கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, January 29, 2014

சித்திரமேகலை இதுவரை......

புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி, துறவறக் கோலத்தைத் துறக்கும்படி மாதவியிடம் வேண்டச் சொல்ல, மாதவி அவ்வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள். அதனால் வருந்தும் தன் மகள் மணிமேகலையை பூக்கொய்து வரச் சொல்கிறாள் மாதவி. மேகலையின் தோழி சுதமதி, முன்பொரு சமயம் அவள் மலர் கொய்யச் சென்றிருந்தபோது ஒரு கந்தர்வன் அவள்மேல் மையல் கொண்டு தூக்கிச் சென்றதையும், அவனோடு சில காலம் வாழ்ந்தபின் மீண்டும் இங்கு கொண்டு வந்துவிட்ட¬துயும் சொல்லி, புத்தர் அருள் பெற்ற உபவனத்திற்கு மட்டுமே மேகலை செல்ல வேண்டும் என்கிறாள். உபவனத்திலுள்ள பளிங்கு அறை ஒன்றில் உள்ளே போனவர்களின் உருவம் தெரியுமேயன்றி அவர்கள பேசுவது கேட்காது என்றும், அங்குள்ள பத்ம பீடத்தில் அரும்புகளை இட்டால் அவை மலர்ந்த பின்பு வாடுவதில்லை, வண்டு மொய்ப்பதில்லை என்று கூறி அத்தகைய வனத்துக்கு மேகலையை அழைத்துச் செல்கிறேன் என்கிறாள். அவர்கள் புகாரின் அழகுக் கோலங்களைப் பார்த்தபடி உபவனத்தை அடைகிறார்கள். அப்போது...

                                 5. உதயகுமாரன் வருகை

ங்கும் ஒரே குழப்பம்! ஆரவாரம்!

மக்கள் அங்கும் இங்கும் நிலைதடுமாறி ஓடுகிறார்கள். ‘‘என்ன செய்தி?" என்று கேட்பார்க்கு விடை சொல்லக் கூட அவர்களுக்கு அமைதியில்லை. ‘‘யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதோ அங்கே வருகிறது. ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று சிலர் கூவுகிறார்கள். காவிரிப் பூம்பட்டிணத்தில் அரசரது பட்டத்து யானையாகிய காலவேகத்துக்கு மதம் பிடித்துவிட்டது. பாகர் முதலியவர்கள் அடக்கியும் அடங்காமல் அது ஓடி வருகிறது. மக்களை அச்சத்தில் நிலைகுலையச் செய்து திரிகிறது.

சிறிது நேரத்தில் குதிரையின் மேல் விரைந்து வந்தான் உதயகுமாரன். அவன் அரசிளங்குமரன்; வீரன். மதத்தால் அடக்குவார் இன்றித் திரிந்த யானையை அவன் அடக்கி விட்டான்! என்ன ஆச்சரியம்! ஊரே அவனை வாழ்த்தியது. அந்த வெற்றி மிடுக்கோடு அவன் ஒர தேரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தால் முருகனைப் போலத் தோன்றியது; அத்தனை அழகன். அவன் அணிந்திருக்கும் சோழர் அடையாள மாலையாகிய ஆத்தியே அவனை அடையாளம் காட்டியது.

காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்


அப்படி வரும்போது நாடக மடந்தையர் வாழும் வீதி வழியே சென்றான். அங்கே அவனுடைய நண்பனாகிய எட்டிகுமரன் என்பவன் ஓர் அழகியுடன் இருந்தான். அவள் கையில் வீணை இருந்தது. ஆனால் அதை வாசிக்காமல் சித்திரத்தில் எழுதிய பாவையைப் போல் மயங்கியிருந்தாள். அவளை உதயகுமாரன் கண்டான்.


தேரில் இருந்தபடியே, ‘‘உனக்கு என்ன இடுக்கண் அப்பா வந்தது? இப்படி மயங்கியிருக்கிறாயே?" என்று கேட்டான். அதைக் கேட்ட எட்டிகுமரன் தன் காதல் அணங்கோடு ஓடடிவந்து அரசிளங்குமரனை வணங்கி, ‘‘செப்புக்குள் வைத்த பூவைப் போல வாடிய அழகியாகிய மணிமேகலை மலர்வனத்துக்குப் போவதைப் பார்த்தேன். அப்போது கோவலனுடைய நினைவு வந்தது. துயரம் மீதூர்ந்தது. யாழைச் சரியாக வாசிக்க முடியவில்லை" என்றான்.

‘‘அப்படியா?" என்று உதயகுமாரன் மகிழ்ச்சியோடு கூவினான். ‘‘அவளை என் தேரில் ஏற்றிக் கொண்டு வருகிறேன்" என்று உபவனத்தை நோக்கித் தேரை ஓட்டினான்.

அங்கே சுதமதி பூம்பொழிலின் எழிற் காட்சிகளையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாகத் தேரில் உதயகுமாரன் வருவதை மணிமேகலை அறிந்தாள். ‘‘இளவரசன் என் மேல் விருப்பம் உடையவன் என்பதை வசந்தமாலை ஒரு நாள் என் தாயிடம் சொன்னதைக் கேட்டேன். இப்போது இவன் என்னை ஏதேனும் செய்தால் என் செய்வேன்?" என்று மருண்டு உரைத்தாள். சுதமதிக்கும் நடுக்கம் உண்டாயிற்று. உடனே ‘‘இதோ, இந்தப் பளிங்கு அறைக்குள் புகுந்து கொள்" என்று சொல்லி அவளை உள்ளே போகச் செய்தாள். மணிமேகலை சென்று தாழைப் போட்டுக் கொண்டாள். அந்த அறைக்குச் சற்று தூரத்தில் சுதமதி ஒன்றும் அறியாதவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.

உதயகுமாரன், மணிமேகலை எங்கே இருக்கிறாள் என்று நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். சுதமதியைக் கண்டு, ‘‘மணிமேகலை பருவம் அடைந்து மெல்லியலாகி விட்டாளோ? மாதவர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இங்கே வந்திருக்கிறாளாமே! ஏன் வந்தாள்?" என்று கேட்டான். சுதமதி சற்றே கலங்கி நின்றாள். பிறகு பேசத் தொடங்கினாள்...

என்ன பேசியிருப்பாள்...? வெய்ட் ப்ளீஸ்...!

சித்திரமேகலை இதுவரை......

புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி, துறவறக் கோலத்தைத் துறக்கும்படி மாதவியிடம் வேண்டச் சொல்ல, மாதவி அவ்வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள். அதனால் வருந்தும் தன் மகள் மணிமேகலையை பூக்கொய்து வரச் சொல்கிறாள் மாதவி. மேகலையின் தோழி சுதமதி, முன்பொரு சமயம் அவள் மலர் கொய்யச் சென்றிருந்தபோது ஒரு கந்தர்வன் அவள்மேல் மையல் கொண்டு தூக்கிச் சென்றதையும், அவனோடு சில காலம் வாழ்ந்தபின் மீண்டும் இங்கு கொண்டு வந்துவிட்ட¬துயும் சொல்லி, புத்தர் அருள் பெற்ற உபவனத்திற்கு மட்டுமே மேகலை செல்ல வேண்டும் என்கிறாள். உபவனத்திலுள்ள பளிங்கு அறை ஒன்றில் உள்ளே போனவர்களின் உருவம் தெரியுமேயன்றி அவர்கள பேசுவது கேட்காது என்றும், அங்குள்ள பத்ம பீடத்தில் அரும்புகளை இட்டால் அவை மலர்ந்த பின்பு வாடுவதில்லை, வண்டு மொய்ப்பதில்லை என்று கூறி அத்தகைய வனத்துக்கு மேகலையை அழைத்துச் செல்கிறேன் என்கிறாள். அவர்கள் புகாரின் அழகுக் கோலங்களைப் பார்த்தபடி உபவனத்தை அடைகிறார்கள். அப்போது...

                                 5. உதயகுமாரன் வருகை

ங்கும் ஒரே குழப்பம்! ஆரவாரம்!

மக்கள் அங்கும் இங்கும் நிலைதடுமாறி ஓடுகிறார்கள். ‘‘என்ன செய்தி?" என்று கேட்பார்க்கு விடை சொல்லக் கூட அவர்களுக்கு அமைதியில்லை. ‘‘யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதோ அங்கே வருகிறது. ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று சிலர் கூவுகிறார்கள். காவிரிப் பூம்பட்டிணத்தில் அரசரது பட்டத்து யானையாகிய காலவேகத்துக்கு மதம் பிடித்துவிட்டது. பாகர் முதலியவர்கள் அடக்கியும் அடங்காமல் அது ஓடி வருகிறது. மக்களை அச்சத்தில் நிலைகுலையச் செய்து திரிகிறது.

சிறிது நேரத்தில் குதிரையின் மேல் விரைந்து வந்தான் உதயகுமாரன். அவன் அரசிளங்குமரன்; வீரன். மதத்தால் அடக்குவார் இன்றித் திரிந்த யானையை அவன் அடக்கி விட்டான்! என்ன ஆச்சரியம்! ஊரே அவனை வாழ்த்தியது. அந்த வெற்றி மிடுக்கோடு அவன் ஒர தேரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தால் முருகனைப் போலத் தோன்றியது; அத்தனை அழகன். அவன் அணிந்திருக்கும் சோழர் அடையாள மாலையாகிய ஆத்தியே அவனை அடையாளம் காட்டியது.

காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்


அப்படி வரும்போது நாடக மடந்தையர் வாழும் வீதி வழியே சென்றான். அங்கே அவனுடைய நண்பனாகிய எட்டிகுமரன் என்பவன் ஓர் அழகியுடன் இருந்தான். அவள் கையில் வீணை இருந்தது. ஆனால் அதை வாசிக்காமல் சித்திரத்தில் எழுதிய பாவையைப் போல் மயங்கியிருந்தாள். அவளை உதயகுமாரன் கண்டான்.


தேரில் இருந்தபடியே, ‘‘உனக்கு என்ன இடுக்கண் அப்பா வந்தது? இப்படி மயங்கியிருக்கிறாயே?" என்று கேட்டான். அதைக் கேட்ட எட்டிகுமரன் தன் காதல் அணங்கோடு ஓடடிவந்து அரசிளங்குமரனை வணங்கி, ‘‘செப்புக்குள் வைத்த பூவைப் போல வாடிய அழகியாகிய மணிமேகலை மலர்வனத்துக்குப் போவதைப் பார்த்தேன். அப்போது கோவலனுடைய நினைவு வந்தது. துயரம் மீதூர்ந்தது. யாழைச் சரியாக வாசிக்க முடியவில்லை" என்றான்.

‘‘அப்படியா?" என்று உதயகுமாரன் மகிழ்ச்சியோடு கூவினான். ‘‘அவளை என் தேரில் ஏற்றிக் கொண்டு வருகிறேன்" என்று உபவனத்தை நோக்கித் தேரை ஓட்டினான்.

அங்கே சுதமதி பூம்பொழிலின் எழிற் காட்சிகளையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாகத் தேரில் உதயகுமாரன் வருவதை மணிமேகலை அறிந்தாள். ‘‘இளவரசன் என் மேல் விருப்பம் உடையவன் என்பதை வசந்தமாலை ஒரு நாள் என் தாயிடம் சொன்னதைக் கேட்டேன். இப்போது இவன் என்னை ஏதேனும் செய்தால் என் செய்வேன்?" என்று மருண்டு உரைத்தாள். சுதமதிக்கும் நடுக்கம் உண்டாயிற்று. உடனே ‘‘இதோ, இந்தப் பளிங்கு அறைக்குள் புகுந்து கொள்" என்று சொல்லி அவளை உள்ளே போகச் செய்தாள். மணிமேகலை சென்று தாழைப் போட்டுக் கொண்டாள். அந்த அறைக்குச் சற்று தூரத்தில் சுதமதி ஒன்றும் அறியாதவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.

உதயகுமாரன், மணிமேகலை எங்கே இருக்கிறாள் என்று நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். சுதமதியைக் கண்டு, ‘‘மணிமேகலை பருவம் அடைந்து மெல்லியலாகி விட்டாளோ? மாதவர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இங்கே வந்திருக்கிறாளாமே! ஏன் வந்தாள்?" என்று கேட்டான். சுதமதி சற்றே கலங்கி நின்றாள். பிறகு பேசத் தொடங்கினாள்...

என்ன பேசியிருப்பாள்...? வெய்ட் ப்ளீஸ்...!

Saturday, January 25, 2014

மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக் கொறட்டை விட்டுட்டு, இப்ப ஆச்சரியமா படறே?ன்னு நீங்க பல்லை நறநறப்பது கேட்கிறது!) போகட்டும்... இந்த சித்தித் தொடருடன் சித்திர மேகலையும் இணைந்தே இனி தொடர்ந்து வரும்! (அட... நம்புங்கப்பா...!)

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!

 

மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக் கொறட்டை விட்டுட்டு, இப்ப ஆச்சரியமா படறே?ன்னு நீங்க பல்லை நறநறப்பது கேட்கிறது!) போகட்டும்... இந்த சித்தித் தொடருடன் சித்திர மேகலையும் இணைந்தே இனி தொடர்ந்து வரும்! (அட... நம்புங்கப்பா...!)

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!

 

Sunday, July 21, 2013













Monday, July 15, 2013

எழுத்தாக்கம்: அமரர் திரு.கி.வா.ஜ.
 
                         4. தெருவில் காட்சிகள்

சுதமதி சொல்கிறாள்:

‘‘உபவனத்தல் பளிங்கினால் ஆன அறை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே போனவர்களின் உருவம் வெளியே தெரியுமேயன்றி, அவர்கள் பேசும் பேச்சுக் கேட்காது. அந்தப் பளிங்கு மண்டபத்தில் ஒரு பத்ம பீடம் இருக்கிறது. அதன் மேல் அரு‌ம்பை இட்டால் அது மலரும்; மலர்ந்தவை பின்பு வாடுவதில்லை; வண்டு மொய்ப்பதில்லை. அந்த வனத்தில் அன்பும் அருளும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெருங் கொள்கையும் என்றும் ஒழியாத நோன்மையுடைய பகவான் புத்தருடைய ஆணையினால் பலமரங்களும் மலரும். அந்த வனத்துக்குத்தான் உன் மகள் செல்ல வேண்டும். நானு்ம் அவளோடு செல்வேன்.’’

இவ்வாறு சொல்லிய சுதமதி, மணிமேகலையை அழைத்துக் கொண்டு உபவனத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

வழியில் எத்தனை ஆரவாரம்! அதோ ஒரு சமணத் துறவி. கையிலே உறி; அதில் ஒரு பாத்திரம்; மற்றொரு கையில் ஒரு கோல்; ஆடை அணியாத் திருமேனி; நீராடாத கோலம். இப்படிப் போகிறவனைக் கள்ளைக் குடித்து ஆட்டம் போடுகிறவன் ஒருவன் அணுகி, ‘‘இந்த உடம்புச் சிறையில் தடுமாறுகிற சுவாமி, ‌கொழு மடல் தெங்கில் விளையும் தேறலை உண்டு பாரும்; அதன் பயனை நீர் அறிந்தால் பிறகு வேறு ஒன்றிலும் நாட்டம் எழாது!’’ என்று கெஞ்சுகிறான்.

இதோ மற்றொரு கோலம். இவன் கோலமோ, அலங்கோலமோ காணக் காணச் சிரிப்பு வருகிறது. தோளிலே அரளி மாலை, மார்பில எருக்கமாலை; இடையிலே கந்தல் துணி; அதனோடு இலைகளையும் சேர்த்துக் கட்டியிருக்கிறான். உடம்பெல்லாம் சாம்பல்; அதனோடு சந்தனம். என்ன என்னவோ உளறுகிறான். ஒரு சமயம் அழுகிறான்; ஒரு சமயம் விழுகிறான்; அரற்றுகிறான்; தொழுகிறான்; இப்படி வரும் பைத்தியத்தைச் சுற்றிச் சிலர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.


மற்றோரிடத்தில் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருக்கும் பேடி ஒருவன் போகிறான். அவனைச் சுற்றிப் பத்துப் பேர்; இந்திர விழாவுக்காக வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் பூம்புகாரிலுள்ள அழகிய மாளிகைகளின் ஓவியங்களைக் கண்டு நிற்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் தம் குழந்தைகளை அலங்கரித்து விளையாட்டு வண்டியின் மேலுள்ள யானையின் மீதே ஏற்றி, ‘‘எல்லாரும் வந்து பாருங்கள். முருகன் திருவிழாவை வந்து காணுங்கள்’’ என்று சொல்லி அந்தக் குழந்தைகளின் அழகைக் கண்டு நிற்கிறார்கள். குழந்தைகளின் வாயிலிருந்து அழுது ஒழுகி மார்பிலுள்ள ஐம்படையை நனைக்கிறது. இடையில் ஆடையை உடுத்தினார்களேயன்றி, அது பேருக்குத்தான். குழந்தையிடம் மறைக்க என்ன இருக்கிறது?

செவ்வாய்க குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்த மிக்கோவை உடுப்பொடு துயல்வரத்


தளர்நடை நடக்கும் குழந்தைகள் அவர்கள்.

இந்தக் கூட்டத்தினிடையே மணிமேகலை சென்றாள். அவள் அலங்காரமற்ற கோலத்தைக் கண்ட மக்கள், ‘‘இவளைத் தவக்கோலப்படுத்திய தாய் மிகக் கொடியவள். மலர் கொய்ய மலர் வனத்துக்கு இவள் போகிறாள். அங்கு உள்ள அன்னம் இவள் நடையைக் கற்குமோ? சாயலை மயில் உணருமோ? கிளி செஞ்சொல்லைப் பயிலுமோ?’’ என்று ஏங்கினார்கள்.

குரவம், மரவம், குருந்து, கொன்றை முதலிய பல மலர்கள் விரிந்து வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் பாடம் போர்த்ததுவே போலத் தோன்றிய உபவனத்தை அவள் சுதமதியுடன் அடைந்தாள்.

                                                                                                     -‌இன்னும் வரும்....

எழுத்தாக்கம்: அமரர் திரு.கி.வா.ஜ.
 
                         4. தெருவில் காட்சிகள்

சுதமதி சொல்கிறாள்:

‘‘உபவனத்தல் பளிங்கினால் ஆன அறை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே போனவர்களின் உருவம் வெளியே தெரியுமேயன்றி, அவர்கள் பேசும் பேச்சுக் கேட்காது. அந்தப் பளிங்கு மண்டபத்தில் ஒரு பத்ம பீடம் இருக்கிறது. அதன் மேல் அரு‌ம்பை இட்டால் அது மலரும்; மலர்ந்தவை பின்பு வாடுவதில்லை; வண்டு மொய்ப்பதில்லை. அந்த வனத்தில் அன்பும் அருளும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெருங் கொள்கையும் என்றும் ஒழியாத நோன்மையுடைய பகவான் புத்தருடைய ஆணையினால் பலமரங்களும் மலரும். அந்த வனத்துக்குத்தான் உன் மகள் செல்ல வேண்டும். நானு்ம் அவளோடு செல்வேன்.’’

இவ்வாறு சொல்லிய சுதமதி, மணிமேகலையை அழைத்துக் கொண்டு உபவனத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

வழியில் எத்தனை ஆரவாரம்! அதோ ஒரு சமணத் துறவி. கையிலே உறி; அதில் ஒரு பாத்திரம்; மற்றொரு கையில் ஒரு கோல்; ஆடை அணியாத் திருமேனி; நீராடாத கோலம். இப்படிப் போகிறவனைக் கள்ளைக் குடித்து ஆட்டம் போடுகிறவன் ஒருவன் அணுகி, ‘‘இந்த உடம்புச் சிறையில் தடுமாறுகிற சுவாமி, ‌கொழு மடல் தெங்கில் விளையும் தேறலை உண்டு பாரும்; அதன் பயனை நீர் அறிந்தால் பிறகு வேறு ஒன்றிலும் நாட்டம் எழாது!’’ என்று கெஞ்சுகிறான்.

இதோ மற்றொரு கோலம். இவன் கோலமோ, அலங்கோலமோ காணக் காணச் சிரிப்பு வருகிறது. தோளிலே அரளி மாலை, மார்பில எருக்கமாலை; இடையிலே கந்தல் துணி; அதனோடு இலைகளையும் சேர்த்துக் கட்டியிருக்கிறான். உடம்பெல்லாம் சாம்பல்; அதனோடு சந்தனம். என்ன என்னவோ உளறுகிறான். ஒரு சமயம் அழுகிறான்; ஒரு சமயம் விழுகிறான்; அரற்றுகிறான்; தொழுகிறான்; இப்படி வரும் பைத்தியத்தைச் சுற்றிச் சிலர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.


மற்றோரிடத்தில் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருக்கும் பேடி ஒருவன் போகிறான். அவனைச் சுற்றிப் பத்துப் பேர்; இந்திர விழாவுக்காக வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் பூம்புகாரிலுள்ள அழகிய மாளிகைகளின் ஓவியங்களைக் கண்டு நிற்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் தம் குழந்தைகளை அலங்கரித்து விளையாட்டு வண்டியின் மேலுள்ள யானையின் மீதே ஏற்றி, ‘‘எல்லாரும் வந்து பாருங்கள். முருகன் திருவிழாவை வந்து காணுங்கள்’’ என்று சொல்லி அந்தக் குழந்தைகளின் அழகைக் கண்டு நிற்கிறார்கள். குழந்தைகளின் வாயிலிருந்து அழுது ஒழுகி மார்பிலுள்ள ஐம்படையை நனைக்கிறது. இடையில் ஆடையை உடுத்தினார்களேயன்றி, அது பேருக்குத்தான். குழந்தையிடம் மறைக்க என்ன இருக்கிறது?

செவ்வாய்க குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்த மிக்கோவை உடுப்பொடு துயல்வரத்


தளர்நடை நடக்கும் குழந்தைகள் அவர்கள்.

இந்தக் கூட்டத்தினிடையே மணிமேகலை சென்றாள். அவள் அலங்காரமற்ற கோலத்தைக் கண்ட மக்கள், ‘‘இவளைத் தவக்கோலப்படுத்திய தாய் மிகக் கொடியவள். மலர் கொய்ய மலர் வனத்துக்கு இவள் போகிறாள். அங்கு உள்ள அன்னம் இவள் நடையைக் கற்குமோ? சாயலை மயில் உணருமோ? கிளி செஞ்சொல்லைப் பயிலுமோ?’’ என்று ஏங்கினார்கள்.

குரவம், மரவம், குருந்து, கொன்றை முதலிய பல மலர்கள் விரிந்து வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் பாடம் போர்த்ததுவே போலத் தோன்றிய உபவனத்தை அவள் சுதமதியுடன் அடைந்தாள்.

                                                                                                     -‌இன்னும் வரும்....

Monday, July 8, 2013

ஓ ஹென்றியின் கடைசி இலை படக்கதையின் மூன்றாவது பகுதி இங்கே உங்களுக்காக. அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெற உள்ள்து.






ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும்‌ என்னதான் செய்தார்கள்? அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில் புரிந்து விடும்!


ஓ ஹென்றியின் கடைசி இலை படக்கதையின் மூன்றாவது பகுதி இங்கே உங்களுக்காக. அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெற உள்ள்து.






ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும்‌ என்னதான் செய்தார்கள்? அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில் புரிந்து விடும்!


Wednesday, July 3, 2013

அமரர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிறந்த ரசனையான எழுத்தில் இந்த சித்திர மேலை தொடர்கிறது...
 
                                               3. கண்ணீர் நனைத்த மாலை

‘‘அடடா! இந்த மாலையைக் கெடுத்து விட்டாயே! ஏன் அம்மா அழுகிறாய்?’’ என்று மாதவி, மணிமேகலையைக் கேட்டபடியே அவள் கண்ணீரைத் துடைத்தாள். அவள் பேச இயலாமல் விம்மினாள். தன் தந்தையாகிய கோவலனுக்கும் தாயாகிய கண்ணகிக்கும் உண்டான துன்பங்களைச் செவியேற்ற மணிமேகலை அவற்றை நினைத்து வருந்தினாள். அவள் விட்ட கண்ணீர் அப்போது அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர்மாலையை நனைத்து விட்டது.

‘‘ஏன் அம்மா வருந்துகிறாய்? உன் கண்ணீரால் இந்த மாலை தூ்மை இழந்து விட்டதே! நீ போய் புதிய மலர்களைப் பறித்துக் கொண்டு வா’’ என்றாள் மாதவி.

அவர்களுடன் அருகில் பூத்தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி, ‘‘இவளைத் தனியாகவா அனுப்புகிறாய்?’’ என்று கேட்டாள். அவள் மாதவியின் தோழி.

‘‘ஆம்’’ என்றாள் மாதவி.

‘‘நல்ல காரியம் செய்தாய்! இந்த அழகியின் நீல மலர் விழியில் நீர்த் துளிப்பதைக் கண்டால் காமனும் தன் கையில் உள்ள வில்லையும் அம்பையும் போட்டுவிட்டு நடுங்குவானே! இவள் அழகைக் கண்டால் உலகிலுள்ள ஆடவர் என்ன பாடு படுவார்கள் தெரியுமா? அவர்கள் இவளைக் கண்ட பிறகும் அகன்று  போனால் பேடிகளாகத்தான் இருக்க முடியும்.’’

‘‘காவிரிப்பூம்பட்டினத்தில் அப்படியெல்லாம் நடக்குமா?’’

‘‘நன்றாக நடக்கும். என் சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். கேள். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை.’’

‘‘அது என்ன?’’

‘‘நான் கெளசிகன் என்ற அந்தணனுடைய பெண். இப்போது தனியே இப்படி வாழ்கிறேன். அதற்குக் காரணம் நான் தனியாகப் போனதுதான்.’’

‘‘உன் கதையைச் சொல், கேட்கிறேன்.’’


‘‘அன்று ஒரு நாள் - அப்போது நான் இளமையும், எழிலும் பொங்க விளங்கினேன். - பூம்பொழிலில் தனியே மலர் கொய்திருந்தேன். ஊரில் இந்திர விழா நடந்து கொண்டிருந்த காலம். அப்போது மாருதவேகன் என்ற வித்தியாதரன், விழாவைப் பார்க்க இந்த ஊருக்கு வந்திருந்தான். ஊரைச் சுற்றிப் பார்க்கும் போது என் எழில் அவனை வா என்று அழைத்தது. என்னை வலியத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான். நான் அவனுடன் சில காலம் வாழ்ந்தேன். பின்பு அவனே மீ்ண்டும் இந்நகரத்தில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்ாடன். இதே நகரத்தில் நடந்தது இது.’’

‘‘அப்படியா! இது எனக்குத் தெரியாதே!’’

‘‘தெரிந்தவள் நான் சொல்கிறேன். இவளைத் தனியே அனுப்பக் கூடாது. கண்ட இடங்களுக்கும் போகக் கூடாது. மலர் கிடைக்கும் வனங்கள் பல இந்நகரில் உண்டு. இருந்தாலும் எல்லா இடங்களுக்கும் போகக் கூடாது.’’

‘‘ஏன்?’’

‘‘வாவிக்கரையில் இருக்கும் இலவந்திகைச் சோலைக்குப் போனால் அங்கே அரசனைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். உத்தியான வனத்தைப் பூதம் காக்கிறதென்று சொல்கிறார்கள். சம்பாதி வனம், கவேர வனம் என்ற இரண்டிலும் துன்பத்தைச் செய்யும் சிறு தெய்வங்கள் இருக்கும். ஆகையால் புத்தபிரானுடைய அருளாணையால் மலர்கள் மலரும் உபவனம் என்ற வனமே இவள் போவதற்கு உரியது.’’

‘‘அந்த வனம் எத்தகையது?’’ என்று மாதவி கேட்டாள்.

சுதமதி உபவனத்தைப் பற்றிச் சொல்லலானாள்.

                                                                                                   -இன்னும் வரும்....

அமரர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிறந்த ரசனையான எழுத்தில் இந்த சித்திர மேலை தொடர்கிறது...
 
                                               3. கண்ணீர் நனைத்த மாலை

‘‘அடடா! இந்த மாலையைக் கெடுத்து விட்டாயே! ஏன் அம்மா அழுகிறாய்?’’ என்று மாதவி, மணிமேகலையைக் கேட்டபடியே அவள் கண்ணீரைத் துடைத்தாள். அவள் பேச இயலாமல் விம்மினாள். தன் தந்தையாகிய கோவலனுக்கும் தாயாகிய கண்ணகிக்கும் உண்டான துன்பங்களைச் செவியேற்ற மணிமேகலை அவற்றை நினைத்து வருந்தினாள். அவள் விட்ட கண்ணீர் அப்போது அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர்மாலையை நனைத்து விட்டது.

‘‘ஏன் அம்மா வருந்துகிறாய்? உன் கண்ணீரால் இந்த மாலை தூ்மை இழந்து விட்டதே! நீ போய் புதிய மலர்களைப் பறித்துக் கொண்டு வா’’ என்றாள் மாதவி.

அவர்களுடன் அருகில் பூத்தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி, ‘‘இவளைத் தனியாகவா அனுப்புகிறாய்?’’ என்று கேட்டாள். அவள் மாதவியின் தோழி.

‘‘ஆம்’’ என்றாள் மாதவி.

‘‘நல்ல காரியம் செய்தாய்! இந்த அழகியின் நீல மலர் விழியில் நீர்த் துளிப்பதைக் கண்டால் காமனும் தன் கையில் உள்ள வில்லையும் அம்பையும் போட்டுவிட்டு நடுங்குவானே! இவள் அழகைக் கண்டால் உலகிலுள்ள ஆடவர் என்ன பாடு படுவார்கள் தெரியுமா? அவர்கள் இவளைக் கண்ட பிறகும் அகன்று  போனால் பேடிகளாகத்தான் இருக்க முடியும்.’’

‘‘காவிரிப்பூம்பட்டினத்தில் அப்படியெல்லாம் நடக்குமா?’’

‘‘நன்றாக நடக்கும். என் சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். கேள். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை.’’

‘‘அது என்ன?’’

‘‘நான் கெளசிகன் என்ற அந்தணனுடைய பெண். இப்போது தனியே இப்படி வாழ்கிறேன். அதற்குக் காரணம் நான் தனியாகப் போனதுதான்.’’

‘‘உன் கதையைச் சொல், கேட்கிறேன்.’’


‘‘அன்று ஒரு நாள் - அப்போது நான் இளமையும், எழிலும் பொங்க விளங்கினேன். - பூம்பொழிலில் தனியே மலர் கொய்திருந்தேன். ஊரில் இந்திர விழா நடந்து கொண்டிருந்த காலம். அப்போது மாருதவேகன் என்ற வித்தியாதரன், விழாவைப் பார்க்க இந்த ஊருக்கு வந்திருந்தான். ஊரைச் சுற்றிப் பார்க்கும் போது என் எழில் அவனை வா என்று அழைத்தது. என்னை வலியத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான். நான் அவனுடன் சில காலம் வாழ்ந்தேன். பின்பு அவனே மீ்ண்டும் இந்நகரத்தில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்ாடன். இதே நகரத்தில் நடந்தது இது.’’

‘‘அப்படியா! இது எனக்குத் தெரியாதே!’’

‘‘தெரிந்தவள் நான் சொல்கிறேன். இவளைத் தனியே அனுப்பக் கூடாது. கண்ட இடங்களுக்கும் போகக் கூடாது. மலர் கிடைக்கும் வனங்கள் பல இந்நகரில் உண்டு. இருந்தாலும் எல்லா இடங்களுக்கும் போகக் கூடாது.’’

‘‘ஏன்?’’

‘‘வாவிக்கரையில் இருக்கும் இலவந்திகைச் சோலைக்குப் போனால் அங்கே அரசனைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். உத்தியான வனத்தைப் பூதம் காக்கிறதென்று சொல்கிறார்கள். சம்பாதி வனம், கவேர வனம் என்ற இரண்டிலும் துன்பத்தைச் செய்யும் சிறு தெய்வங்கள் இருக்கும். ஆகையால் புத்தபிரானுடைய அருளாணையால் மலர்கள் மலரும் உபவனம் என்ற வனமே இவள் போவதற்கு உரியது.’’

‘‘அந்த வனம் எத்தகையது?’’ என்று மாதவி கேட்டாள்.

சுதமதி உபவனத்தைப் பற்றிச் சொல்லலானாள்.

                                                                                                   -இன்னும் வரும்....