகம் இப்ப என்கிட்ட இல்ல. நினைவிலருந்து எழுதினதால ஹீரோயினோட அப்பா பேர் பன்னீர்செல்வமா, தணிகாசலமா... ரா.கு. என்ன வெச்சார்னு நினைவில்ல.

Friday, July 6, 2012

ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிவியுங்கள். தொடரலாம்.

                             ‘லதா’ வரைந்த யவன ராணியும்... பூவழகியும்...!

            ‘சந்திரா’ வரைந்த (மாறுவேட) மகேந்திர பல்லவரும், பரஞ்ஜோதியும்...!

                       ஆ.வி,யில் ‘ராஜி‘ தொடருக்கு கோபுலுவின் கைவண்ணம்!

           ஜலதீபத்தில் இதயசந்திரனும் பானுதேவியும் வர்ணம் கைவண்ணத்தில்!

டபிள்யூஆர்ஸ்வர்ணலதாவின் ‘யார் அந்த அழகி’ தொடரில் மாயாவின் கைவணணம் இது,

                        ஜெயராஜின் கைவண்ணத்தில் அட்டைப்பட ஓவியம்!

ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிவியுங்கள். தொடரலாம்.

                             ‘லதா’ வரைந்த யவன ராணியும்... பூவழகியும்...!

            ‘சந்திரா’ வரைந்த (மாறுவேட) மகேந்திர பல்லவரும், பரஞ்ஜோதியும்...!

                       ஆ.வி,யில் ‘ராஜி‘ தொடருக்கு கோபுலுவின் கைவண்ணம்!

           ஜலதீபத்தில் இதயசந்திரனும் பானுதேவியும் வர்ணம் கைவண்ணத்தில்!

டபிள்யூஆர்ஸ்வர்ணலதாவின் ‘யார் அந்த அழகி’ தொடரில் மாயாவின் கைவணணம் இது,

                        ஜெயராஜின் கைவண்ணத்தில் அட்டைப்பட ஓவியம்!

Wednesday, July 4, 2012

ந்தக் காலத்துல இருந்து இந்தக காலம் வரை கணவன் மார்களை மனைவிகளைக் கலாய்க்கும் ஜோக்குகள் சிரஞ்சீவிதான் போலும்..!


கதைகளில் தான் எழுத்தாளர்கள் கடி கடி என்று கடித்துத் தள்ளுவார்கள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இவர் வாசகரை எப்படிக் கடிக்கிறார் பாருங்கள்...


பத்திரிகை ஆசிரியர்கள் பாடு எப்பவுமே தலைவலியானதுதான். ஒரு தலைவலியை இவர் எப்படி சமாளிக்கறார், பாருங்களேன்...


மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுத் தரும் கணவர்கள் பாடு சங்கடம்தான் என்றால் பாதசாரிகள் பாடு அதைவிடப் பெரும்பாடு போலருக்கே...


அந்தக் காலத்து ஆராய்ச்சி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது இந்தக் காலத்தில் நமக்கு...


இப்படி ஒரு கேள்வியைக் கேட்டது ஆசிரியரின் தப்புத் தானே... ஹா... ஹா...



ந்தக் காலத்துல இருந்து இந்தக காலம் வரை கணவன் மார்களை மனைவிகளைக் கலாய்க்கும் ஜோக்குகள் சிரஞ்சீவிதான் போலும்..!


கதைகளில் தான் எழுத்தாளர்கள் கடி கடி என்று கடித்துத் தள்ளுவார்கள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இவர் வாசகரை எப்படிக் கடிக்கிறார் பாருங்கள்...


பத்திரிகை ஆசிரியர்கள் பாடு எப்பவுமே தலைவலியானதுதான். ஒரு தலைவலியை இவர் எப்படி சமாளிக்கறார், பாருங்களேன்...


மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுத் தரும் கணவர்கள் பாடு சங்கடம்தான் என்றால் பாதசாரிகள் பாடு அதைவிடப் பெரும்பாடு போலருக்கே...


அந்தக் காலத்து ஆராய்ச்சி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது இந்தக் காலத்தில் நமக்கு...


இப்படி ஒரு கேள்வியைக் கேட்டது ஆசிரியரின் தப்புத் தானே... ஹா... ஹா...