கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, June 30, 2012

னந்த விகடன் சில காலம் ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வார இதழை வெளியிட்டு வந்தது. நியூஸ் பேப்பரின் டேப்ளாயிட் சைஸில் இருக்கும் அதில் கதை, கட்டுரை, ஜோக்ஸ் என்று ஏராளமான அம்சங்களுடன் படிக்கும் சுவாரஸ்யமும் குறையாமல் இருந்தது. மதன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அந்தப் பத்திரிகையில் ‘சுஜாதாவின் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் வாரா வாரம் சுவாரஸ்ய சிறு கட்டுரைகள் எழுதினார் சுஜாதா. அவற்றையெல்லாம் தொகுத்து விகடன் பிரசுரம் ‘சுஜாதாட்ஸ்’ என்ற புத்தகமாக 2007ம் ஆண்டு வெளியிட்டார்கள். இதுவரை படித்திரா விட்டால் உடன் வாங்கிப் படித்து விடுங்கள். அத்தனை கட்டுரையும் முத்துக்கள். அதிலிருந்து சாம்பிளுக்கு ஒன்றே ஒன்றை இங்கே தருகிறேன்.

                        சிறுகதைக்கு கதை தேவையா..?

சிறுகதை பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A Short fictional narrative in prose. மற்ற எந்த வரையறைகளுக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.

2. இதில் நல்ல சிறுகதை என்பது?

நல்ல சிறுகதை என்பது சிறிதாக, சிறப்பாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.

3. ‘சிறப்பாக’ என்கிற வார்த்தை அவசியமா?

அப்படித்தான் நான் நினைக்கிறேன். கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள். ஒரு கதை ஜீவித்திருக்க, அது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

4. சிறுகதையின் அளவுகோல் என்ன? வார்த்‌தைகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடுவார்களா?

சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லப்பட வேண்டுமென்று குத்துமதிப்பாகச் சொல்லலாம்.

5. அளவு வரையறை எதற்கு?

அதை ஒரு வழிகாட்டியாகத்தான் சொல்ல வேண்டும். நூறு பக்கங்கள் இருந்தால் அதை எனக்கு சிறுகதை என்று ஒப்புக் கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. அதேபோல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதையல்ல, கதைச் சுருக்கம். அதற்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லி விடலாம்.

6. அளவு வரையறை தேவைதானா?

தேவையில்லை என்று நவீன விமர்சகர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக ஜாய்ஸின் ‘யுலிஸ்ஸிஸ்’ஸை (768 பக்கங்கள்) ஒரு சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்கள் இந்த அளவு வரையறையைக் கடைப்பிடிப்பது நல்லது.

7. சிறுகதைக்கு கதை தேவையா?

நல்ல கேள்வி. கதை தேவையா என்பதையும் இப்போது சந்தேகிக்கிறார்கள். ஆர்வெல்லின் 'A Hanging' என்னும் கட்டுரையை சிறுகதையாகப் பார்க்கிறவர்களும் உண்டு.

8. சிறுகதை எதைப் பற்றி இருக்கலாம்?

யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் இருக்கலாம்.

9. காலம்?

நூற்றாண்டுக் காலத்தையோ, சில நிமிடங்களையோ சொல்லலாம்.

10. கதை மாந்தர்கள்?

கறுப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, வயசானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ தர்மகர்த்தாக்களோ, நாய் வளர்ப்பவர்களோ பாய் முடைபவர்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளோ, மீசைக்காரர்களோ ஆசைக்கு அலைபவர்களோ, மீன் பிடிப்பவர்களோ பஸ் பிடிப்பவர்களோ, சினிமா பார்ப்பவர்களோ இனிமா எடுப்பவர்களோ -எந்தக் கதாபாத்திரமும் அதற்குத் தடையில்லை. மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம். அப்படி ஒரு விஞ்ஞானக் கதை இருக்கிறது.

11. கதையை எப்படிச் சொல்ல வேண்டும்?

கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர... படிபபவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

12. இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவு்ம் இருக்காதே?

இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம்தான் எனக்குத் தெரிந்தது. படித்த இரண்டு நிமிடத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையில்லை- பஸ் டிக்கெட்! ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவர்களிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

13. எப்படிச் சொல்கிறீர்கள்?

அனுபவத்தில்தான். நான் 1979ல் எழுதிய சிறுகதைகளை இப்போது யாராவது நினைவு வைத்துக் கொண்டு சொல்லும் போது எனக்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை.

14. எனவே?

நல்ல சிறுகதைகள் காலத்தையும், அன்றாட அவசரத்தையும் கடக்கின்றன.

15. இது பேருக்குப் பேர் வேறுபடும் அல்லவா?

நிச்சயம். எனக்கு நல்ல கதை உங்களுக்கு நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு கதை உங்களை எந்த விதத்திலும் பாதித்திருந்தால் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் விட்டுக்கூட அதை உங்களால் திருப்பிச் சொல்ல முடியும்.

16. அப்படியென்றால், நல்ல ஞாபகம் உள்ளவர்கள் நல்ல ரசிகர்கள் என்பீர்களா?

இது ஞாபகப் பிரச்னை அல்ல. கதையின் பெயர்கள், இடம், பொருள், ஏற்பாடெல்லாம் ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் கதையின் அடிநாதம். அதில் பாதித்த ஒரு கருத்தோ, வரியோ நிச்சயம் நினைவிருக்கும்.

17. அப்படி நினைவு இல்லையென்றால்?

அப்படி இல்லையென்றால் அந்தக் கதை உங்களைப் பொறுத்தவரை தோல்விதான்.

18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று ‌‌சொல்லலாமா?

ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப் போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்குப் புரிகிறது. கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ விட முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ‌ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.

19. அதற்குக் கதை புரிய வேண்டும் அல்லவா?

ஆம். கதை வாசகருக்குப் புரிய வேண்டியது மிக முக்கியம் எனக் கருதுபவன் நான்.

20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?

அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

                                                                                    -ஜூனியர் போஸ்ட், 27.3.1998

னந்த விகடன் சில காலம் ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வார இதழை வெளியிட்டு வந்தது. நியூஸ் பேப்பரின் டேப்ளாயிட் சைஸில் இருக்கும் அதில் கதை, கட்டுரை, ஜோக்ஸ் என்று ஏராளமான அம்சங்களுடன் படிக்கும் சுவாரஸ்யமும் குறையாமல் இருந்தது. மதன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அந்தப் பத்திரிகையில் ‘சுஜாதாவின் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் வாரா வாரம் சுவாரஸ்ய சிறு கட்டுரைகள் எழுதினார் சுஜாதா. அவற்றையெல்லாம் தொகுத்து விகடன் பிரசுரம் ‘சுஜாதாட்ஸ்’ என்ற புத்தகமாக 2007ம் ஆண்டு வெளியிட்டார்கள். இதுவரை படித்திரா விட்டால் உடன் வாங்கிப் படித்து விடுங்கள். அத்தனை கட்டுரையும் முத்துக்கள். அதிலிருந்து சாம்பிளுக்கு ஒன்றே ஒன்றை இங்கே தருகிறேன்.

                        சிறுகதைக்கு கதை தேவையா..?

சிறுகதை பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A Short fictional narrative in prose. மற்ற எந்த வரையறைகளுக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.

2. இதில் நல்ல சிறுகதை என்பது?

நல்ல சிறுகதை என்பது சிறிதாக, சிறப்பாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.

3. ‘சிறப்பாக’ என்கிற வார்த்தை அவசியமா?

அப்படித்தான் நான் நினைக்கிறேன். கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள். ஒரு கதை ஜீவித்திருக்க, அது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

4. சிறுகதையின் அளவுகோல் என்ன? வார்த்‌தைகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடுவார்களா?

சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லப்பட வேண்டுமென்று குத்துமதிப்பாகச் சொல்லலாம்.

5. அளவு வரையறை எதற்கு?

அதை ஒரு வழிகாட்டியாகத்தான் சொல்ல வேண்டும். நூறு பக்கங்கள் இருந்தால் அதை எனக்கு சிறுகதை என்று ஒப்புக் கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. அதேபோல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதையல்ல, கதைச் சுருக்கம். அதற்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லி விடலாம்.

6. அளவு வரையறை தேவைதானா?

தேவையில்லை என்று நவீன விமர்சகர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக ஜாய்ஸின் ‘யுலிஸ்ஸிஸ்’ஸை (768 பக்கங்கள்) ஒரு சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்கள் இந்த அளவு வரையறையைக் கடைப்பிடிப்பது நல்லது.

7. சிறுகதைக்கு கதை தேவையா?

நல்ல கேள்வி. கதை தேவையா என்பதையும் இப்போது சந்தேகிக்கிறார்கள். ஆர்வெல்லின் 'A Hanging' என்னும் கட்டுரையை சிறுகதையாகப் பார்க்கிறவர்களும் உண்டு.

8. சிறுகதை எதைப் பற்றி இருக்கலாம்?

யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் இருக்கலாம்.

9. காலம்?

நூற்றாண்டுக் காலத்தையோ, சில நிமிடங்களையோ சொல்லலாம்.

10. கதை மாந்தர்கள்?

கறுப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, வயசானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ தர்மகர்த்தாக்களோ, நாய் வளர்ப்பவர்களோ பாய் முடைபவர்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளோ, மீசைக்காரர்களோ ஆசைக்கு அலைபவர்களோ, மீன் பிடிப்பவர்களோ பஸ் பிடிப்பவர்களோ, சினிமா பார்ப்பவர்களோ இனிமா எடுப்பவர்களோ -எந்தக் கதாபாத்திரமும் அதற்குத் தடையில்லை. மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம். அப்படி ஒரு விஞ்ஞானக் கதை இருக்கிறது.

11. கதையை எப்படிச் சொல்ல வேண்டும்?

கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர... படிபபவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

12. இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவு்ம் இருக்காதே?

இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம்தான் எனக்குத் தெரிந்தது. படித்த இரண்டு நிமிடத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையில்லை- பஸ் டிக்கெட்! ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவர்களிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

13. எப்படிச் சொல்கிறீர்கள்?

அனுபவத்தில்தான். நான் 1979ல் எழுதிய சிறுகதைகளை இப்போது யாராவது நினைவு வைத்துக் கொண்டு சொல்லும் போது எனக்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை.

14. எனவே?

நல்ல சிறுகதைகள் காலத்தையும், அன்றாட அவசரத்தையும் கடக்கின்றன.

15. இது பேருக்குப் பேர் வேறுபடும் அல்லவா?

நிச்சயம். எனக்கு நல்ல கதை உங்களுக்கு நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு கதை உங்களை எந்த விதத்திலும் பாதித்திருந்தால் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் விட்டுக்கூட அதை உங்களால் திருப்பிச் சொல்ல முடியும்.

16. அப்படியென்றால், நல்ல ஞாபகம் உள்ளவர்கள் நல்ல ரசிகர்கள் என்பீர்களா?

இது ஞாபகப் பிரச்னை அல்ல. கதையின் பெயர்கள், இடம், பொருள், ஏற்பாடெல்லாம் ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் கதையின் அடிநாதம். அதில் பாதித்த ஒரு கருத்தோ, வரியோ நிச்சயம் நினைவிருக்கும்.

17. அப்படி நினைவு இல்லையென்றால்?

அப்படி இல்லையென்றால் அந்தக் கதை உங்களைப் பொறுத்தவரை தோல்விதான்.

18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று ‌‌சொல்லலாமா?

ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப் போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்குப் புரிகிறது. கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ விட முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ‌ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.

19. அதற்குக் கதை புரிய வேண்டும் அல்லவா?

ஆம். கதை வாசகருக்குப் புரிய வேண்டியது மிக முக்கியம் எனக் கருதுபவன் நான்.

20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?

அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

                                                                                    -ஜூனியர் போஸ்ட், 27.3.1998

Monday, June 25, 2012


எம்.ஜி.ஆர் குண்டாகவோ ஒல்லியாகவோ இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் ஒரே சீராக உடல் பருமனை மெய்ன்டைன் செய்த அதிசய மனிதர் அவர் சுமாராக 65 கிலோ எடை இருந்திருப்பார் என்பது என் யூகம்.


கிளி போல மனைவி வேண்டுமென்று கேட்பார்கள். இங்கே கிளி போல் கணவர்...


இப்படி ஒரு புத்திசாலியை நீங்கள் சந்தித்ததுண்டா..?


இந்த புத்திசாலியைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலருக்கே இந்த புத்திசாலி...


இப்படியொருவன் விபரீதமாகப் பிச்சை எடுத்தால் நம்வீட்டுப் பெண்களின் பாடு...?


எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான், அவன் பாத்துப்பான்னு சொல்றவங்களையே இங்க அழகா நகைச்சுவையாக்கிட்டாங்க...


அடப் படுவாவி... இப்படிக்கூட காரணம் சொல்லுவானோ ஒருத்தன்..?




எம்.ஜி.ஆர் குண்டாகவோ ஒல்லியாகவோ இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் ஒரே சீராக உடல் பருமனை மெய்ன்டைன் செய்த அதிசய மனிதர் அவர் சுமாராக 65 கிலோ எடை இருந்திருப்பார் என்பது என் யூகம்.


கிளி போல மனைவி வேண்டுமென்று கேட்பார்கள். இங்கே கிளி போல் கணவர்...


இப்படி ஒரு புத்திசாலியை நீங்கள் சந்தித்ததுண்டா..?


இந்த புத்திசாலியைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலருக்கே இந்த புத்திசாலி...


இப்படியொருவன் விபரீதமாகப் பிச்சை எடுத்தால் நம்வீட்டுப் பெண்களின் பாடு...?


எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான், அவன் பாத்துப்பான்னு சொல்றவங்களையே இங்க அழகா நகைச்சுவையாக்கிட்டாங்க...


அடப் படுவாவி... இப்படிக்கூட காரணம் சொல்லுவானோ ஒருத்தன்..?



Saturday, June 23, 2012


‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி. இந்த ‘சிற்றன்னை’யை முழுமையாகப் படித்தால், புதுமைப்பித்தனின் மற்ற படைப்புகளையும் படித்துவிட விரும்பி தேடியலைவீர்கள் என்பது நிச்சயம்.

                            சிற்றன்னை
                                    - புதுமைப்பித்தன் -

சுந்தரவடிவேலு சர்வ கலாசாலையில் பி.ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பேப்பர் திருத்துபவர். மகன் ராஜா இறந்த பிறகு வேலை பார்‌க்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. குழந்தை குஞ்சுவின் பொருட்டும் (இரண்டாவது) மனைவி மரகதத்தின் பொருட்டும் வேலைக்குச் சென்று வருகிறார்.

சுந்தரவடிவேலுவின் வேலைக்காரனுக்கு லஞ்சம் கொடுத்து, திருத்திய பேப்பரில் தன் மார்க்கைப் பார்க்க ஆசைப்படும் மாணவன் ஒருவன் அவர் இல்லாத நேரம் வீட்டிற்கு வர, மரகதத்தின் அழகில் மயங்கி, காதலிப்பதாக உளறி, அவளிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடுகிறான். மரகதம் குழந்தை குஞ்சுவுடன் கொஞ்சி விளையாடியபடி மாடிக்குச் சென்று சுந்தரவடிவேலு வரும் வரை கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.

குஞ்சுவைப் பார்க்க அவள் தாத்தா வரப் போவதாக சுந்தரவடிவேலு சொல்கிறார். அவர் வேலைக்கச் சென்றபின் மரகதம் உறங்கிக் கொண்டிருக்க, பால்காரனிடம் தானே பால் வாங்கி சின்னம்மாவுக்கு காபி கலக்க எண்ணி சமையலறையை கொட்டிக் கவிழ்த்து அதகளம் செய்கிறது குஞ்சு. அதனால் கோபமாகும் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ஒரு பூனையைப் பிடித்து குழந்தையின் அருகில் கொண்டு வந்து பயமுறுத்துகிறாள். குழந்தை வீரிட்டு அலற, அப்போது வரும் சுந்தரவடிவேலு, மரகதத்தைத் தள்ளிவிட்டு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார். அந்த அதிர்ச்சியால் குஞ்சுவுக்கு ஏற்பட்ட ஜுரம் தெளிய மூன்று நாட்களாகிறது. மூன்று நாட்களும் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கிறார் சுந்தரவடிவேலு.

நான்காம் நாள் சுந்தரவடிவேலு வேலைக்குச் சென்று மா‌லை திரும்பும் வரை குஞ்சு வீட்டுக்குள் வராமல் தோட்டத்திலேயே விளையாடிய படி பொழுதைக் கழிக்கிறது. அதைக் கண்டு வருந்துகிறார் சுந்தரவடிவேலு. மனைவியையும் குழந்தையையும் சமாதானப்படுத்துகிறார். மறு நாள் வரும் தாத்தா. சுந்தரவடிவேலுவிடம் குழந்தையைத் தன்னுடன் கிராமத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். ரயில் நிலையத்திற்குச் சென்று மரகதமும், சுந்தரவடிவேலுவும் வழியனுப்புகின்றனர். ரயில் முன்னோக்கி நகர, கதை பின்னோக்கி நகர்கிறது.

சுந்தரவடிவேலுவின் இரண்டாவது திருமணம். சிறுவன் ராஜா உற்சாகமாக தன் வயதுச் சிறுவர்களுடனும் குஞ்சுவுடனும் விளையாடி மகிழ்கிறான். திருமணத்தின் பின் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ‘சித்தி’ என்ற அவள் திருத்துகிறாள். இரண்டு குழந்தைகளும் மரகதத்துடன் நன்கு பாசமாகப் பழக ஆரம்பிக்கின்றனர்.

ஒருநாள் புயல் வர, காற்றும் மழையும் கலந்து அடிக்கிறது. கோடைப் புயல் மின்னலும் இடியும் கிடுகிடு பாய்கின்றன. பால் வாங்கிவர, சிறுவன் ராஜாவிடம் குடையைக் கொடுத்து அனுப்புகிறாள் மரகதம். புயல் காற்றில் தத்தளிக்கும் சிறுவனை, குடையைக் கண்டு மிரண்ட மாடு ஒன்று முட்டி விடுகிறது. மாடு துரத்தியதில் குடையை வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு வரும் அவனை, குடையைத் தொலைத்ததுட்ன் பாலும் வாங்கி வராததற்காக மரதகம் அடிக்கிறாள்.

அப்போது சுந்தரவடிவேலு கடுங்கோபத்துடன் வீட்டினுள் வருகிறார். தான் எடுத்து வைக்கச் சொன்ன ஒரு முக்கியக் கடிதத்தை மறந்ததற்காக மரகதத்தைத் திட்டி, கன்னத்தில் அறைந்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். ராஜா குறுக்கே வந்து ஏதோ சொல்ல வர, தன்னிலை மறந்தவராய் அவனையும் பூட்ஸ் காலால் உதைத்துத் தள்ளி விட்டுப் போகிறார். அறை வாங்கிய கோபத்தில் மரகதம் தன் அறைக்குச் சென்று கதவைச் சார்த்திக் கொண்டுவிட, சுந்தரவடிவேலுவின் உதை வர்மத்தில் விழுந்ததால் துடிக்கிறான் ராஜா.

மாடு முட்டியது, மழையில் நனைந்த ஜுரம், சுந்தரவடிவேலுவின் உதை எல்லாம் சேர, கஷ்டப்பட்டு மாடி ஏறுகிறான். அவன் வலி புரியாத குழந்தை, அவனை மடியில் ‌படுக்க வைத்துத் தாலாட்ட, குழந்தையின் மேலேயே சரிந்து விழுந்து விடுகிறான் ராஜா. அவன் உயிர் பிரிகிறது. வீட்டுக்குத் திரும்பிய சுந்தரவடிவேலு நடந்தவற்றைக் கண்டு பேரதிரச்சி அடைகிறார்.

ராஜாவின் அந்திமக் காரியங்கள் முடிகிறது. தனிமையில் தன்னிரக்கத்துடன், ராஜாவின் மரணத்துக்குத் தானே காரணம் என்று சுந்தரவடிவேலு பேச, மரகதமோ, ராஜாவின் மரணத்துக்கு அவர் காரணமில்லை, தானே காரணம் என்கிறாள். தெருவில் ஒரு பிச்சைக்காரன் ‘உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்’ என்ற பொருளில் ஒரு பாடலை உச்ச ஸ்தாயியில் கர்ண கடூரமான குரலில் பாடியபடி செல்கிறான்.


‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி. இந்த ‘சிற்றன்னை’யை முழுமையாகப் படித்தால், புதுமைப்பித்தனின் மற்ற படைப்புகளையும் படித்துவிட விரும்பி தேடியலைவீர்கள் என்பது நிச்சயம்.

                            சிற்றன்னை
                                    - புதுமைப்பித்தன் -

சுந்தரவடிவேலு சர்வ கலாசாலையில் பி.ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பேப்பர் திருத்துபவர். மகன் ராஜா இறந்த பிறகு வேலை பார்‌க்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. குழந்தை குஞ்சுவின் பொருட்டும் (இரண்டாவது) மனைவி மரகதத்தின் பொருட்டும் வேலைக்குச் சென்று வருகிறார்.

சுந்தரவடிவேலுவின் வேலைக்காரனுக்கு லஞ்சம் கொடுத்து, திருத்திய பேப்பரில் தன் மார்க்கைப் பார்க்க ஆசைப்படும் மாணவன் ஒருவன் அவர் இல்லாத நேரம் வீட்டிற்கு வர, மரகதத்தின் அழகில் மயங்கி, காதலிப்பதாக உளறி, அவளிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடுகிறான். மரகதம் குழந்தை குஞ்சுவுடன் கொஞ்சி விளையாடியபடி மாடிக்குச் சென்று சுந்தரவடிவேலு வரும் வரை கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.

குஞ்சுவைப் பார்க்க அவள் தாத்தா வரப் போவதாக சுந்தரவடிவேலு சொல்கிறார். அவர் வேலைக்கச் சென்றபின் மரகதம் உறங்கிக் கொண்டிருக்க, பால்காரனிடம் தானே பால் வாங்கி சின்னம்மாவுக்கு காபி கலக்க எண்ணி சமையலறையை கொட்டிக் கவிழ்த்து அதகளம் செய்கிறது குஞ்சு. அதனால் கோபமாகும் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ஒரு பூனையைப் பிடித்து குழந்தையின் அருகில் கொண்டு வந்து பயமுறுத்துகிறாள். குழந்தை வீரிட்டு அலற, அப்போது வரும் சுந்தரவடிவேலு, மரகதத்தைத் தள்ளிவிட்டு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார். அந்த அதிர்ச்சியால் குஞ்சுவுக்கு ஏற்பட்ட ஜுரம் தெளிய மூன்று நாட்களாகிறது. மூன்று நாட்களும் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கிறார் சுந்தரவடிவேலு.

நான்காம் நாள் சுந்தரவடிவேலு வேலைக்குச் சென்று மா‌லை திரும்பும் வரை குஞ்சு வீட்டுக்குள் வராமல் தோட்டத்திலேயே விளையாடிய படி பொழுதைக் கழிக்கிறது. அதைக் கண்டு வருந்துகிறார் சுந்தரவடிவேலு. மனைவியையும் குழந்தையையும் சமாதானப்படுத்துகிறார். மறு நாள் வரும் தாத்தா. சுந்தரவடிவேலுவிடம் குழந்தையைத் தன்னுடன் கிராமத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். ரயில் நிலையத்திற்குச் சென்று மரகதமும், சுந்தரவடிவேலுவும் வழியனுப்புகின்றனர். ரயில் முன்னோக்கி நகர, கதை பின்னோக்கி நகர்கிறது.

சுந்தரவடிவேலுவின் இரண்டாவது திருமணம். சிறுவன் ராஜா உற்சாகமாக தன் வயதுச் சிறுவர்களுடனும் குஞ்சுவுடனும் விளையாடி மகிழ்கிறான். திருமணத்தின் பின் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ‘சித்தி’ என்ற அவள் திருத்துகிறாள். இரண்டு குழந்தைகளும் மரகதத்துடன் நன்கு பாசமாகப் பழக ஆரம்பிக்கின்றனர்.

ஒருநாள் புயல் வர, காற்றும் மழையும் கலந்து அடிக்கிறது. கோடைப் புயல் மின்னலும் இடியும் கிடுகிடு பாய்கின்றன. பால் வாங்கிவர, சிறுவன் ராஜாவிடம் குடையைக் கொடுத்து அனுப்புகிறாள் மரகதம். புயல் காற்றில் தத்தளிக்கும் சிறுவனை, குடையைக் கண்டு மிரண்ட மாடு ஒன்று முட்டி விடுகிறது. மாடு துரத்தியதில் குடையை வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு வரும் அவனை, குடையைத் தொலைத்ததுட்ன் பாலும் வாங்கி வராததற்காக மரதகம் அடிக்கிறாள்.

அப்போது சுந்தரவடிவேலு கடுங்கோபத்துடன் வீட்டினுள் வருகிறார். தான் எடுத்து வைக்கச் சொன்ன ஒரு முக்கியக் கடிதத்தை மறந்ததற்காக மரகதத்தைத் திட்டி, கன்னத்தில் அறைந்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். ராஜா குறுக்கே வந்து ஏதோ சொல்ல வர, தன்னிலை மறந்தவராய் அவனையும் பூட்ஸ் காலால் உதைத்துத் தள்ளி விட்டுப் போகிறார். அறை வாங்கிய கோபத்தில் மரகதம் தன் அறைக்குச் சென்று கதவைச் சார்த்திக் கொண்டுவிட, சுந்தரவடிவேலுவின் உதை வர்மத்தில் விழுந்ததால் துடிக்கிறான் ராஜா.

மாடு முட்டியது, மழையில் நனைந்த ஜுரம், சுந்தரவடிவேலுவின் உதை எல்லாம் சேர, கஷ்டப்பட்டு மாடி ஏறுகிறான். அவன் வலி புரியாத குழந்தை, அவனை மடியில் ‌படுக்க வைத்துத் தாலாட்ட, குழந்தையின் மேலேயே சரிந்து விழுந்து விடுகிறான் ராஜா. அவன் உயிர் பிரிகிறது. வீட்டுக்குத் திரும்பிய சுந்தரவடிவேலு நடந்தவற்றைக் கண்டு பேரதிரச்சி அடைகிறார்.

ராஜாவின் அந்திமக் காரியங்கள் முடிகிறது. தனிமையில் தன்னிரக்கத்துடன், ராஜாவின் மரணத்துக்குத் தானே காரணம் என்று சுந்தரவடிவேலு பேச, மரகதமோ, ராஜாவின் மரணத்துக்கு அவர் காரணமில்லை, தானே காரணம் என்கிறாள். தெருவில் ஒரு பிச்சைக்காரன் ‘உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்’ என்ற பொருளில் ஒரு பாடலை உச்ச ஸ்தாயியில் கர்ண கடூரமான குரலில் பாடியபடி செல்கிறான்.

Tuesday, June 19, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இதற்கான செய்தியும் உங்களுக்குப் புதிதாக இருக்கும் என நினைக்கிறேன். (Control மற்றும் + கீயை அழுத்தி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளவும்.)


நான் ரசித்துச் சிரித்த இந்த ஜோக்குகள் உங்களைச் சிரிக்க வைக்காம போயிடுமா என்ன...?




‘சிவாஜி’ நாடகத்துக்கான போஸ்டர்! இதோட ஆண்டைப் பாக்கறப்ப நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு தோணிச்சு.



கொறிக்க... இன்னும் கொஞ்சம் ஜோக்ஸ்:







புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இதற்கான செய்தியும் உங்களுக்குப் புதிதாக இருக்கும் என நினைக்கிறேன். (Control மற்றும் + கீயை அழுத்தி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளவும்.)


நான் ரசித்துச் சிரித்த இந்த ஜோக்குகள் உங்களைச் சிரிக்க வைக்காம போயிடுமா என்ன...?




‘சிவாஜி’ நாடகத்துக்கான போஸ்டர்! இதோட ஆண்டைப் பாக்கறப்ப நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு தோணிச்சு.



கொறிக்க... இன்னும் கொஞ்சம் ஜோக்ஸ்:







Thursday, June 14, 2012

ல்கி வார இதழில் நல்ல இலக்கியக் கதைகளும், கட்டுரைகளும் வந்‌ததைப் போல அந்நாட்களில் ரசிக்கும் படியான நிறைய ஜோக்குகளும் வந்திருக்கின்றன. அந்தத் துணுக்குகளும், அவற்றுக்கு வரையப்பட்டிருந்த படங்களும் என்‌னை ரசித்துச் சிரிக்க வைத்தன. 1961ம் ஆண்டு கல்கி இதழ்களிலிருந்து தொகுத்திருக்கும் சில ஜோக்குகள் இங்கை நீங்கள் ரசிப்பதற்காக. பிடித்திருக்கிறதா சொல்லுங்கள். இன்னும் சில ஜோக்குகள் கத்தரித்து வைத்திருக்கிறேன். பின்னர் தருகிறேன்.







ல்கி வார இதழில் நல்ல இலக்கியக் கதைகளும், கட்டுரைகளும் வந்‌ததைப் போல அந்நாட்களில் ரசிக்கும் படியான நிறைய ஜோக்குகளும் வந்திருக்கின்றன. அந்தத் துணுக்குகளும், அவற்றுக்கு வரையப்பட்டிருந்த படங்களும் என்‌னை ரசித்துச் சிரிக்க வைத்தன. 1961ம் ஆண்டு கல்கி இதழ்களிலிருந்து தொகுத்திருக்கும் சில ஜோக்குகள் இங்கை நீங்கள் ரசிப்பதற்காக. பிடித்திருக்கிறதா சொல்லுங்கள். இன்னும் சில ஜோக்குகள் கத்தரித்து வைத்திருக்கிறேன். பின்னர் தருகிறேன்.







Saturday, June 9, 2012

ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. இந்த நிகழ்வினை மையமாக வைத்து ‘திருவரங்கன் உலா’ மற்றும் ‘மதுரா விஜயம்’ என்கிற இரண்டு பெரிய நாவல்களை எழுதியிருந்தார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன். ஸ்ரீரங்கநாதர் உலாப் போன இடங்களையும் அவரைக் காப்பாற்றிக் கொண்டு வர தொண்டர்கள் பட்ட பாட்டையும் அந்தக் கதைகளில்  விவரித்திருந்தார்.

ஸ்ரீரங்கநாதர் அப்படி உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட ‘அபரஞ்சிப் பொன்’னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய  ‘ரங்கராட்டினம்’ என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ‘ஐந்து குழி, மூன்று வாசல்’ என்கிற விஷயம் புகழ்பெற்றது. ரங்கநாதர் வருகிறாரா என்று தாயார் கையை ஊன்றிப் பார்த்ததால் ஏற்பட்டதுதான் அந்த ஐந்து குழிகள் என்று சொல்வார்கள். உண்மயையில் பஞ்சேந்திரியங்கள் என்கிற படுகுழிகளை அடக்கி, ‘சித் அசித் ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால் தாயார் நமக்கு பரமபதத்தை அடைய வழிசெய்வாள் என்பதைக் குறிக்கவே ‘அந்த ஐந்து குழி மூன்று வாசல்’ அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித் தெளிவாக நாவலில் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஒரு குழி ஹொய்சாளர்களி்ன அழிவு, ஒரு குழி பாண்டிய சாம்ராஜ்யத்தின் சரிவு என்றெல்லாம் விவரித்துக் கொண்டே வந்துவிட்டு ஐந்தாவது குழிக்குத் தந்திருக்கும் விவரணம் பிரமிக்க வைக்கிறது.

ஹொய்சள நாட்டில் (கி.பி.1523) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது. அந்தப் பொன்னைப் பற்றிய விவரம் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் படையெடுத்து வந்து அபகரிக்கப் பார்ப்பான் என்பதால் அவனுக்குத் தெரியாமல் மறைக்க நினைக்கிறார்கள் ஹொய்சளர்கள். பாண்டியனுக்குத் தெரிந்து விட, யுத்தம் ஏற்பட்டு ‌ஹொய்சள மன்னன் கொல்லப்படுகிறான். பாண்டியன் தங்கத்தை அபகரிக்கிறான். அதைக் கொண்டு திருவரங்கனுக்கு ஒரு பிரதிமை செய்துதர பாண்டியன் விரும்புகிறான். பாண்டியன் செய்த ‌‘ப‌ொன் வேய்ந்த பெருமாள்’ விக்ரகத்தை அரங்கன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்க மறுக்கின்றனர் தொடரும் நிகழ்வுகளில் அந்தப் பொன் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அழிவு்க்கு எப்படிக் காரணமானது என்பதும், சுல்தான்கள் படையெடுப்பினால் ரங்கநாதர் மறைந்துறைய வேண்டிய அவசியம் நேரிட்டதும், பொன் வேய்ந்த பெருமாளின் பின்னைய நிலையும் விவரிக்கப்படுகிறது. நாவலில். அதை நீங்கள் அவசியம் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலிபுருஷன், பரீக்ஷித்து மகாராஜாவிடம் வந்து ‘‘கலியு்த்தில் என் சாம்ராஜ்யம் பரவ வேண்டும். அதற்க மக்கள் மனது பேதலிக்க வேண்டும். அதற்காக நான்கு இடங்களை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். மக்களின் மதியை மயக்கப் போகும் அவை: ஜீக்தம் (சூதாட்டம்), பானம் (மது), ஸ்திரீ (பெண்). சூன; (மாமிசம்) ஆகியவை. ஆனால் அவை போதாது. பெரிய அளவில் மக்கள் மனதை பேதலிககச் செய்ய ஒரு சாதனம் தேவை. அது என்னவென்பதை நீங்கள் சொல்லி உத‌வ வேண்டும்’’ என்று கேட்டார். பரீக்ஷித்து யோசித்துக் கொண்டே தன் இடக்கையில் அணிந்திருந்த சுவர்ண கணயாழியை வலக்கரத்தால் திருகிக் கொண்டேயிருந்தார். அது அவர் கையிலிருந்து நழுவி உருண்டோடி கலியின் காலடியில் விழுந்தது. அதைக் கையிலெடுத்த கலி ‘‘நல்லது மகாராஜா! அந்த ஐந்தாவது இடமாக சுவர்ணத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். இனி சுவர்ணத்தால் மக்கள் புத்தி பேதலித்து கொடுமைகள் புரிவார்கள்’’ என்று கூறி மறைந்தான்.

இந்த ஸ்வர்ணத்தின் காரணத்தால் ஏற்படும் மோதல்களையும், துரோகங்களையும், அநீதிக்கெதிரான நேர்மையாளர்களின் போராட்டங்களையும், அதற்கு அவர்கள் செய்த தியாகத்தையும், இடையில் மெல்லிய ஊடுபாவாக காதலையும் கதாசிரியர் விவரித்துச் சென்றுள்ள அழகு படிக்கையிலேயே மனதை வசிகரிக்கிறது. ஆசிரியரின் கூற்றுப்படி : நமது தர்மத்தை யார் காத்து நம்மிடம் கொடுத்துள்ளனரோ அவர்கள் தங்களை மகான்கள் என்றோ அவதார புருஷர்கள் என்றோ ஒருநாளும் கூறிக் கொண்டதில்லை. காடுகளிலும், மேடுகளிலும், குளிரிலும், வெயிலிலும் அலைந்து நூறு வயதைக் கடந்த ஒரு ஒப்பற்ற மகான் திருவரங்க அமுதனைக் காத்து நமக்குத் தந்திருக்கிறார். அவரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ‘நான்தான் கடவுள்’ என்று கூறிக் கொண்டு ஃபோர்ட் ஐகான் காரில் செல்பவர்கள் பின்னே மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். -இந்தநாவல் அத்தகைய அடியவர்களின தியாகங்களை எடுத்துரைப்பதைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.

திருவரங்கத்தின் கிழக்கு கோபுரம் ‘வெள்ளாயி கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதற்குப் பின்னணியில் நிற்பது வெள்ளாயி செய்த தியாகம். அந்த வெள்ளாயி யார் என்பதையும், எப்படி அவள் தன்னைத் தியாகம் செய்து அரங்கனைக் காப்பதற்குத் துணை நின்றாள் என்பதையும் வெகு அழகாக இந்த நூலில விவரித்திருக்கிறார் நூலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா. அதுமட்டுமின்றி ‘மகரநெடுங்குழைக் காதர்’ ‘மெஹர் டுங் காதர்’ ஆக மாறிய விதத்தையும் இவரின் விவரணத்தில் படிக்கையில் ஏற்படுகிறது பிரமிப்பு!

இப்படி வியப்பு, மெய்சிலிர்ப்பு, பிரமிப்ப போன்ற கலவையான பலவித உணர்ச்சிகளுக்கு என்னை ஆட்படுத்திய இந்த ‘ரங்கராட்டினம்’ நாவல் அனைவரும் படித்தே தீர வேண்டிய நாவல்களில் ஒன்று என்று நான் பரிந்துரைக்கிறேன். திருவரங்கத்திலிருந்து நூலாசிரியருக்கு போன் செய்த ஒரு மூதாட்டி, ‘இந்த நாவலை எழுதியதற்காகவே உனக்கு மோட்சம் கிடைக்கும்’ என்று கதறியபடி சொன்னார் என்றால் அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. இந்த நிகழ்வினை மையமாக வைத்து ‘திருவரங்கன் உலா’ மற்றும் ‘மதுரா விஜயம்’ என்கிற இரண்டு பெரிய நாவல்களை எழுதியிருந்தார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன். ஸ்ரீரங்கநாதர் உலாப் போன இடங்களையும் அவரைக் காப்பாற்றிக் கொண்டு வர தொண்டர்கள் பட்ட பாட்டையும் அந்தக் கதைகளில்  விவரித்திருந்தார்.

ஸ்ரீரங்கநாதர் அப்படி உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட ‘அபரஞ்சிப் பொன்’னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய  ‘ரங்கராட்டினம்’ என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ‘ஐந்து குழி, மூன்று வாசல்’ என்கிற விஷயம் புகழ்பெற்றது. ரங்கநாதர் வருகிறாரா என்று தாயார் கையை ஊன்றிப் பார்த்ததால் ஏற்பட்டதுதான் அந்த ஐந்து குழிகள் என்று சொல்வார்கள். உண்மயையில் பஞ்சேந்திரியங்கள் என்கிற படுகுழிகளை அடக்கி, ‘சித் அசித் ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால் தாயார் நமக்கு பரமபதத்தை அடைய வழிசெய்வாள் என்பதைக் குறிக்கவே ‘அந்த ஐந்து குழி மூன்று வாசல்’ அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித் தெளிவாக நாவலில் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஒரு குழி ஹொய்சாளர்களி்ன அழிவு, ஒரு குழி பாண்டிய சாம்ராஜ்யத்தின் சரிவு என்றெல்லாம் விவரித்துக் கொண்டே வந்துவிட்டு ஐந்தாவது குழிக்குத் தந்திருக்கும் விவரணம் பிரமிக்க வைக்கிறது.

ஹொய்சள நாட்டில் (கி.பி.1523) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது. அந்தப் பொன்னைப் பற்றிய விவரம் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் படையெடுத்து வந்து அபகரிக்கப் பார்ப்பான் என்பதால் அவனுக்குத் தெரியாமல் மறைக்க நினைக்கிறார்கள் ஹொய்சளர்கள். பாண்டியனுக்குத் தெரிந்து விட, யுத்தம் ஏற்பட்டு ‌ஹொய்சள மன்னன் கொல்லப்படுகிறான். பாண்டியன் தங்கத்தை அபகரிக்கிறான். அதைக் கொண்டு திருவரங்கனுக்கு ஒரு பிரதிமை செய்துதர பாண்டியன் விரும்புகிறான். பாண்டியன் செய்த ‌‘ப‌ொன் வேய்ந்த பெருமாள்’ விக்ரகத்தை அரங்கன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்க மறுக்கின்றனர் தொடரும் நிகழ்வுகளில் அந்தப் பொன் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அழிவு்க்கு எப்படிக் காரணமானது என்பதும், சுல்தான்கள் படையெடுப்பினால் ரங்கநாதர் மறைந்துறைய வேண்டிய அவசியம் நேரிட்டதும், பொன் வேய்ந்த பெருமாளின் பின்னைய நிலையும் விவரிக்கப்படுகிறது. நாவலில். அதை நீங்கள் அவசியம் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலிபுருஷன், பரீக்ஷித்து மகாராஜாவிடம் வந்து ‘‘கலியு்த்தில் என் சாம்ராஜ்யம் பரவ வேண்டும். அதற்க மக்கள் மனது பேதலிக்க வேண்டும். அதற்காக நான்கு இடங்களை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். மக்களின் மதியை மயக்கப் போகும் அவை: ஜீக்தம் (சூதாட்டம்), பானம் (மது), ஸ்திரீ (பெண்). சூன; (மாமிசம்) ஆகியவை. ஆனால் அவை போதாது. பெரிய அளவில் மக்கள் மனதை பேதலிககச் செய்ய ஒரு சாதனம் தேவை. அது என்னவென்பதை நீங்கள் சொல்லி உத‌வ வேண்டும்’’ என்று கேட்டார். பரீக்ஷித்து யோசித்துக் கொண்டே தன் இடக்கையில் அணிந்திருந்த சுவர்ண கணயாழியை வலக்கரத்தால் திருகிக் கொண்டேயிருந்தார். அது அவர் கையிலிருந்து நழுவி உருண்டோடி கலியின் காலடியில் விழுந்தது. அதைக் கையிலெடுத்த கலி ‘‘நல்லது மகாராஜா! அந்த ஐந்தாவது இடமாக சுவர்ணத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். இனி சுவர்ணத்தால் மக்கள் புத்தி பேதலித்து கொடுமைகள் புரிவார்கள்’’ என்று கூறி மறைந்தான்.

இந்த ஸ்வர்ணத்தின் காரணத்தால் ஏற்படும் மோதல்களையும், துரோகங்களையும், அநீதிக்கெதிரான நேர்மையாளர்களின் போராட்டங்களையும், அதற்கு அவர்கள் செய்த தியாகத்தையும், இடையில் மெல்லிய ஊடுபாவாக காதலையும் கதாசிரியர் விவரித்துச் சென்றுள்ள அழகு படிக்கையிலேயே மனதை வசிகரிக்கிறது. ஆசிரியரின் கூற்றுப்படி : நமது தர்மத்தை யார் காத்து நம்மிடம் கொடுத்துள்ளனரோ அவர்கள் தங்களை மகான்கள் என்றோ அவதார புருஷர்கள் என்றோ ஒருநாளும் கூறிக் கொண்டதில்லை. காடுகளிலும், மேடுகளிலும், குளிரிலும், வெயிலிலும் அலைந்து நூறு வயதைக் கடந்த ஒரு ஒப்பற்ற மகான் திருவரங்க அமுதனைக் காத்து நமக்குத் தந்திருக்கிறார். அவரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ‘நான்தான் கடவுள்’ என்று கூறிக் கொண்டு ஃபோர்ட் ஐகான் காரில் செல்பவர்கள் பின்னே மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். -இந்தநாவல் அத்தகைய அடியவர்களின தியாகங்களை எடுத்துரைப்பதைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.

திருவரங்கத்தின் கிழக்கு கோபுரம் ‘வெள்ளாயி கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதற்குப் பின்னணியில் நிற்பது வெள்ளாயி செய்த தியாகம். அந்த வெள்ளாயி யார் என்பதையும், எப்படி அவள் தன்னைத் தியாகம் செய்து அரங்கனைக் காப்பதற்குத் துணை நின்றாள் என்பதையும் வெகு அழகாக இந்த நூலில விவரித்திருக்கிறார் நூலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா. அதுமட்டுமின்றி ‘மகரநெடுங்குழைக் காதர்’ ‘மெஹர் டுங் காதர்’ ஆக மாறிய விதத்தையும் இவரின் விவரணத்தில் படிக்கையில் ஏற்படுகிறது பிரமிப்பு!

இப்படி வியப்பு, மெய்சிலிர்ப்பு, பிரமிப்ப போன்ற கலவையான பலவித உணர்ச்சிகளுக்கு என்னை ஆட்படுத்திய இந்த ‘ரங்கராட்டினம்’ நாவல் அனைவரும் படித்தே தீர வேண்டிய நாவல்களில் ஒன்று என்று நான் பரிந்துரைக்கிறேன். திருவரங்கத்திலிருந்து நூலாசிரியருக்கு போன் செய்த ஒரு மூதாட்டி, ‘இந்த நாவலை எழுதியதற்காகவே உனக்கு மோட்சம் கிடைக்கும்’ என்று கதறியபடி சொன்னார் என்றால் அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

Tuesday, June 5, 2012

னந்த விகடன் - அன்றிலிருந்து இன்று வரை நகைச்சுவைக்குப் பெயர் பெற்ற இதழ். 60களில் வெளியான பழைய ஆனந்த விகடன் இதழிலிருந்து எடுத்து இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் என்னை ரசித்துச் சிரிக்க வைத்தன. உங்களை...?


னந்த விகடன் - அன்றிலிருந்து இன்று வரை நகைச்சுவைக்குப் பெயர் பெற்ற இதழ். 60களில் வெளியான பழைய ஆனந்த விகடன் இதழிலிருந்து எடுத்து இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் என்னை ரசித்துச் சிரிக்க வைத்தன. உங்களை...?


Friday, June 1, 2012

‘ரங்கநதி’ - இந்தத் தலைப்புக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதத்தை நனைத்து ஓடுவதால் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, நாவலின் நாயகன் ரங்கனுக்கு வாழ்வாதாரமாய் இருந்து அன்னையாய் மாறும் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, இரண்டுமே மிகப் பொருத்தமானவைதான். சில கதைகளை எழுத்தாளர்கள் எழுதுவார்கள். சில கதைகளோ எழுத்தாளர்களைக் கொண்டு தாங்களே வெளிப்பட்டு விடும். இந்த ‘ரங்கநதி’ அப்படித்தான். இந்திரா செளந்தர்ராஜனின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்றாகத்தான் எனக்குத் தோன்றியது.

காவிரி ஆறு சில சமயங்களில் காதல் பேசும் குமரியென அமைதியாய் நடையிடுவாள். சில சமயங்களிலோ ரெளத்திரம் கொண்ட கண்ணகி போன்று சீறிப் பாய்ந்து வந்து தன்னில் குளி்க்க வரும் உயிர்களைப் பலிகொண்டு விடுவாள். அப்படி காவிரியின் வெள்ளத்தால் யாராவது இழுத்துச் செல்லப்பட்டால், ‘ரங்கனைக் கூப்பிடு’ என்பார்கள். முடிந்தால் .உயிருடனோ, இல்லையேல் பிணமாகவோ காவிரியில் மூழ்கிக் கொண்டு வந்து விடுவான். இதுதான் ரங்கனின் தொழில்.

சக்கரவர்த்தி ஐயங்கார் பெரும் செல்வந்தர். ஊரில் மதிப்புப் பெற்ற பெரிய மனிதர்ளில் ஒருவர். அவருடைய மகள் மைதிலி ஒருமுறை ஆற்றில் குளிக்க வர, ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொள்ள, அதைப் பார்க்கும் ரங்கன், நதியில் பாய்ந்து நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான். அவள் உடை ஆற்றில் போய்விட ஆடையவற்ற வளாய் ஆன அவளுக்கு சிகிச்சை செய்து, மாற்றுடை தந்து அவள் வீட்டில் விட்டு சலனமில்லாமல் திரும்பிச் செல்கிறான். ஆனால் மைதிலியின் மனதில் அவன் புகுந்து விடுகிறான்.

மைதிலி, ரங்கனிடம் தன் காதலைச் சொல்ல, அவன் நிதர்சனம் புரிந்து மறு்க்கிறான். கோடீஸ்வரனின் மகள், ஊர் பெயரோ, பெற்றோர் பெயரோ தெரியாத  பிணந்தூக்கியான ரங்கனைக் காதலிக்கிறாள் என்றால் பிரச்சனைகள் வராமல் இருக்குமா என்ன? ஆனால் ரங்கன் அனாதை இல்லை என்பதுதான் இங்கே சோகம். 

அவனைப் பெற்றவர், அதே ஸ்ரீரங்கத்தில் பலரால் மதிக்கப்படும், ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். தன் கண் முன்னாலேயே தன் மூத்த மகன் ‘பிணந்தூக்கி’யாக வாழ்வதைப் பார்த்து மனதிற்குள் குமையும்படியான ஒரு சூழலில் இருக்கிறார்.அவருக்கு மனக்குழப்பம் நேரிடும் போதெல்லாம் ஆறுதல் பெற அவர் நாடுவது ‘சிங்கராச்சாரியார்’ என்கிற ஒரு மகானை.

இப்படிக் கதையில் விழும் முடிச்சைத் தொடர்ந்து படிக்க ஆரம்பி்த்த என்னை ரங்கநதி இழுத்துச் சென்றது, புரட்டி்ப் போட்டது, ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் கீழே வைக்கச் செய்தது. இந்திரா செளந்தர்ராஜன் கதையின் மைய இழையாக காதலை வைத்திருந்தாலும் கதையினூடாக சிறு உறுத்தலும் இல்லாமல், திணிப்பாகத் தெரியாமல் பல சமூக விஷயங்களைக் கையாண்டிருக்கிறார். சுயநலம் சார்ந்த மனித உறவுகள், இயற்கையைச் சுரண்டும் மனிதனி்ன் பேராசை, போலி கெளரவம் பார்ப்பதால் பாதிக்கும் உறவுகள், பணத்தின் மீது வெறி கொண்டால் மற்றவர‌ை எண்ணாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்டு்த்தும் மனப்பாங்கு, பிரதிபலன் பாராமல் ஏற்படும் நட்புகள், உறவுகள்... இப்படி நிறைய விஷயங்களை நிறைவாகத் தொட்டுச் செல்கிறார் நூலாசிரியர்.

இந்த ‘ரங்கநதி’யில் வரும் அனைவரும் மனித வாழ்வின் இயல்புக்கு மீறாத பாத்திரங்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். ரவுடி இடும்பனுடன் மோதி அவனைத் தாக்கி, அவனால் கடுமையாகத் தாக்கப்படும் ‘ஹீரோ’ ரங்கன் (நான் என்ன ரஜினிகாந்த, விஜயகாந்தா- கண்ணு செவக்க டயலாக் பேசி சண்டைபோடுறதுக்கு), சொத்தின் மேல் ஆசை வைத்து மைதிலியின் காதலுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னும் அண்ணி ரேவதி, தன் கணவனைக் காப்பாற்றியதால் அனாதை ரங்கனை ‘அண்ணா’ என்றழைத்து (உண்மையில் அவன் அண்ணன் என்பதறியாமல்) பாசம் காட்டும் உஷா -இப்படி அனைத்துக் கதாபாத்திரங்களும் அவரவர் இயல்பின்படி பக்கத்து வீட்டு மனிதர்கள் போல படைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான விஷயம்.

எத்தனை பெரிய சுழலாக இருந்தாலும் நீந்தி உள்ளே மூழ்கியவற்றை எடுத்து வரும் ரங்கனை அந்த நதி எதுவும் செய்வதில்லை. அதன் ஆசி பெற்றவன் அவன். அந்த நதியில் மூழ்கி உயிர் விட்ட அவன் தாயின் ஆன்மா போல காவிரி அவனைக் காத்தாலும் அதை ‘ராட்சசி’ என்றே ரங்கன் கருதி திட்டும் முரண் வெகு சுவாரஸ்யம்.

 தன் நிலை உணர்ந்தவனாய் ‘காதல் என்கிற விஷயம் தன் வாழ்வில் இல்லை’ என்று மைதிலிக்குப் புத்தி சொல்லும் ரங்கனின் மனம் எப்போது மாற்றம் பெற்று அவளைக் காதலிக்கத் தொடங்குகிறது என்பதையும், ‘‘நதியா இவ? என் வரைல ராட்சசி’’ என்று காவிரியை தூஷிக்கும் ரங்கன் அவளை அன்னையாக உணரத் துவங்குவதையும் திணிப்பில்லாமல் இயல்பாக விவரித்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன்.

கதையின் ஊடாக அங்கங்கே தன்னுடைய சீரிய சிந்தகைனளையும் விதைக்கத் தவறவில்லை இந்திரா செளந்தர்ராஜன். இடும்பன் என்கிற கள்ளச்சாராய ரவுடியிடம் ரங்கன் பேசும் புள்ளிவிவரக் கணக்கு, சிங்கராச்சாரியாரை டி.வி. பேட்டி எடுக்கும் போது வெளிப்படும் கேள்வி பதில்கள் போன்று கதை நெடுகிலும் இந்திரா செளந்தர்ராஜனின் நற்கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.

எப்படிப் பார்த்தாலும் சுப முடிவு வராது சோக முடிவாத்தான் இருக்கும் என்று மனதை தயார்படு்த்திக் கொண்டு படிக்கையில் சுப முடிவையும் தந்து மகிழ்ச்சிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இடம் பெற்றிருக்கும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் (அவரே எழுதிய) கவிதைகள் இந்திரா செளந்தர்ராஜனின் ஆழ்ந்த தமிழறிவுக்குச் சான்றாக நிற்கின்றன.

‘ரங்கநதி’யின் அத்தியாயங்களில் குளி்த்தெழுந்தேன், சில அத்தியாயங்களில் மூச்சுத் திணறி காற்றுக்காய் போராடினேன், சில அத்தியாயங்களில் நீரினுள் ‘முங்கு நீச்சல்’ அடித்தேன்... இப்படி சுவாரஸ்யமான நதிக்குளியல் அனுபவ்ததை எனக்குத் தந்தது இந்த ‘ரங்கநதி’. ‘திருமகள் நிலையம்’ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ.275 என்பது ஒன்றுதான் கடினமான விஷயம். ஆனால் நூலின் உள்ளடக்கத்திற்காக இதை பொருட்படுத்தாமல் வாங்கி வாசிக்கலாம் என்பதே என் கருத்து.

பின்குறிப்பு: நான் படித்து வியந்து உங்களைப் படிக்கச் சொல்லும் இந்த ‘ரங்கநதி’ ஸ்ரீரங்கத்துக் கதை. அடுத்ததாக எழுதவிருக்கும் பு்த்தகமும் ஸ்ரீரங்கக் கதைதான். இதிலாவது ரங்கன் என்பவன் கதாநாயக்ன். அந்தக் கதையிலோ ஸ்ரீரங்கத்து ரங்கநாதனே கதாநாயகன்! பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா!

‘ரங்கநதி’ - இந்தத் தலைப்புக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதத்தை நனைத்து ஓடுவதால் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, நாவலின் நாயகன் ரங்கனுக்கு வாழ்வாதாரமாய் இருந்து அன்னையாய் மாறும் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, இரண்டுமே மிகப் பொருத்தமானவைதான். சில கதைகளை எழுத்தாளர்கள் எழுதுவார்கள். சில கதைகளோ எழுத்தாளர்களைக் கொண்டு தாங்களே வெளிப்பட்டு விடும். இந்த ‘ரங்கநதி’ அப்படித்தான். இந்திரா செளந்தர்ராஜனின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்றாகத்தான் எனக்குத் தோன்றியது.

காவிரி ஆறு சில சமயங்களில் காதல் பேசும் குமரியென அமைதியாய் நடையிடுவாள். சில சமயங்களிலோ ரெளத்திரம் கொண்ட கண்ணகி போன்று சீறிப் பாய்ந்து வந்து தன்னில் குளி்க்க வரும் உயிர்களைப் பலிகொண்டு விடுவாள். அப்படி காவிரியின் வெள்ளத்தால் யாராவது இழுத்துச் செல்லப்பட்டால், ‘ரங்கனைக் கூப்பிடு’ என்பார்கள். முடிந்தால் .உயிருடனோ, இல்லையேல் பிணமாகவோ காவிரியில் மூழ்கிக் கொண்டு வந்து விடுவான். இதுதான் ரங்கனின் தொழில்.

சக்கரவர்த்தி ஐயங்கார் பெரும் செல்வந்தர். ஊரில் மதிப்புப் பெற்ற பெரிய மனிதர்ளில் ஒருவர். அவருடைய மகள் மைதிலி ஒருமுறை ஆற்றில் குளிக்க வர, ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொள்ள, அதைப் பார்க்கும் ரங்கன், நதியில் பாய்ந்து நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான். அவள் உடை ஆற்றில் போய்விட ஆடையவற்ற வளாய் ஆன அவளுக்கு சிகிச்சை செய்து, மாற்றுடை தந்து அவள் வீட்டில் விட்டு சலனமில்லாமல் திரும்பிச் செல்கிறான். ஆனால் மைதிலியின் மனதில் அவன் புகுந்து விடுகிறான்.

மைதிலி, ரங்கனிடம் தன் காதலைச் சொல்ல, அவன் நிதர்சனம் புரிந்து மறு்க்கிறான். கோடீஸ்வரனின் மகள், ஊர் பெயரோ, பெற்றோர் பெயரோ தெரியாத  பிணந்தூக்கியான ரங்கனைக் காதலிக்கிறாள் என்றால் பிரச்சனைகள் வராமல் இருக்குமா என்ன? ஆனால் ரங்கன் அனாதை இல்லை என்பதுதான் இங்கே சோகம். 

அவனைப் பெற்றவர், அதே ஸ்ரீரங்கத்தில் பலரால் மதிக்கப்படும், ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். தன் கண் முன்னாலேயே தன் மூத்த மகன் ‘பிணந்தூக்கி’யாக வாழ்வதைப் பார்த்து மனதிற்குள் குமையும்படியான ஒரு சூழலில் இருக்கிறார்.அவருக்கு மனக்குழப்பம் நேரிடும் போதெல்லாம் ஆறுதல் பெற அவர் நாடுவது ‘சிங்கராச்சாரியார்’ என்கிற ஒரு மகானை.

இப்படிக் கதையில் விழும் முடிச்சைத் தொடர்ந்து படிக்க ஆரம்பி்த்த என்னை ரங்கநதி இழுத்துச் சென்றது, புரட்டி்ப் போட்டது, ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் கீழே வைக்கச் செய்தது. இந்திரா செளந்தர்ராஜன் கதையின் மைய இழையாக காதலை வைத்திருந்தாலும் கதையினூடாக சிறு உறுத்தலும் இல்லாமல், திணிப்பாகத் தெரியாமல் பல சமூக விஷயங்களைக் கையாண்டிருக்கிறார். சுயநலம் சார்ந்த மனித உறவுகள், இயற்கையைச் சுரண்டும் மனிதனி்ன் பேராசை, போலி கெளரவம் பார்ப்பதால் பாதிக்கும் உறவுகள், பணத்தின் மீது வெறி கொண்டால் மற்றவர‌ை எண்ணாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்டு்த்தும் மனப்பாங்கு, பிரதிபலன் பாராமல் ஏற்படும் நட்புகள், உறவுகள்... இப்படி நிறைய விஷயங்களை நிறைவாகத் தொட்டுச் செல்கிறார் நூலாசிரியர்.

இந்த ‘ரங்கநதி’யில் வரும் அனைவரும் மனித வாழ்வின் இயல்புக்கு மீறாத பாத்திரங்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். ரவுடி இடும்பனுடன் மோதி அவனைத் தாக்கி, அவனால் கடுமையாகத் தாக்கப்படும் ‘ஹீரோ’ ரங்கன் (நான் என்ன ரஜினிகாந்த, விஜயகாந்தா- கண்ணு செவக்க டயலாக் பேசி சண்டைபோடுறதுக்கு), சொத்தின் மேல் ஆசை வைத்து மைதிலியின் காதலுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னும் அண்ணி ரேவதி, தன் கணவனைக் காப்பாற்றியதால் அனாதை ரங்கனை ‘அண்ணா’ என்றழைத்து (உண்மையில் அவன் அண்ணன் என்பதறியாமல்) பாசம் காட்டும் உஷா -இப்படி அனைத்துக் கதாபாத்திரங்களும் அவரவர் இயல்பின்படி பக்கத்து வீட்டு மனிதர்கள் போல படைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான விஷயம்.

எத்தனை பெரிய சுழலாக இருந்தாலும் நீந்தி உள்ளே மூழ்கியவற்றை எடுத்து வரும் ரங்கனை அந்த நதி எதுவும் செய்வதில்லை. அதன் ஆசி பெற்றவன் அவன். அந்த நதியில் மூழ்கி உயிர் விட்ட அவன் தாயின் ஆன்மா போல காவிரி அவனைக் காத்தாலும் அதை ‘ராட்சசி’ என்றே ரங்கன் கருதி திட்டும் முரண் வெகு சுவாரஸ்யம்.

 தன் நிலை உணர்ந்தவனாய் ‘காதல் என்கிற விஷயம் தன் வாழ்வில் இல்லை’ என்று மைதிலிக்குப் புத்தி சொல்லும் ரங்கனின் மனம் எப்போது மாற்றம் பெற்று அவளைக் காதலிக்கத் தொடங்குகிறது என்பதையும், ‘‘நதியா இவ? என் வரைல ராட்சசி’’ என்று காவிரியை தூஷிக்கும் ரங்கன் அவளை அன்னையாக உணரத் துவங்குவதையும் திணிப்பில்லாமல் இயல்பாக விவரித்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன்.

கதையின் ஊடாக அங்கங்கே தன்னுடைய சீரிய சிந்தகைனளையும் விதைக்கத் தவறவில்லை இந்திரா செளந்தர்ராஜன். இடும்பன் என்கிற கள்ளச்சாராய ரவுடியிடம் ரங்கன் பேசும் புள்ளிவிவரக் கணக்கு, சிங்கராச்சாரியாரை டி.வி. பேட்டி எடுக்கும் போது வெளிப்படும் கேள்வி பதில்கள் போன்று கதை நெடுகிலும் இந்திரா செளந்தர்ராஜனின் நற்கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.

எப்படிப் பார்த்தாலும் சுப முடிவு வராது சோக முடிவாத்தான் இருக்கும் என்று மனதை தயார்படு்த்திக் கொண்டு படிக்கையில் சுப முடிவையும் தந்து மகிழ்ச்சிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இடம் பெற்றிருக்கும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் (அவரே எழுதிய) கவிதைகள் இந்திரா செளந்தர்ராஜனின் ஆழ்ந்த தமிழறிவுக்குச் சான்றாக நிற்கின்றன.

‘ரங்கநதி’யின் அத்தியாயங்களில் குளி்த்தெழுந்தேன், சில அத்தியாயங்களில் மூச்சுத் திணறி காற்றுக்காய் போராடினேன், சில அத்தியாயங்களில் நீரினுள் ‘முங்கு நீச்சல்’ அடித்தேன்... இப்படி சுவாரஸ்யமான நதிக்குளியல் அனுபவ்ததை எனக்குத் தந்தது இந்த ‘ரங்கநதி’. ‘திருமகள் நிலையம்’ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ.275 என்பது ஒன்றுதான் கடினமான விஷயம். ஆனால் நூலின் உள்ளடக்கத்திற்காக இதை பொருட்படுத்தாமல் வாங்கி வாசிக்கலாம் என்பதே என் கருத்து.

பின்குறிப்பு: நான் படித்து வியந்து உங்களைப் படிக்கச் சொல்லும் இந்த ‘ரங்கநதி’ ஸ்ரீரங்கத்துக் கதை. அடுத்ததாக எழுதவிருக்கும் பு்த்தகமும் ஸ்ரீரங்கக் கதைதான். இதிலாவது ரங்கன் என்பவன் கதாநாயக்ன். அந்தக் கதையிலோ ஸ்ரீரங்கத்து ரங்கநாதனே கதாநாயகன்! பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா!