கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, March 7, 2014

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்! 


இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்! 


Saturday, February 22, 2014

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்! 


இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்! 


Thursday, February 13, 2014

                    - ‘வாகீச கலாநிதி’ திரு.கி.வா.ஜெகந்நாதன் எழுதியது -

                                                         6. சுதமதியின் கதை

தயகுமாரனை நோக்கி சுதமதி சொல்லலானாள் : ‘‘நீதி திறம்பாத சோழ குலத்தில் உதிதத நினக்குப் பெண்ணாகிய நானா நல்லுரை நவில்வது? ஆயினும் நான் ஒன்று சொல்கிறேன்; கேட்டருள வேண்டும். இந்த உடம்பைப் பற்றிச் சற்றே நினைத்துப் பார். இது வினையினால் வந்தது. வினையை விளைக்கக் கருவியாக இருப்பது. ஆடை அணி இல்லாவிட்டால் வெறும் புலால் பிண்டமாக இருப்பது கிழப்பருவம் எய்தி இறந்து போவது. இதைப் பெரிதாகக் கருதலாமா?" -இவ்வாறு அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பளிங்கு அறைக்குள் இருந்த மணிமேகலையின் உருவம் அவனுக்குத் தோன்றியது.

முதலில் அந்த உருவத்தை ஓவியம் என்று மயங்கினான். அந்தக் கண்ணாடி மண்டபச் சுவரைத் தடவிப் பார்த்தான். அந்த அறைக்குள் புகலாம் என்று எண்ணினான். ‘‘உன் தோழி எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்?" என்று சுதமதியைக் கேட்டான்.

அவனுடைய உள்ளத்தே எழுந்த ஆசைக் கனலை அவள் உணர்ந்தாள். ‘‘அவள் உன் அழகைக் கண்ணால் பார்க்க மாட்டாள். தவக்கோலம் கொண்டு விட்டாள். அவளுக்குத் தீங்கு இழைத்தால் அவள் விடும் சாபம் அம்பைப் போலத் துன்புறுத்தும். காமனை வென்று விட்டாள் அவள்" என்றாள்.


‘‘வெள்ளம் மிகுதியானால் அதை அடக்க முடியுமோ? அவளை எப்படியும் என் வசப்படுத்துகிறேன், பார்’’ என்று திரும்பினவன், மறுபடியும் சுதமதியைப் பார்த்து, ‘‘அதுசரி... நீ யயாரோ வித்தியாதரனால் அருகன் கோயிலில் விடப்பட்டவள் என்றல்லவா சொன்னார்கள்? இவளோடு வந்த காரணம் என்ன?’’ என்று கேட்டான்.

‘‘அரசிளங்குமர, நான் என் அன்னையை இழந்தேன். மாருதவேகனிடம் சில காலம் இருந்தேன். அவன் என்னை இங்குள்ள அருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டான். என் தந்தை என்னைக் காணாமல் நெடுகச் சுற்றிக் கடைசியில் இங்கே என்னைக் கண்டார்& பலர் வீடுகளில் இரந்து உண்டு வாழ்ந்தபோது. ஒரு நாள் ஒரு பசு அவனை முட்ட, குடல் வெளியே வந்து விட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் இருந்த இடத்திற்கு வந்து அங்குள்ள முனிவர்களிடம், ‘‘என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று கதறினான். அவர்கள் சினந்து என்னையும் அவனோடு சேர்த்துத் துரத்தி விட்டார்கள். அப்போது வழியில் சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் என் தந்தையைத் தாங்கி ஆதரவு செய்து பௌத்த பிட்சுக்கள் உறையும் இடத்திற் சேர்த்தான். அம்முனிவன், புத்தபிரானுடைய பெருமையை எனக்கு உபதேசித்தான். அதுமுதல் நான் பௌத்த பிட்சுணியாகிய மாதவியுடன் இருந்து வருகிறேன்" என்றாள்.

‘‘சரி, சரி... நான் சித்திராபதியைக் கொண்டு என் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறேன்" என்று அங்கிருந்து உதயகுமாரன் போய்விட்டான்.

பிறகு மணிமேகலை மெல்ல வெளியே வந்தாள். ‘‘என்னை விலைமகள் என்று அலட்சியமாக அரசிளங்குமரன் எண்ணுகிறான் என்று அறிந்தும் என் மனம் அவன் பின்னே செல்கிறதே! இதுதான் காமத்தியற்கையோ?" என்று தனக்கு உண்டான உணர்ச்சியைச் சொன்னாள். அப்போது இந்திர விழாவைக் காணும் பொருட்டு மணிமேகலா தெய்வம் பூம்புகாரிலுள்ள ஒரு பெண்மணியைப் போலக் கோலம் பூண்டு அங்கே வந்தாள். அவ்விடத்தில் இருந்த புத்தனுடைய பாத பீடத்தை வணங்கிப் புத்தனைத் துதிக்கலானாள்.

‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய்! என்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்!
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!"


என்று பலவகையாகத் துதி பாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்திமாலை வந்தடைந்தது.

                                                                    -தொடரும்...

                    - ‘வாகீச கலாநிதி’ திரு.கி.வா.ஜெகந்நாதன் எழுதியது -

                                                         6. சுதமதியின் கதை

தயகுமாரனை நோக்கி சுதமதி சொல்லலானாள் : ‘‘நீதி திறம்பாத சோழ குலத்தில் உதிதத நினக்குப் பெண்ணாகிய நானா நல்லுரை நவில்வது? ஆயினும் நான் ஒன்று சொல்கிறேன்; கேட்டருள வேண்டும். இந்த உடம்பைப் பற்றிச் சற்றே நினைத்துப் பார். இது வினையினால் வந்தது. வினையை விளைக்கக் கருவியாக இருப்பது. ஆடை அணி இல்லாவிட்டால் வெறும் புலால் பிண்டமாக இருப்பது கிழப்பருவம் எய்தி இறந்து போவது. இதைப் பெரிதாகக் கருதலாமா?" -இவ்வாறு அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பளிங்கு அறைக்குள் இருந்த மணிமேகலையின் உருவம் அவனுக்குத் தோன்றியது.

முதலில் அந்த உருவத்தை ஓவியம் என்று மயங்கினான். அந்தக் கண்ணாடி மண்டபச் சுவரைத் தடவிப் பார்த்தான். அந்த அறைக்குள் புகலாம் என்று எண்ணினான். ‘‘உன் தோழி எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்?" என்று சுதமதியைக் கேட்டான்.

அவனுடைய உள்ளத்தே எழுந்த ஆசைக் கனலை அவள் உணர்ந்தாள். ‘‘அவள் உன் அழகைக் கண்ணால் பார்க்க மாட்டாள். தவக்கோலம் கொண்டு விட்டாள். அவளுக்குத் தீங்கு இழைத்தால் அவள் விடும் சாபம் அம்பைப் போலத் துன்புறுத்தும். காமனை வென்று விட்டாள் அவள்" என்றாள்.


‘‘வெள்ளம் மிகுதியானால் அதை அடக்க முடியுமோ? அவளை எப்படியும் என் வசப்படுத்துகிறேன், பார்’’ என்று திரும்பினவன், மறுபடியும் சுதமதியைப் பார்த்து, ‘‘அதுசரி... நீ யயாரோ வித்தியாதரனால் அருகன் கோயிலில் விடப்பட்டவள் என்றல்லவா சொன்னார்கள்? இவளோடு வந்த காரணம் என்ன?’’ என்று கேட்டான்.

‘‘அரசிளங்குமர, நான் என் அன்னையை இழந்தேன். மாருதவேகனிடம் சில காலம் இருந்தேன். அவன் என்னை இங்குள்ள அருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டான். என் தந்தை என்னைக் காணாமல் நெடுகச் சுற்றிக் கடைசியில் இங்கே என்னைக் கண்டார்& பலர் வீடுகளில் இரந்து உண்டு வாழ்ந்தபோது. ஒரு நாள் ஒரு பசு அவனை முட்ட, குடல் வெளியே வந்து விட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் இருந்த இடத்திற்கு வந்து அங்குள்ள முனிவர்களிடம், ‘‘என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று கதறினான். அவர்கள் சினந்து என்னையும் அவனோடு சேர்த்துத் துரத்தி விட்டார்கள். அப்போது வழியில் சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் என் தந்தையைத் தாங்கி ஆதரவு செய்து பௌத்த பிட்சுக்கள் உறையும் இடத்திற் சேர்த்தான். அம்முனிவன், புத்தபிரானுடைய பெருமையை எனக்கு உபதேசித்தான். அதுமுதல் நான் பௌத்த பிட்சுணியாகிய மாதவியுடன் இருந்து வருகிறேன்" என்றாள்.

‘‘சரி, சரி... நான் சித்திராபதியைக் கொண்டு என் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறேன்" என்று அங்கிருந்து உதயகுமாரன் போய்விட்டான்.

பிறகு மணிமேகலை மெல்ல வெளியே வந்தாள். ‘‘என்னை விலைமகள் என்று அலட்சியமாக அரசிளங்குமரன் எண்ணுகிறான் என்று அறிந்தும் என் மனம் அவன் பின்னே செல்கிறதே! இதுதான் காமத்தியற்கையோ?" என்று தனக்கு உண்டான உணர்ச்சியைச் சொன்னாள். அப்போது இந்திர விழாவைக் காணும் பொருட்டு மணிமேகலா தெய்வம் பூம்புகாரிலுள்ள ஒரு பெண்மணியைப் போலக் கோலம் பூண்டு அங்கே வந்தாள். அவ்விடத்தில் இருந்த புத்தனுடைய பாத பீடத்தை வணங்கிப் புத்தனைத் துதிக்கலானாள்.

‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய்! என்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்!
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!"


என்று பலவகையாகத் துதி பாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்திமாலை வந்தடைந்தது.

                                                                    -தொடரும்...

Friday, February 7, 2014

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!


இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!


Wednesday, January 29, 2014

சித்திரமேகலை இதுவரை......

புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி, துறவறக் கோலத்தைத் துறக்கும்படி மாதவியிடம் வேண்டச் சொல்ல, மாதவி அவ்வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள். அதனால் வருந்தும் தன் மகள் மணிமேகலையை பூக்கொய்து வரச் சொல்கிறாள் மாதவி. மேகலையின் தோழி சுதமதி, முன்பொரு சமயம் அவள் மலர் கொய்யச் சென்றிருந்தபோது ஒரு கந்தர்வன் அவள்மேல் மையல் கொண்டு தூக்கிச் சென்றதையும், அவனோடு சில காலம் வாழ்ந்தபின் மீண்டும் இங்கு கொண்டு வந்துவிட்ட¬துயும் சொல்லி, புத்தர் அருள் பெற்ற உபவனத்திற்கு மட்டுமே மேகலை செல்ல வேண்டும் என்கிறாள். உபவனத்திலுள்ள பளிங்கு அறை ஒன்றில் உள்ளே போனவர்களின் உருவம் தெரியுமேயன்றி அவர்கள பேசுவது கேட்காது என்றும், அங்குள்ள பத்ம பீடத்தில் அரும்புகளை இட்டால் அவை மலர்ந்த பின்பு வாடுவதில்லை, வண்டு மொய்ப்பதில்லை என்று கூறி அத்தகைய வனத்துக்கு மேகலையை அழைத்துச் செல்கிறேன் என்கிறாள். அவர்கள் புகாரின் அழகுக் கோலங்களைப் பார்த்தபடி உபவனத்தை அடைகிறார்கள். அப்போது...

                                 5. உதயகுமாரன் வருகை

ங்கும் ஒரே குழப்பம்! ஆரவாரம்!

மக்கள் அங்கும் இங்கும் நிலைதடுமாறி ஓடுகிறார்கள். ‘‘என்ன செய்தி?" என்று கேட்பார்க்கு விடை சொல்லக் கூட அவர்களுக்கு அமைதியில்லை. ‘‘யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதோ அங்கே வருகிறது. ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று சிலர் கூவுகிறார்கள். காவிரிப் பூம்பட்டிணத்தில் அரசரது பட்டத்து யானையாகிய காலவேகத்துக்கு மதம் பிடித்துவிட்டது. பாகர் முதலியவர்கள் அடக்கியும் அடங்காமல் அது ஓடி வருகிறது. மக்களை அச்சத்தில் நிலைகுலையச் செய்து திரிகிறது.

சிறிது நேரத்தில் குதிரையின் மேல் விரைந்து வந்தான் உதயகுமாரன். அவன் அரசிளங்குமரன்; வீரன். மதத்தால் அடக்குவார் இன்றித் திரிந்த யானையை அவன் அடக்கி விட்டான்! என்ன ஆச்சரியம்! ஊரே அவனை வாழ்த்தியது. அந்த வெற்றி மிடுக்கோடு அவன் ஒர தேரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தால் முருகனைப் போலத் தோன்றியது; அத்தனை அழகன். அவன் அணிந்திருக்கும் சோழர் அடையாள மாலையாகிய ஆத்தியே அவனை அடையாளம் காட்டியது.

காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்


அப்படி வரும்போது நாடக மடந்தையர் வாழும் வீதி வழியே சென்றான். அங்கே அவனுடைய நண்பனாகிய எட்டிகுமரன் என்பவன் ஓர் அழகியுடன் இருந்தான். அவள் கையில் வீணை இருந்தது. ஆனால் அதை வாசிக்காமல் சித்திரத்தில் எழுதிய பாவையைப் போல் மயங்கியிருந்தாள். அவளை உதயகுமாரன் கண்டான்.


தேரில் இருந்தபடியே, ‘‘உனக்கு என்ன இடுக்கண் அப்பா வந்தது? இப்படி மயங்கியிருக்கிறாயே?" என்று கேட்டான். அதைக் கேட்ட எட்டிகுமரன் தன் காதல் அணங்கோடு ஓடடிவந்து அரசிளங்குமரனை வணங்கி, ‘‘செப்புக்குள் வைத்த பூவைப் போல வாடிய அழகியாகிய மணிமேகலை மலர்வனத்துக்குப் போவதைப் பார்த்தேன். அப்போது கோவலனுடைய நினைவு வந்தது. துயரம் மீதூர்ந்தது. யாழைச் சரியாக வாசிக்க முடியவில்லை" என்றான்.

‘‘அப்படியா?" என்று உதயகுமாரன் மகிழ்ச்சியோடு கூவினான். ‘‘அவளை என் தேரில் ஏற்றிக் கொண்டு வருகிறேன்" என்று உபவனத்தை நோக்கித் தேரை ஓட்டினான்.

அங்கே சுதமதி பூம்பொழிலின் எழிற் காட்சிகளையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாகத் தேரில் உதயகுமாரன் வருவதை மணிமேகலை அறிந்தாள். ‘‘இளவரசன் என் மேல் விருப்பம் உடையவன் என்பதை வசந்தமாலை ஒரு நாள் என் தாயிடம் சொன்னதைக் கேட்டேன். இப்போது இவன் என்னை ஏதேனும் செய்தால் என் செய்வேன்?" என்று மருண்டு உரைத்தாள். சுதமதிக்கும் நடுக்கம் உண்டாயிற்று. உடனே ‘‘இதோ, இந்தப் பளிங்கு அறைக்குள் புகுந்து கொள்" என்று சொல்லி அவளை உள்ளே போகச் செய்தாள். மணிமேகலை சென்று தாழைப் போட்டுக் கொண்டாள். அந்த அறைக்குச் சற்று தூரத்தில் சுதமதி ஒன்றும் அறியாதவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.

உதயகுமாரன், மணிமேகலை எங்கே இருக்கிறாள் என்று நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். சுதமதியைக் கண்டு, ‘‘மணிமேகலை பருவம் அடைந்து மெல்லியலாகி விட்டாளோ? மாதவர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இங்கே வந்திருக்கிறாளாமே! ஏன் வந்தாள்?" என்று கேட்டான். சுதமதி சற்றே கலங்கி நின்றாள். பிறகு பேசத் தொடங்கினாள்...

என்ன பேசியிருப்பாள்...? வெய்ட் ப்ளீஸ்...!

சித்திரமேகலை இதுவரை......

புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி, துறவறக் கோலத்தைத் துறக்கும்படி மாதவியிடம் வேண்டச் சொல்ல, மாதவி அவ்வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள். அதனால் வருந்தும் தன் மகள் மணிமேகலையை பூக்கொய்து வரச் சொல்கிறாள் மாதவி. மேகலையின் தோழி சுதமதி, முன்பொரு சமயம் அவள் மலர் கொய்யச் சென்றிருந்தபோது ஒரு கந்தர்வன் அவள்மேல் மையல் கொண்டு தூக்கிச் சென்றதையும், அவனோடு சில காலம் வாழ்ந்தபின் மீண்டும் இங்கு கொண்டு வந்துவிட்ட¬துயும் சொல்லி, புத்தர் அருள் பெற்ற உபவனத்திற்கு மட்டுமே மேகலை செல்ல வேண்டும் என்கிறாள். உபவனத்திலுள்ள பளிங்கு அறை ஒன்றில் உள்ளே போனவர்களின் உருவம் தெரியுமேயன்றி அவர்கள பேசுவது கேட்காது என்றும், அங்குள்ள பத்ம பீடத்தில் அரும்புகளை இட்டால் அவை மலர்ந்த பின்பு வாடுவதில்லை, வண்டு மொய்ப்பதில்லை என்று கூறி அத்தகைய வனத்துக்கு மேகலையை அழைத்துச் செல்கிறேன் என்கிறாள். அவர்கள் புகாரின் அழகுக் கோலங்களைப் பார்த்தபடி உபவனத்தை அடைகிறார்கள். அப்போது...

                                 5. உதயகுமாரன் வருகை

ங்கும் ஒரே குழப்பம்! ஆரவாரம்!

மக்கள் அங்கும் இங்கும் நிலைதடுமாறி ஓடுகிறார்கள். ‘‘என்ன செய்தி?" என்று கேட்பார்க்கு விடை சொல்லக் கூட அவர்களுக்கு அமைதியில்லை. ‘‘யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதோ அங்கே வருகிறது. ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று சிலர் கூவுகிறார்கள். காவிரிப் பூம்பட்டிணத்தில் அரசரது பட்டத்து யானையாகிய காலவேகத்துக்கு மதம் பிடித்துவிட்டது. பாகர் முதலியவர்கள் அடக்கியும் அடங்காமல் அது ஓடி வருகிறது. மக்களை அச்சத்தில் நிலைகுலையச் செய்து திரிகிறது.

சிறிது நேரத்தில் குதிரையின் மேல் விரைந்து வந்தான் உதயகுமாரன். அவன் அரசிளங்குமரன்; வீரன். மதத்தால் அடக்குவார் இன்றித் திரிந்த யானையை அவன் அடக்கி விட்டான்! என்ன ஆச்சரியம்! ஊரே அவனை வாழ்த்தியது. அந்த வெற்றி மிடுக்கோடு அவன் ஒர தேரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தால் முருகனைப் போலத் தோன்றியது; அத்தனை அழகன். அவன் அணிந்திருக்கும் சோழர் அடையாள மாலையாகிய ஆத்தியே அவனை அடையாளம் காட்டியது.

காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்


அப்படி வரும்போது நாடக மடந்தையர் வாழும் வீதி வழியே சென்றான். அங்கே அவனுடைய நண்பனாகிய எட்டிகுமரன் என்பவன் ஓர் அழகியுடன் இருந்தான். அவள் கையில் வீணை இருந்தது. ஆனால் அதை வாசிக்காமல் சித்திரத்தில் எழுதிய பாவையைப் போல் மயங்கியிருந்தாள். அவளை உதயகுமாரன் கண்டான்.


தேரில் இருந்தபடியே, ‘‘உனக்கு என்ன இடுக்கண் அப்பா வந்தது? இப்படி மயங்கியிருக்கிறாயே?" என்று கேட்டான். அதைக் கேட்ட எட்டிகுமரன் தன் காதல் அணங்கோடு ஓடடிவந்து அரசிளங்குமரனை வணங்கி, ‘‘செப்புக்குள் வைத்த பூவைப் போல வாடிய அழகியாகிய மணிமேகலை மலர்வனத்துக்குப் போவதைப் பார்த்தேன். அப்போது கோவலனுடைய நினைவு வந்தது. துயரம் மீதூர்ந்தது. யாழைச் சரியாக வாசிக்க முடியவில்லை" என்றான்.

‘‘அப்படியா?" என்று உதயகுமாரன் மகிழ்ச்சியோடு கூவினான். ‘‘அவளை என் தேரில் ஏற்றிக் கொண்டு வருகிறேன்" என்று உபவனத்தை நோக்கித் தேரை ஓட்டினான்.

அங்கே சுதமதி பூம்பொழிலின் எழிற் காட்சிகளையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாகத் தேரில் உதயகுமாரன் வருவதை மணிமேகலை அறிந்தாள். ‘‘இளவரசன் என் மேல் விருப்பம் உடையவன் என்பதை வசந்தமாலை ஒரு நாள் என் தாயிடம் சொன்னதைக் கேட்டேன். இப்போது இவன் என்னை ஏதேனும் செய்தால் என் செய்வேன்?" என்று மருண்டு உரைத்தாள். சுதமதிக்கும் நடுக்கம் உண்டாயிற்று. உடனே ‘‘இதோ, இந்தப் பளிங்கு அறைக்குள் புகுந்து கொள்" என்று சொல்லி அவளை உள்ளே போகச் செய்தாள். மணிமேகலை சென்று தாழைப் போட்டுக் கொண்டாள். அந்த அறைக்குச் சற்று தூரத்தில் சுதமதி ஒன்றும் அறியாதவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.

உதயகுமாரன், மணிமேகலை எங்கே இருக்கிறாள் என்று நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். சுதமதியைக் கண்டு, ‘‘மணிமேகலை பருவம் அடைந்து மெல்லியலாகி விட்டாளோ? மாதவர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இங்கே வந்திருக்கிறாளாமே! ஏன் வந்தாள்?" என்று கேட்டான். சுதமதி சற்றே கலங்கி நின்றாள். பிறகு பேசத் தொடங்கினாள்...

என்ன பேசியிருப்பாள்...? வெய்ட் ப்ளீஸ்...!

Saturday, January 25, 2014

மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக் கொறட்டை விட்டுட்டு, இப்ப ஆச்சரியமா படறே?ன்னு நீங்க பல்லை நறநறப்பது கேட்கிறது!) போகட்டும்... இந்த சித்தித் தொடருடன் சித்திர மேகலையும் இணைந்தே இனி தொடர்ந்து வரும்! (அட... நம்புங்கப்பா...!)

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!

 

மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக் கொறட்டை விட்டுட்டு, இப்ப ஆச்சரியமா படறே?ன்னு நீங்க பல்லை நறநறப்பது கேட்கிறது!) போகட்டும்... இந்த சித்தித் தொடருடன் சித்திர மேகலையும் இணைந்தே இனி தொடர்ந்து வரும்! (அட... நம்புங்கப்பா...!)

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!